Search This Blog n

31 January 2015

பதஞ்சலி யோகபீடம் நாட்டுக்கு மிகப்பெரிய சேவையாற்றி வருகிறது;

  ஹரியானா முதல்வர் 'திடீர்' புகழாரம் யோகாகுரு பாபா ராம்தேவ் அண்மையில் ஹரியானா மாநிலத்திற்கான பிராண்ட் அம்பாஸிட்டராக அறிவிக்கப்பட்டார். யோகா மற்றும் ஆயுர்வேதத்தை பரப்புவதில் ஹரியானா அரசுக்கு அவருடைய பதஞ்சலி யோகபீடம் 
உதவி புரிவதாக உறுதியளித்தது. 
இந்நிலையில், திடீரென அம்மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார் பதஞ்சலி யோக பீடத்துக்கு புகழாரம் சூட்டினார். அவை பின்வருமாறு:-
இந்தியாவின் கலாச்சார தூண்களாக இருக்கும் யோகா மற்றும் ஆயுர்வேதத்தை உலகம் முழுவதும்
 கொண்டு சேர்த்து வரும் பதஞ்சலி யோக பீடம் நாட்டுக்கு மிகப்பெரிய சேவையாற்றி வருகிறது. ஹரியானா மக்களிடம் யோகாவை இணைப்பதன் மூலம் அவர்களது வாழ்க்கையை வளமானதாகவும், நலமானதாகவும் மாற்ற முடியும்.
 யோகாவும், ஆயுர்வேதமும் மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கும். 
இவ்வாறு கத்தார் தெரிவித்தார். 
ஏற்கனவே, ஹரியானா மாநிலத்தில் யோகாவை பள்ளிகளில் பாடமாக வடிவமைக்கவும், அங்கு யோகசாலைகளை ஏற்படுத்தவும் முதல்வர் கத்தார் யோகா குரு பாபா ராம்தேவ்-வை சந்தித்திருந்தது குறிப்பி்டத்தக்கது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment