17 October 2018
வாழை இலையில் உணவருந்தியதால் மரணம்
இந்தியாவில் வீடொன்றில் வாழை இலையில் உணவருந்தியதால் ஒட்டு மொத்த குடும்பமே உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், அவர் உணவருந்திய வாழை இலையில் வவ்வால்களில் மூலம் பரவிய வைரஸ் கிருமிகள் இருந்தாகவும், மேலும் வாழை இலையை அவர்கள் நன்கு கழுவாமல் விட்டதாலே இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இனி வாழை இலையை முன் புறம் மட்டும் தண்ணீர் ஊற்றி கழுவமால் இருபுறமும் நன்கு கழுவி விட்டு, உணவருந்தவும் என தெரிவித்துள்ளனர்.
உலகம்,பதுவானவை
21 September 2018
இந்தியாவில் மின்சாரம் மூலம் இயங்கும் கார்கள், பேருந்துகள்
நாளுக்கு நாள் எரிபொருட்களின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் புவி வெப்பமயமாதலுக்கு இந்த எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் முக்கிய காரணம் வகிக்கின்றன.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக உலகில் பலநாடுகள் மின்சாரம் மூலம் இயங்கும் கார்கள், பேருந்துகள் பயன்பாட்டுக்கு
கொண்டுவந்துள்ளன.
இதில், இந்தியாவிலும் முக்கிய தலைநகரங்களில் பட்டரி மூலம் இயங்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் முதல்கட்டமாக 80 பட்டரி மூலம் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கோவையில், 20 பேட்டரி மூலம் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடியாகத்
தெரிவித்துள்ளார்.
கடந்த 2 தினங்களுக்கு முன் இலண்டன் சென்று வந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழகத்தில் பேட்டரி மூலம் பேருந்துகள் இயக்க, அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பட்டரி பேருந்துகளின் இயக்கத்தை
பார்வையிட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ‘புவி வெப்பமயமாதலை தடுக்கவும், காற்று மாசுபடாமல் காக்கவும், உலகம் முழுவதும் பட்டரி பேருந்துகள் இயக்கப்படுவதுபோல் தமிழகத்திலும் கொண்டு வர லண்டனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பட்டரி பேருந்துகளின் இயக்கத்தை பார்வையிட்டேன்.
தமிழகத்தில் பேட்டரி பேருந்துகளை இயக்குவதற்கு ‘பட்டரி சார்ஜிங் நிலையம்’ அமைக்க ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து, தமிழகத்தில் முதல் கட்டமாக தலைநகர் சென்னையில் 80 பட்டரி பேருந்துகளும், கோவையில் 20 பட்டரி பேருந்துகளும் இயக்கப்படும். இதன் காரணமாக காற்று மாசுபடுவதையும், புவி வெப்பமயமாதலையும்
தடுக்க முடியும்.
மேலும், பேருந்து பராமரிப்பு செலவுகள் குறையும். இந்த பட்டரி பேருந்து விலை 2 கோடி ருபாய். இந்த பேருந்தில் 20 இருக்கைகள் இருக்கும். இதில் சுமார் 100 பேர் வரை நின்று கொண்டே பயணம் செல்லலாம்’ எனத் தெரிவித்துள்ளார்
08 August 2018
மகனைக் கொன்று எரித்து தடயங்களை அழித்த தந்தை!
போதை பழக்கதிற்கு அடிமையான மகனை தந்தையே எரித்த கொன்ற சம்பவம் ராமநாதபுரத்தில் அறங்கேறியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் மணிகண்டன். இவர் கஞ்சா, மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் தந்தை பாலசுப்பிரமணியுடன் தகராறும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றும் இரவு வழக்கம் போல
குடித்துவிட்டு போதையில் வந்து தந்தையுடன் மணிகண்டன் தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த தந்தை மகன் மணியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அச்சமடைந்த தந்தை பாலசுப்பிரமணி உறவினர்கள் சிலரை துணைக்கு சேர்த்து நேற்றும் நள்ளிரவில் மணியின் உடலை சுடுகாட்டில் வைத்து எரித்து கொலை செய்த தடயங்களையும் மறைத்துள்ளார்.பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அவர்கள் தந்தை பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். மேலும் அவரது உறவினர்கள் 10 பேரிடம் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
12 July 2018
மோட்டார் சைக்கிளில் தாயின் சடலத்தை சுமந்து சென்ற மகன்!!
ராஜஸ்தானில் பாம்பு கடித்து உயிரிழந்த தாயின் உடலை மகன் சடலப் பரிசோதனைக்காக 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் கட்டி வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள மஸ்தாபூர் என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது தாயார்
குன்வார் பாய்.
சம்பவ தினத்தன்று வீட்டுக்கு வெளியே சென்ற போது, குன்வார் பாயை பாம்பு கடித்த நிலையில் இருந்துள்ளார். இதை கண்ட அவருடைய மகன் அவரை பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். ஆனால், சிறிது நேரத்தில் அவர்
இறந்து விட்டார்.
இதுதொடர்பாக ராஜேஷ் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். பொலிஸார் அவரிடம் குன்வார்பாய் உடலை திகாம்கரில் உள்ள மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு
வரும்படி கூறினார்கள்.
ஆனால், உடலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல பொலிஸார் வாகன வசதி செய்து தர மறுத்து விட்டனர். ராஜேசிடம் வாகன வசதி செய்வதற்கு போதிய பணமும் இல்லை. இதனால் வேறு வழியில்லாமல் தனது தாயின் உடலை தனது மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் கட்டி வைத்து திகாம்கர் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்.
அவரது ஊரில் இருந்து திகாம்கர் 35 கி.மீற்றர் தூரத்தில் உள்ளது. அவ்வளவு தூரத்துக்கு பிணத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதை பலரும் வேடிக்கை பார்த்தனர்.சிலர் இந்த காட்சிகளை கைத்தொலைபேசியில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
10 July 2018
மனைவியை பேருந்து நிலையத்தில் வெட்டி கொன்ற கணவன்
தமிழகத்தின் ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் மனைவியை கணவன் அரிவாளால் வெட்டி கொன்ற சி.சி.டி.வி காட்சி வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவாட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மதீஸ்வரனும் கேரளாவை சேர்ந்த நடனக் கலைஞர்
பிரியாவும் நான்கு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். பெண் குழந்தை பிறந்த
பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கணவனிடம் வளரும் மகளை தன்னிடம் பெற்று தரகோரி பிரியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
. கடந்த 20ம் திகதி கேரளா திரும்ப ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பிரியாவை அவரது கணவர் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
05 July 2018
அரைமணிநேரம் தண்ணீரில் மிதந்து உலக சாதனை படைத்த தமிழ் சிறுவன்
பாலித்தீன் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த யோகாசன முறையில் அரை மணி நேரம் தண்ணீரில் மிதந்தவாறு 11 வயது நிரம்பிய திருவண்ணாமலை சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்
7ஆம் வகுப்பு மாணவன் சிவகுரு. இவர், பாலித்தீன் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக்காக யோகாசனம் மூலம் கின்னஸ் சாதனை
முயற்சியில் ஈடுபட்டார்.
தண்ணீரில் மிதந்துவாறு அரைமணிநேரம் சவாசனம் அல்லது சாந்தியாசனம் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளார்.
புவியை பெருமளவிற்கு மாசுபடுத்தி வரும் பாலித்தீன் ஒழிப்புக்காக அல்லது பயன்பாட்டினை குறைக்க விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் சிறுவன் மேற்கொண்ட முயற்சி பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது.
23:52 05.07.201
03 July 2018
ரோல்ஸ் ராய்ஸ் கார் மணமக்கள் பயணிக்கும் வகையில்
: மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹமீத் கான் என்பவர் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை திருமண ஊர்வலத்தின்போது மணமக்கள் ஒய்யாரமாக
அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைத்துள்ளார். இந்த காருக்கு ராயல்ஸ் வெட்டிங் கார் என பெயர் சூட்டிய அவர், அதிக லாபத்திற்காக இந்த ஏற்பாட்டை செய்யவில்லை, நடுத்தர மக்களும் செல்வந்தர்கள் போல் உணர வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)

























