Search This Blog n

05 August 2013

வழக்கறிஞர் வீட்டில் சேரன் மகள் தாமினி


இயக்குனர் சேரனின் மகள் தாமினிக்கும், சென்னை சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்ற இளைஞருக்கும் இடையேயான காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த காதல் பிரச்சினையில் தீர்வு காண பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தியதில், தாமினி தந்தை சேரனுடன் செல்ல மாட்டேன் என்று கூறியதால், அவரை மைலாப்புரில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.
இந்த நிலையில் தாமினி யின் காதலன் சந்துருவின் தாயார் ஈஸ்வரி அம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஈஸ்வரி அம்மாள் தாக்கல் செய்த மனு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் பிற்பகல் அந்த மனு விசாரிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.
இவ்வழக்கு விசாரணையின் போது இயக்குனர் சேரன் மகள் தாமினியை, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொலிசார் நேரில் ஆஜர் படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கையை பொலிஸ் கமிஷனர் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவினைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் நீதிபதிகள் வி.தனபால்,வி.டி.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது.
சேரன், அவரது மனைவி மற்றும் மகள் தாமினி, இரு தரப்பு வழக்கறிஞர்களுடன் தனித்தனியாக நடைபெற்ற விசாரணையில், தாமினி தந்தை சேரனுடன் செல்ல விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.
பின்பு இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அதுவரை தாமினி மூத்த வழக்கறிஞர் என்.ஜி,ஆர் பிரசாத் வீட்டில் தங்கும்படி உத்தரவிட்டுள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment