Search This Blog n

28 January 2015

போர் விமானம் விழுந்து நொறுங்கியது விமானி உயிர் தப்பினார்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து மிக்–27 ரக போர் விமானம், உத்தர்லை படை தளத்திற்கு புறப்பட்டது. வழியில் இந்த விமானம், என்ஜின் கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக விமானி பாராசூட் உதவியுடன் குதித்து உயிர் தப்பினார்.
பாகிஸ்தான் எல்லை அருகே நேற்று மாலை 3.10 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது. விமானத்தின் ஒரு பாகம் தீப்பிடித்து எரிந்த நிலையில் மகாபர் கிராமம் அருகே சாலையில் சென்ற மோட்டார்சைக்கிள் மீது விழுந்தது. அதில் சென்ற லூன்சிங் என்பவர் காயம் அடந்தார். மோட்டார்சைக்கிளும் சேதம் அடைந்தது. லூன்சிங் மருத்துவமனையில்
 அனுமதிக்கப்பட்டார்.
தகவல் கிடைத்ததும் விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்றது. காயம் அடைந்த விமானி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாக இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர்
 தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment