Search This Blog n

09 September 2014

மீனவர்கள் கைது! நாளைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்

 
தமிழ் நாட்டை சேர்ந்த ஆறு மீனவர்கள் நேற்று மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைதாகும் போது, அவர்களின் படகு பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவர்கள் இன்னும் மன்னார் கடற்தொழில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளிடம் கையளிக்கப்படவில்லை.
கைதான ஆறு மீனவர்களில் ஒருவரை கடற்படையினர் படகினை மீட்பதற்காக அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 
பெரும்பாலும் அவர்கள் ஆறு பேரும் இன்று கடற்தொழில் கூட்டுத்தாபனத்தினால் பொறுப்பேற்கப்பட்டு, நாளையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

Post a Comment