Search This Blog n

30 August 2013

கற்பழிப்பு: சோனியா-ராகுல் மீது குற்றச்சாட்டு


ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு, ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த உ.பி. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜோத்பூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்காக நாளை ஆஜராகாவிட்டால் அவரை கைது செய்ய போலீசார் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், தன் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் பின்னணியில் காங்கிரஸ் இருப்பதாக கூறி வந்த ஆசாராம் பாபு, இன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு வருகை தந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
‘எனக்கு எதிரான வழக்கின் பின்னணியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இருக்கிறார்கள். அவர்களின் அறிவுறுத்தல்களின்படி அனைத்தும் நடப்பதாக மக்கள் கூறுகின்றனர்” என்றார்.
ஆசாராம் பாபு இவ்வாறு கூறுவது துரதிர்ஷ்டவசமான குற்றச்சாட்டு என்றும், இதற்காக அவர் நாட்டு மக்களிடமும், சோனியாவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷித் ஆல்வி வலியுறுத்தினார்

0 கருத்துகள்:

Post a Comment