Search This Blog n

30 August 2013

பயங்கரவாதி யாசின் பத்கல் பிடிபட்டது எவ்வாறு?


இந்தியன் முஜாஹிதீன் தலைவர் யாசின் பத்கலை மிகப் பிரமாதமாக திட்டம் போட்டு பிடித்துள்ளது ஐபி எனப்படும் மத்திய உளவுப்பிரிவு.

நேபாளத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பத்கலை, மிகத் துல்லியமாக கண்டுபிடித்து உள்ளூர் பொலிசாரின் உதவியுடன் தூக்கியுள்ளது ஐபி.
இந்த அதிரடி வேட்டையில் நேபாள பொலிசாருடன் சேர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் வீரர்களும், பீகார் பொலிசாரும் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாகவே ஐபி, பத்கலைப் பிடிப்பதற்கான திட்டத்தை தீவிரமாக வகுத்து வந்துள்ளது.
பத்கல் நேபாளத்தில் ஒரு வீட்டில் தங்கியிருக்கும் தகவலை உறுதிப்படுத்திக் கொண்ட ஐபி குழுவினர் பீகார் பொலிஸ் தேசிய புலனாய்வு ஏஜென்சியினர், நேபாள பொலிஸ் குழுவினருடன் இணைந்து பத்கல் பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு அவனை மடக்கியுள்ளனர்.

அதன் பின்பு அவனை மோத்திஹரி என்ற இடத்திற்குக் கொண்டு வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது புனேவில் 2010ல் நடந்த குண்டுவெடிப்பு, மும்பையில் 2012ல் நடந்த குண்டு வெடிப்புச்சம் பவங்களுக்குத்தானே

காரணம் என்பதை பத்கல் ஒத்துக் கொண்டுள்ளானாம்.
ஆனால் சமீபத்தில் பீகார் மாநிலம் புத்தகயாவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தனக்குத் தொடர்பு இல்லை என்று பத்கல் தெரிவித்துள்ளான்.
மேலும் இன்று டெல்லிக்கு பத்கல் கொண்டு வரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

0 கருத்துகள்:

Post a Comment