Search This Blog n

20 January 2014

தாயின் காதலுக்கு ஆப்பு வைத்த மகள்

பெற்ற தாய் வேறொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது பெருத்த அவமானத்தை ஏற்படுத்துவதாக மகளே பொலிசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி என்னும் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், நான் எனது தாய், தந்தை, தம்பி என சந்தோஷமாக சென்று கொண்டிருந்த எங்களது குடும்ப வாழ்க்கையில் வாலிபர் ஒருவர் குறுக்கிட்டார்.

எனது தாயுடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்தி கொண்ட அவர் அடிக்கடி எங்களது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதனால் எனக்கும், எனது தம்பி மற்றும் தந்தைக்கும் மிகுந்த அவமானம் ஏற்பட்டது.
இதையடுத்து எனது தந்தை வீட்டு முன்பு கமெரா ஒன்றை பொருத்தினார். அதையும் உடைத்து போட்டு விட்டனர் என்றும் எனவே கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தும் எனது தாய் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்
 

0 கருத்துகள்:

Post a Comment