Search This Blog n

18 August 2013

ஆடை வாங்குபவர்களுக்கு வெங்காயம் இலவசம்:


வெங்காய விலை உயர்வைக் கருத்தில் கொண்டு காசியாபாத் ஜவுளிக் கடைகளில் ஆடை வாங்குபவர்களுக்கு வெங்காயம் இலவசம் என்ற அதிரடி சலுகையை அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்தள்ளதால் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் தொழிலதிபர்கள்.
உத்தர பிரதேச மாநிலத்தில், காசியாபாத் நகரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் விளம்பரப் பலகையைப் பார்த்து வாடிக்கையாளர்கள் அசந்து போயிள்ளனர்.
வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களோடு இலவச இணைப்பாக வெங்காயத்தைக் கொடுத்து கண்களில் ‘ஆனந்தக் கண்ணீர்' வரவழைக்கிறார்கள்.
அதில் நம்மூர் ஆடித்தள்ளுபடி மாதிரி, இக்கடையில் குறைந்தபட்சம் 2000 ரூபாய்க்கு துணி வாங்குவோருக்கு வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் இலவசம் என எழுதப்பட்டிருந்தது.
இதேபோல் ஜாம்ஷெட்பூரில் உள்ள டீலர் ஒருவர், தனது ஸ்டோரில் கார் மற்றும் லாரி டயர்கள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 5 கிலோ வரை வெங்காயம் இலவசமாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
டெல்லியில் அரசு ஒரு புறம், மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்வதற்காக நகரம் முழுவதும் நடமாடும் வேன்களை அறிமுகம் செய்துள்ளன.
ஆனால் மற்றொரு புறம் வியாபாரிகள் இது போன்ற தந்திரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

0 கருத்துகள்:

Post a Comment