This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

18 July 2014

இந்தியாவில் 1,02,241 இலங்கை அகதிகள்

. இந்தியாவில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 இலங்கை அகதிகள் வசிப்பதாக மக்களவையில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கொடுக்குன்னில் சுரேஷ் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவில் அகதிகளாக ஆப்கானைச் சேர்ந்த 10,340 பேர், மியான்மரை சேர்ந்த 4,621பேர், இலங்கையைச் சேர்ந்த 1,02,241பேர், நாடு இல்லாதவர்களாக...

17 July 2014

தங்கம் மீட்பு ரூ.17 இலட்சம் பெறுமதியான !!

சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு செல்வதற்கு வருகைதந்திருந்த நீர்கொழும்பு மற்றும் பண்டாரகமை ஆகிய பகுதிகளைச்சேர்ந்த இரண்டு பயணிகளிடமிருந்த 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கைப்பற்றியுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்விருவரிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட தங்கம், அரசுடைமையாக்கப்பட்டுள்ளது என்றும் அவ்விருவருக்கும் 35 இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்கொழும்பைச்சேர்ந்த...

15 July 2014

கச்சதீவு வழக்கு: கருணாநிதிக்கு நோட்டீஸ்

கச்சதீவை திரும்பப் பெறக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சதீவை திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அம் மனுவில் கூறப்பட்டு...

06 July 2014

இந்திய மீனவர்கள் 20 பேர் கைது

   இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 20 பேரை தலைமன்னாரில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து 4 படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசலவர்ணகுல சூரிய தெரிவித்துள்ளார்.  கைது செய்யப்பட்ட 20 மீனவர்களையும் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க...

04 July 2014

துவாரக சங்கராச்சாரியார் மீது சாய்பாபா பக்தர்கள் வழக்கு

மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள சீரடியில் இறைவனின் அவதாரமாக, கண்கண்ட தெய்வமாக வீற்றிருந்து சாய்பாபா அருள்பாலித்து வருகிறார். அவர் யார்? அவரது பெற்றோர்கள் யார்? அவர் எங்கிருந்து சீரடிக்கு வந்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. சீரடியில் இந்துக்கள், முஸ்லிம்களின் பணி விடைபெற்று வாழ்ந்த அவர் 1918–ம் ஆண்டு சமாதி ஆனார். அவர் சமாதி ஆலயத்தில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் வழிபட்டு பலன் அடைந்து வருகிறார்கள். இந்த...

02 July 2014

மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்!-

ச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது சட்டத்திற்கு புறம்பானது, செல்லாது. எனவே, கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.கச்சதீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் மீன்பிடி உரிமை தொடர்பாக மீனவர்கள்...