Search This Blog n

31 August 2013

மகள்களையே விபச்சாரத்திற்கு தள்ளிய தாய்க்கு ஜெயில்!!


தமிழ்நாட்டில் பெற்ற மகள்களையே பாலியலில் தொழிலில் ஈடுபடுத்திய தாயாருக்கு 41 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு புதுவையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் தனது மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ சென்னையில் வைத்து சி.பி.சி.ஐ.டி. பொலிசாரால் கைது செய்யப்பட்டார். ஜெயஸ்ரீக்கு உதவிய புரோக்கர்கள் ஆனந்த், கர்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக சென்னை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. 7 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அந்த தீர்ப்பில், தான் பெற்ற மகள்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய ஜெயஸ்ரீ இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தலா 10 ஆண்டு கால சிறை தண்டனையை 2 முறை அனுபவிக்க வேண்டும்.
மேலும் விபச்சார தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா 7 ஆண்டு சிறை தண்டனையை 3 முறை அனுபவிக்க வேண்டும். மொத்தமுள்ள 41 ஆண்டுகால சிறை தண்டனையையும் 10 ஆண்டுக்குள் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
மேலும் புரோக்கர்களாக செயல்பட்ட ஆனந்த், கர்ணன் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

0 கருத்துகள்:

Post a Comment