This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

25 November 2013

ஸ்ருதிஹாசனை தாக்கிய நபரை கைது செய்தது மும்பை பொலிஸ்!

நடிகை ஸ்ருதிஹாசனை தாக்கிய நபரை மும்பை பாந்தரா போலீசார் கைது செய்தனர். தாராவி பகுதியைச் சேர்ந்த அசோக் சங்கர் திரிமுகே என்ற அந்த நபர் புரொடக்‌ஷன் பாயாக பணியாற்றி வருகிறார்.கைது செய்யப்பட்ட அசோக் சங்கர் திரிமுகே, தனது தங்கைக்கு வேலை கேட்பதற்காகவே ஸ்ருதிஹாசனை சந்திக்கச் சென்றதாகவும், பேசிக்கொண்டிருக்கும் போதே ஸ்ருதிஹாசன் கதவை மூட முயன்றதால் தான் அதை தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். தன் செய்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு நியாயம் வேண்டும்:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எழுந்துள்ள பிரச்சினையில் இனியாவது முழு விசாரணை நடத்தி இத்தனை ஆண்டுகள் சிறையிலே தன் இளம் பிராயத்தைச் செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-     கேள்வி:-ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் வாக்குமூலத்தை மாற்றம்...

சிறுமி ஆருஷியை பெற்றோரே கொலை செய்ததாக சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு!

நாட்டை உலுக்கிய 13 வயது சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் காசியாபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என கூறி உள்ளார். தீர்ப்பை அடுத்து இருவரும் தஸ்னா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீர்ப்பை கேட்டது்ம, தல்வார் கதறி அழுதார். டில்லியில் புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராஜேஷ் தல்வார்-நுபுர் தல்வார்...

23 November 2013

இலங்கையில் ஆடுகளம் நடிகர் கைது

இலங்கையில் விசா விதிகளை மீறிய குற்றத்திற்காக நடிகர் ஜெயபாலன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை மாங்குளத்தைச் சேர்ந்தவர் பிரபல கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலன். இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டை காரணமாக புலம் பெயர்ந்து சென்னையில் வசித்து வருகிறார். மேலும் வெயில், ஆடுகளம், பாண்டிய நாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரது தாயாரின் சமாதி இலங்கை மாங்குளம் பகுதியில் உள்ளது. தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக அவர் நேற்று இலங்கை சென்றார். மாங்குளம்...

இவர்தான் ஸ்ருதியை தாக்கியவராம்! புகைப்படம் வெளியானது

நடிகை ஸ்ருதி ஹாசனை வீடு புகுந்து தாக்கிய மர்ம நபரின் புகைப்படமானது அங்கிருந்த ரகசிய கமெராவில் பதிவாகியுள்ளது. மும்பை பாந்த்ரா கடற்கரையோர பகுதியில் நடிகர், நடிகைகள் அதிகம் வசிக்கும் பிரபலமான அடுக்கு மாடி குடியிருப்பில் 6-வது மாடியில் ஸ்ருதியின் வீடு உள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை காலை அவரது மும்பை வீட்டில் வைத்து தாக்கப்பட்டார். முதலில் இந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்காத ஸ்ருதிஹாசன் நேற்று முன்தினம் இரவு பாந்திரா பொலிசில் புகார்...

22 November 2013

மனைவியின் துன்புறுத்தல்கள் குறித்து சென்னையில் 5000

ஆண்கள் புகார்; மனைவி தாக்குவதாக 10% புகார், மனைவிக்கும் பிற ஆண்களுக்கும் தொடர்பு 10% சென்­னையில் இவ்­வ­ருடம் மாத்­திரம் மனை­வி­மார்­களின்  கொடு­மைகள், துன்­பு­றுத்­தல்கள், தொடர்­பாக சுமார் 5000 ஆண்கள் முறைப்­பாடு செய்­துள்­ள­தாக  ஆண்­களை பாது­காப்­ப­தற்­கான அமைப்பு தெரி­வித்­துள்­ளது. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சர்­வ­தேச ஆண்கள் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்ட நிலையில், இத்­த­கவல் வெளி­யா­கி­யுள்­ளது. இந்­தி­யாவில் சென்­னை­யி­லி­ருந்­துதான்...

பொலிஸாருக்கு சார்பாக செயற்படுவதாகக் கூறி, நிந்தவூரில் தம்பதி மீது வாள்வெட்டு, தாக்குதல்!

நிந்­தவூர் பிர­தே­சத்தில் மோட்டார் சைக்­கிளில் சென்ற இனந்­தெ­ரி­யாதோர் வீடு ஒன்றில் உள்­நு­ழைந்து கணவன்இ மனைவி மீது வாள்­களால் வெட்டி தாக்­கி­விட்டு தப்­பி­யோ­டி­யுள்ள சம்­பவம் ஒன்று நேற்று முன்­தி­ன­மி­ரவு இடம்­பெற்­றுள்­ளது. இதில் படு­கா­ய­ம­டைந்த இரு­வரும் வைத்­தி­ய­சா­லையில்  அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். தப்­பி­யோ­டி­ய­வர்­களின் மோட்­டார்­சைக்கிள் ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ள­தாக சம்­மாந்­துறை பொலிஸார் தெரி­வித்­தனர். நிந்­தவூர் மீரா­நகர்...

19 November 2013

பெங்களூரில் 15 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு

பெங்களூர் அருகே தோடபெலவங்களா என்ற கிராமம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த கிராமத்தில் நடந்த ஒரு விழாவுக்காக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் வந்து இருந்தனர். 10–வது வகுப்பு படிக்கும் ஒரு 15 வயது சிறுமியும் இசை நிகழ்ச்சியை பார்க்க சென்று இருந்தார். நிகழ்ச்சி முடியும் நேரத்தில் மின்சாரம் தடைபட்டது. உடனே, அந்த சிறுமி கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது பின் தொடர்ந்து வந்த 4 வாலிபர்கள்,...

18 November 2013

சச்சின் ஓய்வு: மனமுடைந்த ரசிகர் தற்கொலை

டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதால் மன வேதனை அடைந்த அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் உள்ள வார்லி கிராமத்தை சேர்ந்த இளைஞர் விஜய் கோவிந்த் (20). இவர் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர். சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நாளில் இருந்தே மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார் . கடந்த ஒரு வாரமாக தனது நண்பர்களிடம், சச்சின் ஓய்வு பெறும் நாள்தான் தன் வாழ்வின்...

பணத்துடன் ஏ.டி.எம். இயந்திரத்தை கடத்திச்சென்ற கொள்ளையர்கள்

குஜராத் தலைநகர் அகமதாபாத் அருகே ஏழு இலட்ம் ரூபா பணத்துடன், ஏ.டி.எம். இயந்திரத்தையே கொள்ளையர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் அருகே உள்ள சிங்கர்வா கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஒரு கனரக வாகனத்தில் வந்த சிலர் ஏ.டி.எம். இயந்திரத்தையே தூக்கி அந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இயந்திரத்தின் உள்ளே 6.97 லட்சம் ரூபாய் இருந்ததாக...

15 November 2013

உதயமானது சென்னை கலங்கரை விளக்கம்

சென்னை மெரீனா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் ஆகியவற்றை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்துள்ளார். நவீனமயம் ஆக்கப்பட்டுள்ள சென்னை கலங்கரை விளக்கம், கப்பல் அருங்காட்சியகம் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான திறப்பு விழா இந்தியாவில் 7 இடங்களில் அமைக்கப்பட உள்ள நவீன கப்பல் தொடர்பு மையங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நேற்று சென்னை கலங்கரை விளக்க வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு மத்திய கப்பல்...

கல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம் (காணொளி, இணைப்பு)

இந்தியாவிலேயே பாரம்பரியமிக்க கோவில்களையும், சிற்பங்களையும் பெற்று கலையம்சம் கொண்ட பகுதியாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த கல்வெட்டுக்களும், இலக்கியங்களும் காணக் கிடக்கின்றன. இங்கு பல்வேறு இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் அமையப் பெற்றது தான் மாமல்லபுரம். கல்லிலே...

14 November 2013

வெள்ளையர்களை வாய்பிளக்க வைத்த இந்தியர்கள் (காணொளிகள், )

  இந்தியாவின் போக்குவரத்து துறைக்கு பெரிதும் வரப்பிரசாதமாக இருக்கும் துறை தான் ரயில்வே. முதல் ரயில் வண்டி கடந்த 1853ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி, 14 பெட்டிகளுடன் மும்பை போரி பந்தரிலிருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள தானேக்கு சென்றது. பின்னர் படிப்படியாக வளர்ச்சி அடைந்து உலகின் மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக வருடந்தோறும் 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர். வெள்ளையனால் நம் நாட்டிற்குள் ரயில்கள்...

இந்தியாவில் ராணுவப் புரட்சிக்கு வாய்ப்பே இல்லை:

இந்தியாவில் ராணுவப் புரட்சி ஏற்பட வாய்ப்பே இல்லை என்று ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங் தெரிவித்தார். இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வி.கே. சிங் அளித்த பேட்டியில், "எனது வயது வரம்பு பிரச்னை குறித்து தொடர்ந்து கேள்வி எழுந்ததன் காரணமாக, ராணுவப் புரட்சி நடத்த தில்லியை நோக்கி இரண்டு படைகளை நகர்த்தினேன் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் என்மீது சுமத்தப்பட்டன. இந்தியாவில் ராணுவப் புரட்சி ஏற்பட வாய்ப்பே கிடையாது. மேலும், ரகசியப்...

12 November 2013

தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கம்!

திருச்செந்தூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் ரூ.2.07 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2001-06ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அப்போது தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும்...

10 November 2013

45 பேர் பலியானது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள்

  ஆந்திராவில் சமீபத்தில் நடந்த பேருந்து விபத்தில் 45 பயணிகள் பலியானது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. பெங்களூரில் இருந்து ஐதராபாத்துக்கு கடந்த மாதம் 30ம் திகதி இரவு தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்றது. ஆந்திராவில் உள்ள மகபூப்நகர் அருகே சாலையோர சுவரில் மோதியதால் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 45 பயணிகள் உடல் கருகி பலியாகினர். இந்த விபத்து பற்றி ஆந்திர மாநில தடய அறிவியல் பரிசோதனை மைய அதிகாரிகள் விசாரணை...

ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார் மன்மோகன் சிங்

 கொழும்புவில் நடக்கும் காமென்வெல்த் மாநாட்டில் தன்னால் கலந்து கொள்ள முடியாததற்கு வருத்தம் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் ஆகியவை மத்திய அரசை வலியுறுத்தின. இதையடுத்து மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவில்லை....

07 November 2013

முகாமில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி

செங்கல்பட்டு முகாமில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். செங்கல்பட்டில் இலங்கை அதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கையைச் சேர்ந்த 33 பேர் நைஜிரியாவைச் சேர்ந்த 8 பேர் கனடாவைச் சேர்ந்த 4 பேர் மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் என, 45 பேர், அடைக்கப்பட்டுள்ளனர் இதில், இலங்கையைச் சேர்ந்த சுரேஷ் 29 என்பவர் நேற்று திடீரென தன்னை திறந்தவெளி முகாமில் தங்க வைக்கக்கோரி தோல் நோய்க்கு பயன்படுத்தும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை செங்கல்பட்டு...

06 November 2013

ஆசிய பசிபிக் அழகியின் வைர கிரீடம் விமான நிலையத்தில் பறிமுதல்

தென் கொரியாவில் உள்ள புஷன் நகரில் கடந்த மாதம் 30-ம் தேதி ஆசிய பசிபிக் அழகி போட்டி நடைபெற்றது. 49 நாடுகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த சிரிஷ்டி ராணா முதல் இடத்தை பெற்று சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற இதே போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவை சேர்ந்த ஹிமாங்கினி சிங் யாது, சிரிஷ்டி ராணாவுக்கு சிறந்த ஆசிய பசிபிக் அழகிக்கான கிரீடத்தை சூட்டினார். வெற்றி களிப்புடன் மும்பை சத்ரபதி சிவாஜி விமான...

04 November 2013

சிதம்பரம், கருணாநிதி கோமாவில் இருந்தனரா? வைகோ கேள்வி

இசைப்பிரியா படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கோமாவில் இருந்தாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், தமிழகத்தில் அதிமுக அரசு ஏதேச்சதிகார போக்குடன் நடந்து கொள்கிறது, கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது....

சிறுமியைக் கொன்ற சிறுத்தை சுட்டுக்கொலை

உத்தரகண்டில் சிறுமியைக் கொன்ற சிறுத்தைப்புலி வனத்துறை அதிகாரிகளால் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டது. டேராடூன் மாவட்டம், தெüலாஸ் பிரவாதி மஜ்ரா பகுதியில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமி, பெண் சிறுத்தை தாக்கிக் கொல்லப்பட்டார். எனவே, மக்களைப் பயமுறுத்தி வந்த அந்தச் சிறுத்தையைக் கொல்ல வேண்டும் என வனத்துறையினரிடம், அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தைப்புலியைச்...

“Red Light” பகுதி வேண்டும்! செக்ஸ் தொழிலாளர்களின்

சென்னையில் விபச்சாரத் தொழிலாளர்களுக்காக ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு செக்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இந்திரா மகளிர் கூட்டுறவு அமைப்பு என்ற பெயரிலான செக்ஸ் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான கலைவாணி கூறுகையில், சென்னையில் மட்டும் 3000 செக்ஸ் தொழிலாளர்கள் உள்ளனர். இந்தியாவின் பெருநகரங்களில் சென்னை, பெங்களூரில் மட்டும்தான் தனியாக சிவப்பு விளக்குப் பகுதி இல்லை. இதன் காரணமாக சென்னையில் செக்ஸ் தொழிலில்...

மன்மோகன் சிங் இலங்கைக்கு செல்கிறார் ?

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் சுமார் 40 நாடுகள் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈழத் தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச நடத்தும் அந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்ட சபையில் இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கிடையே காமன்வெல்த்  மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்லலாம் என்று...

03 November 2013

அதிமுக உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது ஊடுறுவல்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உத்தியோகபூர்வ இணையளத்தளம் மீது ஊடுறுவல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் பாகிஸ்தானிலிருந்து செயற்படும் குழு ஒன்றினால் ஊடுறுவப்பட்டு தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்டை ஓட்டின் படம் ஒன்றை இணையத்தளத்தில் பொறித்துள்ளதுடன் பாகிஸ்தானின் தேசியக் கொடியையும் இணைத்துள்ளனர். அத்துடன் பாகிஸ்தானுடன் சம்பந்தப்பட்ட சில வாசகங்களையும் அதில் இணைத்துக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக...

வதந்தியால் வந்த வினை: 10 பேர் உடல் நசுங்கி பலி

ஆந்திராவில் ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி பரவியதும், பயந்து போய் கீழே குதித்த பயணிகள் பரிதாபமாக பலியாயினர். கேரளாவின் ஆலப்புழா நகரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு பொகாரோ எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்றிரவு 7.00 மணிக்கு ஆந்திர மாநிலம் விஜயநகரம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் தீப்பற்றியுள்ளதாகவும், பெட்டிகள் எரிந்து விடும் என்றும் சிலர் வதந்தியை பரப்பியுள்ளனர். இதனை நம்பிய பயணிகள் சிலர், அபாயச்சங்கிலியை...

02 November 2013

இன்று முதல் புதிய ஐபோன் மாடல்கள் இந்தியாவில் விற்பனை

 ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கூப்பர்டினோவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். நுகர்வோர் மின்னணு, கணினி மென்பொருள், தனிப்பட்ட கணினிகள் மற்றும் வடிவமைப்புகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி இப்போது தங்களின் தயாரிப்பான ஐ-போன்களின் புதிய மாடல்களை இன்று விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு முதல் நாளான இன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்த...

01 November 2013

இசைப்பிரியாவின் வீடியோ குறித்து மத்திய அரசு!

    விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இசைப்பிரியாவை இலங்கை ராணுவத்தினர் கொலை செய்தது தொடர்பான வீடியோவை சனல்-4 வெளியிட்டது. இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன்,  விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா பற்றிய வீடியோ உண்மை எனில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வது...

பட்டாசு தயாரித்தபோது கும்பகோணத்தில் வெடிவிபத்து! ..

கும்பகோணம்அருகே ஒழுகச்சேரியில் பட்டாசு தயாரித்த போது இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலியாயினர். பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது  குறித்த தீயணைப்புத் துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலை இயங்கி வந்த தகரக் கொட்டகை வெடி விபத்தில் தரைமட்டமாகியுள்ளது. படுகாயத்துடன் மீட்கப்பட்ட 6 தொழிலாளர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: புதிய..

தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 2004-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி...

கனடாவில் இரசாயன ஆலையில் வெடி விபத்து

கனடாவின் மொன்றியலில் இரசாயன ஆலையொன்றில் பாரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. கனடாவின் மொன்றியலுக்கு கிழக்குப் பக்கமாக 80 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிறான்பி என்னும் இடத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையே விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்து நேற்று மாலையில் நடந்தது என்றும், தொழிலாளர்கள் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அண்மை பகுதியில் வசிக்கும் மக்கள்  உடனடியாக தத்தமது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள்...