Search This Blog n

28 August 2013

17 நாட்கள் மட்டுமே மனைவியான சிறுமி: அதிர்ச்சியில் கேரளா


கேராளாவைச் சேர்ந்த 17வயது சிறுமி ஒருவர் அரபு ஷேக் ஒருவர் தன்னை கட்டாயத் திருமணம் செய்து பாலியல் தொந்தரவு தந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
கோழிக்கோட்டில் உள்ள ஒரு அனாதை இல்லத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த யூலை மாதம் ஐக்கிய அரபு குடியரசு நாட்டை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.
பின்பு இவர்கள் இருவரும் தேனிலவு கொண்டாட இரண்டு வாரம் காலம் கோழிக்கோடு மற்றும் குமாரகம் சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுள்ளனர்.
அதன்பின்பு அந்த நபர் துபாய் சென்றுவிட்டார். ஆனால், தன் விருப்பத்திறகு மாறாக திருமணம் நடந்ததாகவும், தன்னை திருமணம் செய்த நபர், கோழிக்கோடு மற்றும் குமாரகத்திற்கு அழைத்துச் சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அந்த சிறுமி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் தனது மகளுக்கு அனாதை இல்லத்தில் உள்ளவர்கள், கட்டாய திருமணம் செய்து வைத்தனர் என்று கூறி அந்த சிறுமியின் தாயார், பொலிசில் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், வறுமை காரணமாக ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட எனது மகள் படிக்க ஆசைப்பட்டாள்.
ஆனால், அவளது விருப்பத்திற்கு மாறாக அவளை வெளிநாட்டுக்காரருக்கு கட்டாய திருமணம் செய்துவைக்க நிர்வாகத்தினர் வற்புறுத்தியுள்ளனர்" என்று கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் சிறுவர், நீதிச்சட்டப்படி வரதட்சணை கொடுமைக்கு எதிரான குற்றம் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றம் ஆகிய பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு குறித்து முழு விவரத்தை அளிக்க வேண்டும் என்று பொலிசாருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த பெண்களை அரேபியர்கள் திருமணம் செய்துகொள்வது கேரளாவில் உள்ள சில மாவட்ட முஸ்லிம்களிடையே வழக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த ஐக்கிய அரபு குடியரசு நபரின் தகப்பனாரும் முன்பு இதுபோன்று கேரளாவில் திருமணம் செய்து, அவரது மனைவியை கேரளாவிலேயே விட்டுச்சென்றுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது
 

0 கருத்துகள்:

Post a Comment