Search This Blog n

27 August 2013

மரணத்தில் தடவியல் நிபுணரை சேர்க்க முடியாது: உச்சநீதிமன்றம் !

 
இளவரசன் மரணம் தொடர்பான வழக்கில் தடவியல் நிபுணரை நியமிக்க முடியாது என்று சென்னை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை எ உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இது தொடர்பாக திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், ‘‘காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசன் கடந்த யூலை மாதம் 4ம் திகதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
ரயில்வே தண்டவாளம் அருகே அவர் பிணமாக கிடந்தார்.
இளரவசன் மரணம் குறித்து, அரசு நியமித்த நீதிபதி சிங்காரவேல் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த விசாரணை கமிஷனில் தடயவியல் நிபுணர் சந்திரசேகரையும் சேர்க்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தனபாலன், செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றபோது இளவரசன் மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில் தடயவியல் நிபுணர் சந்திரசேகரையும் நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது.
தேவைப்பட்டால் அரசு, அந்த விசாரணை கமிஷனில் தடயவியல் நிபுணர் சந்திரசேகரை நியமித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். மேலும் இத்துடன் இந்த வழக்கை முடிந்து வைப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

 

0 கருத்துகள்:

Post a Comment