Search This Blog n

29 August 2013

மணி நேரம்தலைகீழாக செஸ் விளையாடி சாதனை படைத்த


தமிழ்நாட்டில் செஸ் பயிற்சியாளர் ஒருவர் தலைகீழாக ஒருமணிநேரம் தொங்கியபடி செஸ் விளையாடி சாதனை படைத்துள்ளார்.
வில்லிசேரி ஷீரடி சாய்பாபா ஞானத்திருக்கோவில் சக்திபாலா அறக்கட்டளை சார்பில், கோவில்பட்டி சுவாமிவிவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் செஸ் பயிற்சியாளர் தங்கமாரியப்பன் தழைலகீழாக கயிற்றில் தொங்கியபடி செஸ் விளையாடும் சாதனை விழா நடைபெற்றது.
விழாவிற்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமை வகித்தார்.
வில்லிசேரி ஷீரடி சாய்பாபா கோவில் நிறுவனர் வேலுச்சாமி, தொழிலதிபர் துரைராஜ், தலைவர் ராமசந்திரன், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவசங்கரி வரவேற்றார்.
விழாவில் சுவாமிவிவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் செஸ் பயிற்சியாளர் தங்கமாரியப்பன் தழைகீழாக கயிற்றில் தொங்கியபடி 1மணி நேரம் செஸ் விளையாடி சாதனை புரிந்துள்ளார்.
இதனைக்கண்ட பார்வையாளர்கள் வியப்பு அடைந்ததுடன் அவரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
கோவில்பட்டி சுவாமிவிவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் பயிற்சியாளர்கள் மற்றும் அங்கு யோகா பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியர்கள் இதுபோன்ற பல்வேறு வகையான சாதனை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

 

0 கருத்துகள்:

Post a Comment