Search This Blog n

29 August 2013

காவல் நீட்டிப்பு! காரைக்கால் மற்றும் நாகை மீனவர்களுக்கு


ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மற்றும் நாகபட்டினம் மீனவர்களின் சிறை காவல் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற காரைக்கால் மீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இவர்களை விசாரணைக்கு திரிகோணமலை போலீஸாரிடம் இலஙகை கடற்படையினர் ஒப்படைத்தனர்.

அதன்பின், திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மீனவர்களுக்கு நேற்று வரை சிறைகாவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார். இதையடுத்து திரிகோணமலை சிறையில் மீனவர்கள் 31 பேரும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை மீனவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 31 மீனவர்களுக்கும் மூன்றாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி வரை சிறை வைக்க  நீதிபதி உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து 31 மீனவர்களும் திரிகோணமலை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

0 கருத்துகள்:

Post a Comment