This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

29 October 2016

எமது இணையங்களில் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி .நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த 
நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்
தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து 
பரவசம் அடைவர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






27 October 2016

பசுவை விழுங்கிய சுறா மீன்! கமெராவில் பதிவான கொடூர காட்சி

இந்திய பெருங்கடலிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுற்றுலா பயணி ஒருவர் மயோட்டே தீவு அருகே படகில் பயணித்துக்கொண்டிருந்த போது குறித்த காட்சியை கமெராவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
குறித்த வீடியோவில், நடுக்கடலில் 16 அடி புலிச்சுறா ஒன்று பசுமாட்டை விழுங்கி கக்குகிறது. மாட்டின் வயிறு பகுதியில் வெறும் எழும்பு மட்டுமே மிஞ்சியிருக்கிறது.
இந்நிலையில், தரையில் வாழும் மாடு எப்பது கடலில் வந்தது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

15 October 2016

ஜெயலலிதா அஜித்துக்கு போட்ட கண்டிஷன்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மூன்று வாரங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை
 பெற்று வருகிறார்.
இந்நிலையில் அஜித்தை ஜெயலலிதா சந்திக்க விரும்பியதாகவும், தன்னுடைய அரசியல் வாரீசாக அஜித்தை அவர் அறிவிக்கவுள்ளதாகவும் வதந்திகள் பரவின.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் அஜித்தை சந்தித்த ஜெயலலிதா, சண்டைக்காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து நடிப்பதை தவிர்க்கும்படியும், உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அன்பான கண்டிப்புடன் அறிவுரை கூறினாராம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



12 October 2016

இலங்கை அகதிகளின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவது கடினமாகவுள்ளது.

தென்னிந்தியாவிலிருந்து தமது சொந்த நாட்டிற்குத் திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வாறு திரும்பி வரும் மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான அவசியமான திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் 
போதியளவு நிதி காணப்படவில்லை என இந்தியாவின் அகதி முகாம் ஒன்றில் 10 ஆண்டுகளாகத் தங்கியிருந்து தற்போது இலங்கைக்குத் திரும்பியுள்ள 42 வயதான வெள்ளச்சாமி ஜேசுராஜா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து கூறியதாவது,
இவ்வாண்டு இதுவரை 550 இற்கும் மேற்பட்ட அகதிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டு இலங்கைக்கு திரும்பி வந்த ஈழஅகதிகளின் மொத்த எண்ணிக்கையின் இருபது சதவீதம் மட்டுமேயாகும். இவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை மற்றும் கண்டி போன்ற இடங்களில் மீள்குடியேறியுள்ளனர்.
இலங்கை அரசானது தனது நாட்டிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்களை மீளவும் சொந்த நாட்டிற்கு வருமாறு ஊக்குவிப்பதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடி
யேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் அரசின் இந்தக் கோட்பாடானது போதியளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது. தமது சொந்த நாடான இலங்கைக்கு திரும்பி வரும் பெரும்பாலான குடும்பங்களின் வீடுகள் யுத்தத்தின் போது அழிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
மேலும் எமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்தியாவின் அகதி முகாம் ஒன்றில் தனியொரு அறையினால் மட்டும் கட்டப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்தோம். இதன் காரணமாகவே நாங்கள் அங்கிருந்து வெளியேறி எமது சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்தமைக்கான பிரதான காரணமாகும். எமது பிள்ளைகள் எமது சொந்த நாட்டில் வாழவேண்டும் என நாங்கள் விரும்பினோம் எனவும் தெரிவித்தார். 
இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் நாங்கள் மீன்பிடியில் ஈடுபட்டோம். ஆனால் தற்போது எமது படகுகள் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் நாங்கள் எமது வாழ்வாதாரத் தொழிலில் ஈடுபடமுடியாதுள்ளது என தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

30 September 2016

இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தான் நடிகர், நடிகைகள் இனி நடிக்ககூடாது!

பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் இந்திய திரைப்படங்களில் நடிக்க இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த தீர்மானத்தில், பாகிஸ்தானை சேர்ந்த 
நடிகர் நடிகைகள் இந்திய திரைப்படங்களில் நடிக்கவோ பணியாற்றவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா பாகிஸ்தான் இடையே இயல்பு நிலை திரும்பும் வரை பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் இந்திய திரைப்படங்களில் நடிக்க தடை நீடிக்கும்.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர்களும் இந்திய படங்களுக்கான வேலைகளில் ஈடுபட முடியாது என இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே நிறைவடையும் நிலையில் இருக்கும் படங்களில் பாகிஸ்தான் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுவதில் எந்த தடையும் இல்லை.
ஆனால், இனிமேலும் புதிதாக துவங்கும் படங்களின் வேலைகளில் அவர்கள் பணியாற்ற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதால் இருநாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த தடை கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




இளம்பெண் ஒருவர் பெற்றோர்களுக்கு ஒரு உருக்கமான கோரிக்கையை?

பாலியல் தொழிலாளிக்கு பிறந்து தற்போது மும்பையில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் இந்திய நாட்டு பெற்றோர்களுக்கு ஒரு உருக்கமான கோரிக்கையை
 விடுத்துள்ளார்.
இளம்பெண் ஒருவர் தனது பெயரை குறிப்பிடாமல் வெளியிட்டுள்ள ஒரு தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
இளம்பெண் வெளியிட்ட தகவலின் 
தமிழாக்கம் இதோ...!!
‘மும்பையில் பாலியல் தொழில் நடைபெறும் சிவப்பு விளக்கு பகுதியான Kamathipura நகரில் தான் நான் பிறந்தேன். என்னுடைய தாய் கேரளாவில் இருந்து கடத்தப்பட்டு இங்கு மும்பையில் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுப்படுத்தப்பட்டார்.
ஆனால், மும்பையில் எனது தந்தையை சந்தித்தபோது அவர் மீது ஏற்பட்ட காதல் காரணமாக தனது பாலியல் தொழிலை நிறுத்திவிட்டு வீட்டு வேலைக்கு செல்ல தொடங்கினார்.
எங்களுக்கு சிறிது வருமானம் வந்தாலும் கூட, இந்த காமதிபுரா நகரை விட்டு வெளியேற முடியவில்லை.
நான் வளர்ந்தபோது இச்சமுதாயத்தில் பல்வேறு அவமானங்களையும் பாகுபாடுகளையும் சந்தித்தேன்.
சிவப்பு விளக்கு பகுதியில் இருந்து வரும் கருப்பான சிறுமியான என்னை அனைவரும் கேலி செய்தனர்.
மும்பை பள்ளியில் படித்தபோது என்னுடன் யாரும் பேச மாட்டார்கள். என்னுடன் விளையாடவும் வர மாட்டார்கள். நான் நடந்து போகும்போது ‘ஏய், அங்க பாருங்க ஒரு கருப்பு காக்கா நடந்து போகுது’ என சக மாணவர்கள் என்னை கிண்டல் செய்தனர். இவை அனைத்தையும் 
சகித்துக்கொண்டேன்.
என்னுடைய 10 வயது வரை என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட அறியாதவளாக இருந்தேன். என்னுடைய நிலையை ஒரு ஆசிரியர் தவறாக பயன்படுத்திக்கொண்டார். ஆம், கற்பழிப்பு என்றால் என்ன என்பது கூட தெரியாத அந்த வயதில் ஆசிரியர் என்னை
 கற்பழித்து விட்டார்.
ஒருவர் நமது உடலில் எங்கு தொட்டால் சரியானது, எங்கு தொட்டால் தவறானது என்ற அடிப்படை அறிவை கூட நமது கல்வி நமக்கு கற்றுத்தரவில்லை.
நான் கற்பழிக்கப்பட்டேன் என்பது கூட எனக்கு 16 வயது ஆகும்போது தான் புரிந்தது.
இப்போது என்னுடைய ஒரு குறிக்கோள் வீதி வீதியாக நாடகங்கள் நடத்தி அதன் மூலம் பிள்ளைகளுக்கு என்ன கற்றுத்தர வேண்டும் என்ற விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு ஏற்படுத்துவது தான்.
உடலுறவு என்றால் என்ன? ஒரு ஆண்மகன் எப்படி நம்மிடம் நடந்துக்கொள்ள வேண்டும்? நம்மை தொடுபவர்கள் எந்த எண்ணத்தில் தொடுகிறார்கள்? என்ற அடிப்படை விழிப்புணர்வை இப்போது ஏற்படுத்தி
 வருகிறேன்.
ஆனால், இதுபோன்ற தகவல்களை பிள்ளைகளுக்கு கூறுவது தவறு என இன்றைய பெற்றோர்கள் நினைத்து வருகின்றனர்.
நம்முடையை பிள்ளைகள் மற்றவர்களால் கற்பழிக்கப்படுவதை விட இதுபோன்ற தகவல்களை அவர்களுக்கு கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் சிறந்தது.
அதே சமயம், அழகு என்பது நிறத்தில் இல்லை என்பதையும் நமது பிள்ளைகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். நீங்கள் சிவப்பாக அல்லது கருப்பாகவும் இருந்தாலும் கூட நீங்கள் அழகாக தான் இருக்கிறீர்கள் என்பதை உணர வேண்டும்.
அழகு ஒருபோது தோலின் நிறத்துடன் தொடர்புடையது அல்ல. இதனை அவசியம் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்’. என பெயர் வெளியிடாத அந்த இளம்பெண் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





13 September 2016

போதைப் பொருள் கடத்தியதாக 5 இந்தியர்கள் சீனாவில் கைது!!

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங் விமான நிலையத்துக்கு கடந்த 7–ந் தேதி கொல்கத்தாவில் இருந்து விமானம் ஒன்று வந்தது. 
இதில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பயணிகள் சிலரின் உடைமைகளை ஸ்கேனர் கருவி மூலம் சோதனையிட்ட போது அவற்றில் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப் பொருளை கடத்தி வந்த இந்தியர்கள் 5 பேரை குடியேற்ற அதிகாரிகள் 
கைது செய்தனர். 
அவர்களிடம் இருந்து 18 கிலோ ‘கஞ்சா’ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இந்தியர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்திய தூதரக அதிகாரிகள் வரும் 21–ந்தேதி அவர்களை சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டு
 உள்ளது. 
சீனாவில் போதைப் பொருள் கடத்தல் என்பது கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு அதிக பட்சமாக மரண தண்டனை அல்லது நீண்டகால சிறை தண்டனை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கி ஏற்கனவே 7 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். 
கடந்த ஜூலை மாதம் சீனாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய கொலம்பியாவை சேர்ந்த மாடல் அழகி ஜூலியானாவுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>