Search This Blog n

09 August 2013

மனைவியை பொலிசார் ஏன் கைது செய்யவில்லை:

:
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பிணையில் விடுதலை ஆனவுடன் அவருக்கு போன் செய்த பார்த்திபன் அவரை சிரிக்க வைப்பதற்காக ஆறுதல் செய்தி ஒன்றை கூறியுள்ளார்.
திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் செக்ஸ் தொல்லை காரணமாக கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.
பிணையில் வெளிவந்த அவருக்கு நடிகர் பார்த்திபன் போன் செய்து ஆறுதல் கூறியுள்ளார்.
அப்போது ஜேம்ஸ் வசந்தன் தான் கைது செய்யப்பட்ட விதத்தை பார் த்திபனிடம் கூறுகையில், தன் வீட்டிற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் தன்னை கைது செய்ய வந்தது தெரியாமல் தன்னுடைய சவுண்ட் ஸ்டுடியோவை பொலிசாருக்கு சுற்றி காண்பித்ததாகவும் பின்பு தன் மனைவியிடம் அவருக்கு டீ கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டாராம்.
டீயை குடித்த பின்பு பொலிசார் சாரி ஜேம்ஸ்வசந்தன், நான் உங்களை கைது செய்ய வந்திருக்கின்றேன் என்று கூறி தன்னை அதிர்ச்சியடைய செய்ததாக கூறியுள்ளார்.
இதனை கேட்ட பார்த்திபன், அவர் உங்கள் மனைவியை கைது செய்வதற்கு பதில் உங்களை கைது செய்துவிட்டார் என நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு ஜேம்ஸ் வசந்தன் மேலும் அதிர்ச்சியாகி ஏன் என்று பார்த்திபனிடம் கேட்டதற்கு, பதிலுக்கு பார்த்திபன் டீ கொடுத்தது உங்கள் மனைவிதானே டீ நன்றாக இல்லையென்றால் உங்கள் மனைவியை தானே கைது செய்திருக்க வேண்டும் என பதிலளித்து தன்னுடைய நகைச்சுவையை வெளிப்படுத்தினாராம்.
இதனைக் கேட்ட ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய கவலையை மறந்து சிரித்துள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment