Search This Blog n

06 January 2015

புதிய சர்ச்சை கிளம்பியது முதல்வரை காணவில்லையே!

சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொருட்காட்சியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படம் இடம்பெறாமல் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தீவுத்திடலில் 41வது இந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சி கடந்த 3ம் திகதி தொடங்கியது.மின்சார வாரியம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை என்று அரசுத்துறைகள் சம்பந்தமான அரங்குகள் வடிவமைக்கப்பட்டு, அந்தந்த அமைச்சர்களின் புகைப்பட்டங்கள், நலத்திட்டம் வழங்குவது போன்ற புகைப்படங்கள் ஒட்டப்பட்டன.

ஆனால் தற்போதைய முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் புகைப்படங்கள் ஒட்டப்படவில்லை, ஜெயலலிதாவின் புகைப்படங்களே அதிகளவில் இருந்தது, இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக 70 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியின் ஒவ்வொரு நாளும் விதவிதமான கலைநிகழ்ச்சிகள் நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு பொருட்காட்சியை காண வருபவர்களின் எண்ணிக்கை 15 லட்சமாக இருக்கும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment