Search This Blog n

16 August 2013

ஏழை - பணக்காரர் இடைவெளியை குறைக்க போகிறாராம் முலாயம்


ஏழை, பணக்காரர்கள் இடையே நிலவும் இடைவெளியை, வளர்ச்சி மூலம் நீக்க வேண்டும்,'' என, சமாஜ்வாதி கட்சித் தலைவர், முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
 உ.பி., தலைநகர் லக்னோவில் நேற்று, சமாஜ்வாதி கட்சி தலைமையகத்தில், தேசிய கொடியேற்றி, முலாயம் பேசியதாவது:பட்டினி சாவே இல்லாத வகையில், புதிய திட்டங்கள் பின்பற்ற வேண்டும். ஏழை, பணக்காரர்களுக்கு இடையே நிலவும் இடைவெளியை, வளர்ச்சியால் நீக்க வேண்டும். கொஞ்சம் பேர், வசதி, வாய்ப்புகளுடன் சுகபோகமாக வாழ்கின்றனர்; லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்; இந்நிலை மாற வேண்டும்.நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளின் கனவுகள், இன்னும் நிறைவேறவில்லை. நாட்டில் அனைவருக்கும், உணவு, உடை, இருப்பிடம் கிடைக்க சபதம் ஏற்போம்.
 "எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும், பாகிஸ்தானை கண்டித்து, பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்' என, பல முறை நான் வலியுறுத்தினேன். நேற்று முன்தினம், அத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது."எல்லையில் இந்தியா அத்துமீறுகிறது' என தெரிவித்து, அதை கண்டித்து, பாகிஸ்தான் பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அதைப் பார்த்து, நம் பார்லிமென்டிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இவ்வாறு, முலாயம் கூறினார்.
 "ஆட்சிக்கு வரும் முன்னர் வரை, "ஏழை, பணக்காரர்கள் இடைவெளியை குறைப்போம்' என கூறும் அரசியல்வாதிகள், ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த அறிவிப்பை மறந்து விடுவர். உத்தர பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த பிறகும், சமாஜ்வாதி தலைவர் முலாயம், இந்த கோஷத்தை மறக்காமல் கூறியது, ஆட்சி, அதிகாரம் அவர் கையில் இல்லை; மகன் அகிலேஷ் கையில் இருப்பதை காட்டுகிறது போலும்' என, கூட்டத்தில் சிலர் முணுமுணுத்தனர்
 

0 கருத்துகள்:

Post a Comment