This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

25 November 2013

ஸ்ருதிஹாசனை தாக்கிய நபரை கைது செய்தது மும்பை பொலிஸ்!


நடிகை ஸ்ருதிஹாசனை தாக்கிய நபரை மும்பை பாந்தரா போலீசார் கைது செய்தனர். தாராவி பகுதியைச் சேர்ந்த அசோக் சங்கர் திரிமுகே என்ற அந்த நபர் புரொடக்‌ஷன் பாயாக பணியாற்றி வருகிறார்.கைது செய்யப்பட்ட அசோக் சங்கர் திரிமுகே, தனது தங்கைக்கு வேலை கேட்பதற்காகவே ஸ்ருதிஹாசனை சந்திக்கச் சென்றதாகவும், பேசிக்கொண்டிருக்கும் போதே ஸ்ருதிஹாசன் கதவை மூட முயன்றதால் தான் அதை தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். தன் செய்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
   
ஆனால் ஸ்ருதிஹாசனோ அந்த நபர் தன்னை கடந்த ஓராண்டு காலத்திற்கு மேலாக துரத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், கடந்த செவ்வாய்க்கிழமை காலை அவரது மும்பை வீட்டில் மர்ம நபரால் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தினால் ஸ்ருதிஹாசன் அந்த வீட்டில் தங்காமல், தனது தோழி வீட்டில் தங்கி வந்தார். போலீசில் புகார்

 கொடுக்காமல் இருந்த ஸ்ருதிஹாசன், நேற்று பாந்தரா போலீசில் புகார் அளித்தார்.ஸ்ருதிஹாசனிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். அசோக் சங்கர் திரிமுகே மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 452, 354, 354D ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு நியாயம் வேண்டும்:


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எழுந்துள்ள பிரச்சினையில் இனியாவது முழு விசாரணை நடத்தி இத்தனை ஆண்டுகள் சிறையிலே தன் இளம் பிராயத்தைச் செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
   
கேள்வி:-ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் வாக்குமூலத்தை மாற்றம் செய்ததாக இந்த வழக்கைப் புலன் விசாரணை செய்த முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புதல் அளித்திருப்பதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

பதில்:-சில குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்பது தான் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நெறியாகும். அந்த அடிப்படையில் தற்போது வெளியாகியுள்ள இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஏடுகளில் காணும்போது, நடந்து முடிந்த வழக்கு விசாரணையிலும், அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பிலும் மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே இனியாவது இதைப்பற்றி முழு விசாரணை நடத்திட அரசு முன்வரவேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இத்தனை ஆண்டுகள் சிறையிலே தன் இளம் பிராயத்தைச் செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி:-வேளாண்துறையில் உர சப்ளை செய்ய டெண்டர் விட்டதில் பேரம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு விட்டதாகச் செய்தி வந்திருக்கிறதே?
பதில்:-தமிழக விவசாயிகளுக்கு நீரில் கரையும் உரங்கள் வழங்க மத்திய அரசு ஆண்டு தோறும் நிதி ஒதுக்குகிறது. இதைக் கொண்டு கரும்பு, வாழை விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் நீரில் கரையும் உரங்கள் வழங்கப்படுகின்றன.

இதற்கான நிதி, மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டு, வேளாண்துறை மூலமாக உரம் இறக்குமதி செய்து சப்ளை செய்வதற்கான 'டெண்டர்' விடப்படவேண்டும். இந்த ஆண்டில் இதற்காக மத்திய அரசு தமிழகத்துக்கு 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. உரம் சப்ளை செய்ய நான்கு மாதங்களுக்கு முன்பு டெண்டர் கோரப்பட்டது.

என்ன 'காரணத்தாலோ' அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து மீண்டும் இரண்டு முறை 'டெண்டர்' கோரப்பட்டு, அவைகளும் முறையான காரணம் தெரியாமலேயே ரத்து செய்யப்பட்டன. தற்போது நவம்பர் 27-ல் நான்காவது முறையாக டெண்டர் கோரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
நான்காவது முறையாவது டெண்டர் உறுதி செய்யப்படுகிறதா என்று பார்ப்போம். ஆனால் இவர்கள் டெண்டர் உறுதி செய்வதற்குள், இந்த ஆண்டு வேளாண்மை முடிந்துவிடும் என்கிறார்கள் விவசாயிகள்.
கேள்வி:-மின் உற்பத்தி பாதிப்பு என்ற செய்தி மட்டும் அன்றாடம் வந்து கொண்டிருக்கிறதே? அந்தத் துறைக்கான அமைச்சர் அதையெல்லாம் கவனிக்கிறாரா இல்லையா?

பதில்:- மின்துறையிலேயே அமைச்சர் கவனிப்பது வேறு ஒரு பணியை, அதை அவர் முறையாகக் கவனித்து வருகிறாராம். 19.11.2013 அன்று வந்த செய்திப்படி, மின் உற்பத்தி பாதிப்பு என்பது வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஏற்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில், இரண்டாவது அலகில் உள்ள நிலக்கரி எடுத்துச் செல்லும் பாதையில் ஓட்டை ஏற்பட்டு, அதை சரி செய்யாமல் அலட்சியமாக விட்ட காரணத்தினால், கொதிகலனுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாய் தீப்பற்றியுள்ளது.

இதன் காரணமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாவிட்டாலும், இரண்டாவது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் இந்தப் பணி சரி செய்யப்பட்டு, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்களாம்.

சட்டமன்றத்தில் மின்துறை அமைச்சருக்குப் பதிலாக நீண்ட நேரம் பதிலளித்த முதல்-அமைச்சர் தமிழ்நாடு விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது தமிழ்நாட்டு ஏடுகளைப் புரட்டினால், தமிழ்நாடு மின் மிகை மாநிலமா? மின் பகை மாநிலமா? என்றுதான் சந்தேகம் வருகிறது.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்
 

சிறுமி ஆருஷியை பெற்றோரே கொலை செய்ததாக சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு!


நாட்டை உலுக்கிய 13 வயது சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் காசியாபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என கூறி உள்ளார். தீர்ப்பை அடுத்து இருவரும் தஸ்னா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீர்ப்பை கேட்டது்ம, தல்வார் கதறி அழுதார். டில்லியில் புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராஜேஷ் தல்வார்-நுபுர் தல்வார் தம்பதி. பல் மருத்துவர்களான இவர்களின் ஒரே மகள் ஆருஷி. பள்ளி மாணவியான ஆருஷி 2008ம் ஆண்டு மே மாதம், தனது அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தார்.
   
இந்த கொலைக்கு வீட்டின் வேலைக்காரர் ஹேம்ராஜே காரணம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் தலைமறைவானதாக கூறப்பட்ட ஹேம்ராஜின் உடல் வீட்டில் மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. கோர்ட்டில் நடத்தப்பட்ட விசாரணையில் தல்வாருக்கு எதிரான நேரடி ஆதாரங்கள் ஏதும் சமர்பிக்கப்படவில்லை.இதனால் இவ்வழக்கை முடிக்கலாம் என, சி.பி.ஐ.கோர்ட்டில் கூறியது. அதை ஏற்க மறுத்த சி.பி.ஐ. கோர்ட், இந்த வழக்கு குறித்து மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீண்ட விசாரணைக்கு பின், தல்வார் தம்பதியரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மகள் ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகியோரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, இருவரும் சேர்ந்து, மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தி மற்றும் கோல்ஃப் மட்டை ஆகியவற்றை பயன்படுத்தி ஆருஷியையும், ஹேம்ராஜையும் கொலை செய்தது தெரியவந்தது.
ராஜேஷ் தல்வார் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2 மாத விசாரணைக்கு பின், அவருக்கு எதிராக ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜராவதை தொடர்ந்து

தவிர்த்து வந்ததால் நுபுர் தல்வார் 2012ம் ஆண்டு கோர்ட் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஐந்தரை ஆண்டுகள் நடத்தப்பட்ட இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி சியாம்லால், தண்டனை குறித்த அறிவிப்பு நாளை அறிவிக்கப்படும் என்று கூறினார்.
 

23 November 2013

இலங்கையில் ஆடுகளம் நடிகர் கைது


இலங்கையில் விசா விதிகளை மீறிய குற்றத்திற்காக நடிகர் ஜெயபாலன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மாங்குளத்தைச் சேர்ந்தவர் பிரபல கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலன். இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டை காரணமாக புலம் பெயர்ந்து சென்னையில் வசித்து வருகிறார்.
மேலும் வெயில், ஆடுகளம், பாண்டிய நாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இவரது தாயாரின் சமாதி இலங்கை மாங்குளம் பகுதியில் உள்ளது. தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக அவர் நேற்று இலங்கை சென்றார்.
மாங்குளம் சென்ற அவர் தன் தாயார் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது நேற்று மாலை 5 மணி அளவில் கவிஞர் ஜெயபாலனை இலங்கை பொலிசார் சுற்றி வளைத்தனர். விசா விதிகளை மீறி விட்டதாக கூறி அவரை கைது செய்தனர்.
கவிஞர் ஜெயபாலன் சுற்றுலா விசாவில் இலங்கை சென்றிருந்தார். எந்த அடிப்படையில் அவர் விசா விதிகளை மீறினார் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதை இலங்கை பொலிசாரின் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன் பிறகு ஜெயபாலனை சிங்கள அதிகாரிகள் மாங்குளத்தில் இருந்து வவுனியாவுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இலங்கையில் தமிழர்–  சிங்களர் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக சிங்கள உயர் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்
 

இவர்தான் ஸ்ருதியை தாக்கியவராம்! புகைப்படம் வெளியானது


நடிகை ஸ்ருதி ஹாசனை வீடு புகுந்து தாக்கிய மர்ம நபரின் புகைப்படமானது அங்கிருந்த ரகசிய கமெராவில் பதிவாகியுள்ளது.
மும்பை பாந்த்ரா கடற்கரையோர பகுதியில் நடிகர், நடிகைகள் அதிகம் வசிக்கும் பிரபலமான அடுக்கு மாடி குடியிருப்பில் 6-வது மாடியில் ஸ்ருதியின் வீடு உள்ளது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை காலை அவரது மும்பை வீட்டில் வைத்து தாக்கப்பட்டார்.
முதலில் இந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்காத ஸ்ருதிஹாசன் நேற்று முன்தினம் இரவு பாந்திரா பொலிசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனிடம் அத்துமீறி நடந்து கொண்டது யார் என்பது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில ஸ்ருதிஹாசன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு பொலிசார் நேரில் சென்று விசாரித்தனர். அங்கு வரும் வெளியாட்கள், பாதுகாவலர் அறையில் இருக்கும் நோட்டில் தங்களது பெயர் விவரங்களை எழுதி வைப்பது வழக்கம்.அந்த நோட்டில் பார்த்த போது ஸ்ருதிஹாசனை பார்க்க வந்தது அசோக் ஜெயின் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அங்கிருந்த ரகசிய கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் குறிப்பிட்ட நேரத்தில் வந்த நபர் அசோக் ஜெயின் என்று தனது பெயரை பதிவு செய்து இருந்தது தெரியவந்தது. அந்த நபரை அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலர்கள் அடையாளம் காட்டினர்.
மேலும் அந்த நபர் சிறிது நாட்களுக்கு முன் ஸ்ருதி ஹாசன் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு

அரங்குகளிலும் ஸ்ருதியைத் தொட முயற்சித்து விரட்டியடிக்கப்பட்டுள்ளான். படப்பிடிப்பு குழுவினரிடம் கண்காணிப்பு கமெரா வீடியோவைக் காட்டியபோது, அவர்களும் அந்த வாலிபரை அடையாளம் காட்டினர்.

இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது அத்துமீறல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
 

22 November 2013

மனைவியின் துன்புறுத்தல்கள் குறித்து சென்னையில் 5000


ஆண்கள் புகார்; மனைவி தாக்குவதாக 10% புகார், மனைவிக்கும் பிற ஆண்களுக்கும் தொடர்பு 10%
சென்­னையில் இவ்­வ­ருடம் மாத்­திரம் மனை­வி­மார்­களின்  கொடு­மைகள், துன்­பு­றுத்­தல்கள், தொடர்­பாக சுமார் 5000 ஆண்கள் முறைப்­பாடு செய்­துள்­ள­தாக  ஆண்­களை பாது­காப்­ப­தற்­கான அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சர்­வ­தேச ஆண்கள் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்ட நிலையில், இத்­த­கவல் வெளி­யா­கி­யுள்­ளது.

இந்­தி­யாவில் சென்­னை­யி­லி­ருந்­துதான் அதிக முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தாக அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ ளது.
சென்­னையில் கிடைத்த 400 முறைப்­பா­டு­களில் விவா­க­ரத்­துக்­கான கோரி க்கை விடுக்­கப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை, மும்­பையில் இவ்­வ­ருடம் சுமார் 2000 ஆண்கள் தமது மனை­வியின் துன்­பு­றுத்தல் தொடர்­பாக முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

ஈகோ மோதல்கள் முதல் பாலி யல் சித்­தி­ர­வதை வரை பல்­வேறு வகை­யான விட­யங்கள் தொடர்­பாக இம்­மு­றைப்­பா­டுகள் உள்­ளன.
முறைப்­பாடு செய்­த­வர்­களில் 20 சத­வீ­த­மானோர், கூட்­டுக்­கு­டும்­ப­மாக வாழ்­வது குறித்து மனை­விமார் சண்­டையை ஆரம்­பிப்­ப­தாக கூறி­யுள்­ளனர்.

சென்­னையில் முறைப்­பாடு செய்த 5000 ஆண்­களில் சுமார் 500 பேர் மனைவிமார் தம்மை தாக்­கு­ வ­தாக முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

மேலும் 10 சத­வீ­த­மான ஆண்கள் தமது மனை­விமார் அனைத்து மகளிர் காவல் நிலை­யத்தில் தம்மை பற்றி பொய்­யான முறைப்­பா­டு­களை செய்­வ­தாக கூறி­யுள்­ளனர்.  முறைப்­பாடு செய்­த­வர்­களில் 10 ஆண்கள்  தன்­னிடம் மனைவி பாலியல் திருப்தி காணாமல் திரு­ம­ணத்­துக்குப் புறம்­பான பாலியல் உற­வு­களில் ஈடு­ப­டு­வ­தாக கூறி­யுள்­ளனர்.

தான் இரவுநேர கட­மைக்கு சென்­றபின் தனது மனை­வியும் தனது சகோ­த­ரனும் பாலியல் உற வில் ஈடு­ப­டு­வ­தா­கவும் இதனால் மனை­வி­யுடன் தான் வாழ­வி­ரும்­ப­வில்லை எனவும் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யாவில் 8 நிமி­டங்­க­ளுக்கு ஒரு தடவை திரு­ம­ண­மான ஆண்கள் திரு­மண வாழ்க்கை அல்­லது பணப்­பி­ரச்­சி­னைகள் கார­ ண­மாக தற்­கொலை செய்­து­கொள்­வ­தாக இந்­தி­யாவின் தேசிய குற்­ற­வியல் பதிவு திணைக்­கள புள்­ளி­வி­ப­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

சமூக செயற்­பாட்­டா­ள­ரான எஸ்.சயீட் அலி கருத்துத் தெரி­விக்­கையில், "இந்­திய சமூ­கத்தில் ஆண்கள் பல­வீ­னத்தை வெளிப்­ப­டுத்­து­வ ­தற்கோ, முறைப்­பாடு செய்வதற் கோ, உதவி கோருவதற்கோ சொற்ப வாய்ப்புகளே கிடைக் கின்றன. எம்மிடம் முறைப்பாடு செய்யவரும் பெரும்பலான ஆண்கள் நீண்டகாலமாக மனை வியினால் துன்புறுத்தல்கள், தொல்லைகளுக்குள்ளானதாக தெரிவித்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.



பொலிஸாருக்கு சார்பாக செயற்படுவதாகக் கூறி, நிந்தவூரில் தம்பதி மீது வாள்வெட்டு, தாக்குதல்!



நிந்­தவூர் பிர­தே­சத்தில் மோட்டார் சைக்­கிளில் சென்ற இனந்­தெ­ரி­யாதோர் வீடு ஒன்றில் உள்­நு­ழைந்து கணவன்இ மனைவி மீது வாள்­களால் வெட்டி தாக்­கி­விட்டு தப்­பி­யோ­டி­யுள்ள சம்­பவம் ஒன்று நேற்று முன்­தி­ன­மி­ரவு இடம்­பெற்­றுள்­ளது. இதில் படு­கா­ய­ம­டைந்த இரு­வரும் வைத்­தி­ய­சா­லையில்
 அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

தப்­பி­யோ­டி­ய­வர்­களின் மோட்­டார்­சைக்கிள் ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ள­தாக சம்­மாந்­துறை பொலிஸார் தெரி­வித்­தனர்.

நிந்­தவூர் மீரா­நகர் பிர­தே­சத்தில் உள்ள குறித்த வீட்டில் சம்­ப­வ­தி­னத்­தன்று இரவு 11.15 மணி­ய­ளவில் மோட்டார் சைக்கில் ஒன்றில் சென்ற இருவர் உள்­நு­ழைந்து பொலி­ஸா­ருக்கு சார்­பாக செயற்­ப­டு­வ­தாக கூறி கணவன் மனைவி இரு­வ­ரையும் வாள்­களால் வெட்டி மீது தாக்­கி­யுள்­ளனர்  இதன்­போது அவர்கள் கூக்­கு­ர­லை­யிட்டு அய­வர்கள் சென்­ற­போது தாக்­குதல் நடாத்­தி­ய­வர்கள் மோட்­டார்­சைக்­கிளை விட்­டு­விட்டு தப்­பி­யோ­டி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து கணவன் மனைவி இரு­வ­ரையும்  சம்­மாந்­துறை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தி­கப்­பட்­டுள்­ள­துடன் தாக்­குதல் நடாத்­தி­ய­வர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.