Search This Blog n

25 August 2013

சூடுபிடிக்கும் அயோத்தி விவகாரம்! -தடையை மீறி இன்று .


அயோத்தியில் தடையை மீறி பேரணி செல்லப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளதால் உ.பி.யில் பதற்றம் நிலவுகிறது. பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஏராளமான தொண்டர்களும் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநி லம் அயோத்தியில் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பிரச்னைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்டது. அங்கு ராமர் கோயில் கட்ட பா.ஜ.வும் இந்து அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ராமர் கோயில் கட்டக்கோரி கோசி பரிக்ரமா யாத்திரை என்ற பெயரில் அயோத்தியில் இன்று பேரணி தொடங்கப்படும் என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்தது.
இந்த பேரணி பஸ்தி, பராய்ச், அம்பேத்கர் நகர், கோண்டா, பரபங்கி ஆகிய மாவட்டங்கள் வழியாக 300 கி.மீ. தூரம் சென்று செப்டம்பர் 13ம் தேதி மீண்டும் அயோத்தி வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டது. .இந்த பேரணிக்கு அரசு தடை விதித்தது. ஆனால், தடையை மீறி பேரணி இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் போலீசாரும் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பைசாபாத், கான்பூர், ஆக்ரா உள்ளிட்ட பல பகுதிகளிலும் 350க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரிஷத் அமைப்பின் தலைவர்களான பிரவீன் தொகாடியா, ராம்விலாஸ் வேதாந்தி ஆகியோருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment