This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

29 January 2014

ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்

தமிழக – இலங்கை இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு மீனவர்களும் எவ்வித நிபந்தனைமின்றி விடுவிப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து ராமேஸ்வரம் விசைப் படகு மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டிருந்த தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.அவர் இன்று புதன்கிழமை முதல் கடலுக்குச் செல்வதாக அறிவித்துள்ளனர்.கடந்த 21 ஆம் திகதியன்று  ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்திலிருந்து 700 க்கும் மேற்பட்ட...

26 January 2014

பத்ம விருதுகள்! கமல்ஹாசன், வைரமுத்து உள்பட 127 பேருக்கு

 நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், விளையாட்டு வீரர்கள் லியாண்டர் பயஸ், யுவராஜ் சிங், நடிகை வித்யா பாலன் உள்ளிட்ட 127 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. பாரத ரத்னா விருதுக்கு இரு மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்....

பாதுகாவலரின் அதிரடி - கோடிக்கணக்கான பணம் தப்பியது

பெங்களூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் பெண் அதிகாரியை கொடூரமாக கத்தியால் வெட்டி, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பபவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏடிஎம் மையங்கள் மற்றும் வங்கிகளில் பாதுகாப்பு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், அரியானா மாநிலம் ரோட்டக் மாவட்டம் கானோர் கிராமத்தில் உள்ள ஸ்டேட் வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்களில் ஒருவன் மட்டும்...

24 January 2014

மாணவியின் சோக கதை அன்று படிப்பில் முதலிடம் இன்று

 : வறுமையிலும் மாநில அளவில் சிறப்பு தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்று சாதித்த மாணவி ஒருவர் தற்போது கொலைகாரியாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அவனியாபுரம் மூணுமாடி காலனியைச் சேந்தவர் தங்கவேலு என்ற பெண்மணி. இவரது மகன் செல்வக்குமார். இவருக்கு கலையரசி என்பவருடன் சென்ற வருடம் திருமணம் நடைபெற்றது. கலையரசின் தங்கைதான் கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் சிறப்பு தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்ற தங்கரத்தினம். கலையரசி, தங்கரத்தினத்தின்...

கவர்ச்சிப் போராட்டம் நடத்தும் கெஜ்ரிவால்

கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கெஜ்ரிவாலை விட நல்லாட்சி தருவார் என்று உத்தவ் தாக்கரே கிண்டல் செய்துள்ளார். சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்ச்சியான போராட்டத்தை நடத்துவதாக அக்கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெல்லி மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க அரவிந்த் கெஜ்ரிவாலை விட கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த்தே பொருத்தமானவராக இருப்பார். திரைப்படங்களில் சாதாரண...

22 January 2014

ஆந்திர மாநில எம்.பியான நடிகை விஜயசாந்தி,

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ், தனது முதுகில் குத்தினார் என்று கூறியுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த நடிகை விஜயசாந்தி மெதக் தொகுதி எம்.பி.யாக உள்ளார். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்த அவர் தலைவர் சந்திரசேகர் ராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கினார். சில மாதங்களுக்கு முன்பு அவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். இதனால், அவர் காங்கிரசில் சேரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த...

ரயில்வே கட்டணம் உயர்கிறது

ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டதால், ரயில்வே கட்டணம் உயர்கிறது. ரயில் கட்டணம் கடந்த பல ஆண்டுகளாக மிக அதிக அளவில் உயர்த்தப்படவில்லை. இதனால் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. ரயில்வேக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிகட்ட கட்டண ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்த பரிந்துரைக்கு நேற்று மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் இனி அடிக்கடி ரயில் கட்டணத்தை...

21 January 2014

டாய்லெட் இருக்கு ஆனா இல்லை! இது பள்ளியின் கணக்கு

சேலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்டிடம் கட்டப்படாமலேயே, கட்டியதாக கணக்கு காட்டியது ஆய்வில் தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் அழகாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், அழகாபுரம், ரெட்டியூர், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 2010-11ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில், நான்கு கழிப்பறை, "யூனிட்' அமைக்க, தலா, 35,000 ரூபாய் வீதம், 1.40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரு...

கணவரின் சம்பளம் எவ்வளவு? அறியும் உரிமை மனைவிக்கு உண்டு

அரசுப் பணியில் உள்ள கணவரின் ஊதியத்தை அறிந்துக் கொள்ள மனைவிக்கு முழு உரிமை உண்டு என்று மத்திய தகவல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. டெல்லி அரசின் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் தனது கணவரின் ஊதிய விவரங்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஜோதி ஷெராவத் என்பவர் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஊதிய விவரங்களை ஜோதிக்கு அளிக்கக்கூடாது என்று அவரின் கணவர் எழுத்துபூர்வமாக கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து ஊதிய விவரங்களை அளிக்க டெல்லி உள்துறை...

20 January 2014

முதலமைச்சரை கடத்த தீவிரவாதிகள் திட்டம்

 டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை கடத்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறையில் உள்ள தங்கள் அமைப்பைச் சேர்ந்த யாசின் பட்கலை வெளியில் கொண்டுவருவதற்காகவே கேஜ்ரிவாலைக் கடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாகக் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, உளவு அமைப்புகளிடமிருந்து தங்களுக்கு ரகசிய தகவல் வந்துள்ளதாக டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி காவல் துறையின்...

தாயின் காதலுக்கு ஆப்பு வைத்த மகள்

பெற்ற தாய் வேறொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது பெருத்த அவமானத்தை ஏற்படுத்துவதாக மகளே பொலிசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி என்னும் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில், நான் எனது தாய், தந்தை, தம்பி என சந்தோஷமாக சென்று கொண்டிருந்த எங்களது குடும்ப வாழ்க்கையில் வாலிபர் ஒருவர் குறுக்கிட்டார். எனது தாயுடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்தி...

19 January 2014

ராகுலுக்கு உதவ களமிறங்கும் ப்ரியங்கா

ராகுல்காந்திக்கு உதவியாக ப்ரியங்கா காந்தியை களம் இறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தேசிய கட்சியான பாரதீய ஜனதா நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்கனவே அறிவித்து விட்டது. இதன் பயனாக 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. நரேந்திர மோடியின் செல்வாக்கால் காங்கிரஸ் மிரண்டு போனது. இதனால் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவிக்கும்...

காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்ற பெண்! நடந்தது என்ன?

 இணையதள காதலனை சந்திக்க போலி பாஸ்போர்ட் மூலம் பாகிஸ்தான் சென்ற குஜராத் பெண் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நகிதா ரமேஷ் (20), இவருக்கும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் வசிக்கும் அசார் என்பவருக்கும் இணையதளம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அசார் மீது காதல் வசப்பட்டார் நகிதா. இதனைத் தொடர்ந்து காதலனை பார்ப்பதற்காக தோகாவில் இருந்து விமானத்தில் லாகூர் சென்றுள்ளார். அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்...

சுனந்தா புஷ்கரை உயிருடன் பார்த்த தரூர் உதவியாளர்

சுனந்தா புஷ்கர் மரண விசாரணையில் திடுக்கிடும் தகவல் அம்பலமாகியுள்ளது. மர்மமான முறையில் மரணமடைந்த சுனந்தா புஷ்கர், அவரது கணவரும்  மத்திய அமைச்சருமான சசி தரூர் ஹோட்டல் அறையை விட்டு வெளியே சென்ற பிறகு உயிருடன் இருந்ததாகவும், அவரை உயிருடன், தரூரின் உதவியாளர் நாராயண் சிங் பார்த்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. &nbs...

14 January 2014

மாணவியுடன் பேஸ்புக் நட்பு வைத்திருந்த மாணவன் சுட்டுக்கொலை!

 உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னுடன் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவியுடன் பேஸ்புக்கில் நட்பு வைத்தமைக் காக ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் தொடர்பாக, அதே பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.முசாபர்நகர் அருகே ஷியாம்லியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் மயாங் (17). கடந்த வெள்ளிக்கிழமை மாலை கோச்சிங் சென்டரில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அவனுடன்...

13 January 2014

நிலாவரை.நெற்.இந்தியச்செய்தி : இளைஞர்கள் மத வெறிக்கு எதிராக போராட வேண்டும் -

நிலாவரை.நெற்.இந்தியச்செய்தி : இளைஞர்கள் மத வெறிக்கு எதிராக போராட வேண்டும் -: ஆன்மிகம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்ற எழுச்சிமிக்க இந்தியர் சுவாமி விவேகானந்தர். மேற்...

இளைஞர்கள் மத வெறிக்கு எதிராக போராட வேண்டும் -

ஆன்மிகம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்ற எழுச்சிமிக்க இந்தியர் சுவாமி விவேகானந்தர். மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான இன்றைய கொல்கத்தாவில், 1863-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி விசுவநாத தத்தா, புவனேஸ்வரி தம்பதியரின் மகனாக பிறந்த சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் நடந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கலந்து...

நிலாவரை.நெற்.இந்தியச்செய்தி : ஜெயலலிதாபல மொழிகள் தெரிந்தவர் - பிரதமர் பதவிக்கு?...

நிலாவரை.நெற்.இந்தியச்செய்தி : ஜெயலலிதாபல மொழிகள் தெரிந்தவர் - பிரதமர் பதவிக்கு?...: கோவை சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்துக்கு இன்று வந்த அதன் மாநில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளி...

ஜெயலலிதாபல மொழிகள் தெரிந்தவர் - பிரதமர் பதவிக்கு??

கோவை சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்துக்கு இன்று வந்த அதன் மாநில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– இந்திய பொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு பல கொள்கைகளை வகுத்துள்ளது. அதில் ஒன்று டெரிவேட்யூ என்ற விதியாகும். இந்த கொள்கையால் வங்கி மூலம் ஏற்றுமதி செய்யும் முறையில் சுமார் ரூ.200 லட்சம் கோடி மோசடி நடந்துள்ளது. இதில் கோவை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்....

10 January 2014

ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் :

தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2012-2013 ஆம் ஆண்டிற்கான சிறப்பு போனஸ் தொகை மற்றும் கருணைத் தொகையை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட வாரியங்களில், 1965 ஆம் ஆண்டு போனஸ் சட்டத்தின் கீழ் வராத மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் பெறாத கண்காணிப்பு நிலையில் உள்ள ‘ஏ’...

08 January 2014

இந்தியாவில் ரயில் தீ பிடிப்பு; 9 பேர் மரணம்

இந்தியாவில் இன்று புதன்கிழமை அதிகாலை ரயிலொன்றில் தீ பரவியதில் பெண்ணொருவர் உட்பட குறைந்தபட்சம் 09 பேர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மும்பையிலிருந்து மேற்கு மாநிலமான மஹாராஷ்திரா ஊடாக பயணித்துக்கொண்டிருந்த டெஹ்ரடன் அதிவேக ரயிலின் குறைந்தபட்சம் 03 பெட்டிகள் தீ பிடித்தன.  இராண்டாம் வகுப்புப் பெட்டியில் பிடித்த தீயானது விரைவாக அருகிலிருந்த பெட்டிகளுக்கு பரவியதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தீ பிடிப்புக்கான...

05 January 2014

மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்?

கொச்சியில் பெட்ரோநெட் நிறுவனத்தின் ஆலையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை 9-ல் இருந்து 12 ஆக உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 90 சதவீத சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 9 சிலிண்டர்களை மானிய விலையில் பெற அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,  10 சதவீதத்தினர் மட்டுமே மானியம் இல்லாத சிலிண்டர்களை...

04 January 2014

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட் சி காலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 13.8% ஆகக் குறைந்துள்ளது என்று பிரதமர் கூறினார். புது தில்லியில் இன்று செய்தியாளர்களின் சந்திப்பின் போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சாதனைகளை அவர் விளக்கிப் பேசினார். அதில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சியின் போது 9 சதவீத வளர்ச்சி ஏற்பட்டது. கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் மத்திய அரசு பல சாதனைகளை புரிந்துள்ளது. இந்தியாவில்...