Search This Blog n

25 January 2015

நிவாரண நிதியாக ரூ.7800 கோடி கோரி வாலிபர் கைது!!!

பீகாரில் ஒபாமாவிற்கு கடிதம் எழுத முயற்சி செய்ததாக பீகார் கயா பகுதியை சேர்ந்த இனாம் ராஜா வயது 40 என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பீகார் மாநிலம் போதி கயாவில் உள்ள இணையதள மையத்திற்கு இனாம் ராஜா (வயது 40) என்ற வாலிபர் வந்தார்.
அங்கு வந்த இனாம் ராஜா ஒபாமாவிற்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்று கடையின் உரிமையாளரிடம் கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு டெலிபோனில் தொடர்புகொண்டு தெரிவித்தார்.
போலீசார் வருவதற்குள் இனாம் ராஜா ஒபாமாவிற்கு உருது மொழியில் கடிதம் எழுதி வைத்திருந்தார்.அக்கடித்தில் தேசிய நிதியாக 130 டாலர் (இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.7800 கோடி ) அனுப்ப வேண்டும் என்று அக்கடித்தில் குறிப்பிட்டு இருந்தார்.
போலீசார் விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கபட்டவர் என்பது தெரியவந்தது.
இவ்விககாரத்தின் தன்மை கருதி  மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு இனாம் ராஜவை பற்றிய தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளாதா? என போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment