Search This Blog n

31 January 2015

சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி;துவங்குகிறது

 லெபனான், இலங்கை, நேபால், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஆர்மேனியா, ரஷ்யா, பெலாரஸ், கிரிஸிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஜியார்ஜியா, தஜகிஸ்தான், குவைத், கத்தார், தாய்லாந்து, உகாண்டா, சிரியா உள்ளிட்ட 18 நாடுகள் பங்குபெறும் 29-வது சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி, ஹரியானாவின் சுராஜ்கந்த்-ல் நாளை கோலாகலமாக துவங்குகிறது. 
நாளை முதல் வரும் பிப்ரவரி 15-ந்தேதி வரை தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த மேளா நடக்கிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த அழகிய நளின கைவினைப் பொருட்கள் இடம் பெறுகிறது. அதுமட்டுமல்ல, சத்தீஸ்கரின் பாரம்பரிய நடனமான பாந்தி, ராவத் நச்சா பந்த்வானி, சைத்ரா, சைலா, சூவா உள்ளிட்ட நடனங்களும் இடம்பெறுகின்றன. 
டிக்கெட்டுகளை புக் செய்வதற்காக ஸ்மார்ட்போன்களில் 'Surajkund Mela' என்ற ஆப்ளிகேஷனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 22 டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment