This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 June 2013

வெடித்த நிலையில் தரையிறங்கிய இலங்கை விமானம்!

  இலங்கை அரசுக்கு சொந்தமான போயிங் 737 விமானம் ஒன்று நேற்றிரவு 7 மணியளவில் புதுடில்லி விமான நிலையத்தின் மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. 70 பயணிகளுடன் வந்த அந்த விமானத்தை ஓடுபாதையில் இறக்கிய விமானிகள் சக்கரங்களின் 'பிரேக்' பிடிக்கவில்லை என்று கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் அளித்தனர். இதனையடுத்து, அந்த விமானத்தை பாதுகாப்பாக இழுத்து வருவதற்கான ஏற்பாடுகளை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அவசர அவசரமாக செய்தனர். இலங்கை விமானத்தின் அருகே சென்று...

29 June 2013

இந்தியாவை சமாதானப்படுத்த புதுடில்லிக்கு ஓடும் பசில்!

  சிறிலங்காவின் சமகால அரசியல் நடவடிக்கையால் இந்தியா பெரும் அதிருப்தி அடைந்துள்ளது.   இந்நிலையில் குழம்பிப்போயுள்ள இந்தியாவுடன் பேச்சு நடத்தி, சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமைச்சர் பசில் ராஜபக்ச அடுத்தவாரம் புதுடில்லிக்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்த சிறிலங்கா அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இந்தியா கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ள நிலையிலேயே பஸில்...

27 June 2013

பாதிக்கப்பட்ட நபரின் தோள் மீது அமர்ந்து கொண்டு செய்தி,

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தோளில் அமர்ந்து கொண்டு செய்தி சேகரித்த பத்திரிக்கையாளருக்கு வேலை பறிபோனது. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக பிரபல தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளராக வேலை செய்து வருகிறார் நாராயண் பார்ஜியன். இந்நிலையில் இவர் வெள்ளம் பற்றிய செய்திகளை சேகரிப்பதற்காக உத்தரகாண்ட் சென்றார். அங்கு சென்று பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் தோளில் அமர்ந்து கொண்டு, செய்திகளை சேகரித்துள்ளார். இதனை யூடியூப்பில் யாரோ வெளியிட்டு விட, நாராயணுக்கு...

ராஜ்யசபா தேர்தல்: கனிமொழி வெற்றி

  தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. வாக்குகள் இன்று மாலை எண்ணப்பட்டது. இதில் 230 வாக்குகள் செல்லத்தக்கவையாக அறிவிக்கப்பட்டன, ஒரு வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க வேட்பாளர்கள் மைத்ரேயன், அர்ச்சுனன், ரத்தினவேல் மற்றும் லட்சுமணன் ஆகிய நான்கு பேரும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவும், தி.மு.க சார்பில் கனிமொழியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  ...

25 June 2013

மருத்துவம் சார் பட்ட படிப்புகள் விண்ணப்பங்கள் விற்பனை

சென்னை: பி.எஸ்சி.,நர்சிங் - பி.பார்ம்., உள்ளிட்ட மருத்துவம் சார் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விண்ணப்ப விற்பனை, நேற்று துவங்கியது. பி.எஸ்சி.,நர்சிங்; பி.பார்ம்., - பி.பி.டி., - பி.ஓ.டி., - பி.ஏ.எஸ்.எல்.பி., (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல் படிப்பு) - பி.எஸ்சி., ரேடியாலஜி இமேஜிங் தொழில்நுட்பம் - பி.எஸ்சி., கதிர்வீச்சு தொழில்நுட்பம் ஆகிய, மருத்துவம் சார் பட்டப் படிப்புகள், சில குறிப்பிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில்...

மணமகனுக்குப் பாடம் புகட்டிய மணமகள்

இந்தியாவின் ஒடிசாவில், குடிபோதையில், தள்ளாடியபடி மணமேடைக்கு வந்த மணமகனை, மணமகள் புறக்கணித்து வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது. சப்பள்ளி என்ற கிராமத்தில் நேற்று முன்தினம், பர்வத் மல்லிக், 26, என்ற மணமகனுக்கும், 22 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மண்டபத்தில், மணமகள், மங்கல தருணத்திற்காக காத்திருந்த போது, மதுபானம் ஏராளமாக அருந்தியதால், தள்ளாடிய படி, மேடையில் ஏறினான், மணமகன் பர்வத். இதைப் பார்த்த மணமகள், கழுத்தில் போட்டிருந்த...

சீன பெண்ணை கரம் பிடித்த தமிழக வாலிபர்

இந்து முறைப்படி சீன பெண்ணை கரம் பிடித்தார் தமிழக வாலிபர் ஒருவர். தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த தொப்பையன்குளத்தை சேர்ந்தவர் வாசுதேவன், விவசாயி. இவரது மகன் வெங்கடேசன்(வயது 29), கேட்டரிங் படித்தவர். இவர் 6 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டில் குவைஹவா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மின்ஹால்-குவாயின் மகள் ஷியாகுவ்வா(வயது 28) என்பவரை காதலித்தார். இதனையடுத்து கடந்தாண்டு ஏப்ரல்...

24 June 2013

உத்தரகாண்டில் மீண்டும் தொடர் மழை: மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டது

 இன்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதுடன்  நாளை முதல் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது.அங்கு மீண்டும் தொடரும் மழை காரணமாக கருமேக மூட்டமாக உள்ளது. இதனால் ஹெலிகாப்டர்கள் மூலம் நடந்து வந்த மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கேதர்நாத்தில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதனால் வெண் புகை சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக இன்று கேதர்நாத்துக்கு ஒரு ஹெலிகாப்டர் கூட செல்லவில்லை. நாளை பலத்த மழை...

23 June 2013

கார் மோதிய விபத்தில் தாய்-மகள் பலி,,

வேலூர் மாவட்டம் மேல்மலையனூர் அருகே சென்னை- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த கார் மோதியதில்இந்திரா என்ற பெண்ணும், அவரது மகள் ஷாலினி என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதையடுத்து கார் டிரைவரை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர...

பாகிஸ்தானில் பிரபல நடிகை மீது ஆசிட் வீச்சு

பாகிஸ்தானில் சினிமா நடிகை ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானை சேர்ந்த நடிகை புஷ்ரா(வயது 18), திரைப்படங்கள் உட்பட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவரது இல்லத்தில் உறங்கி கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து, புஷ்ரா முகத்தில் ஆசிட்டை ஊற்றியுள்ளான். இதனையடுத்து புஷ்ரா உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவர்கள்,...

22 June 2013

காங்கிரஸை தோற்கடிக்க பாஜகாவுக்கு புதிய கட்சிகள்?

மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகாவுடன் இணைந்து காங்கிஸ் கட்சியினை தோற்கடிப்பதற்கு புதிய கட்சிகள் தேவை என அத்வானி தெரிவித்துள்ளார்.  டில்லியில் நடைபெற்ற ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 61 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அத்வானி கூறுகையில், ஜனசங்கத்தின் முதல் தேசியக் குழுக் கூட்டமானது 1952-ல் கான்பூரில் நடைபெற்றது. அப்பொழுது ஒடிசாவைச் சேர்ந்த மாநிலக் கட்சியான கணதந்திர பரிஷத்தின் தலைவர்களை அக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு...

ஆபாசமாக பேசிய முதலமைச்சர் அலுவலக ஊழியர்

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில், தொலைபேசி அழைப்புகளை பெறும் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணியாற்றி வந்தவர் கே.பி.கிரீஷ் குமார். தனது குறையை தெரிவிப்பதற்காக முதல்-மந்திரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசிய ஒரு பெண்ணிடம் கே.பி.கிரீஷ் குமார் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை வந்ததை தொடர்ந்து...

கொலை செய்யும் கணவன்மார்கள்: அதிர்ச்சி

40 முதல் 100 சதவீத இந்திய மனைவி கொலை செய்யப்பட்ட வழக்குகளில் பெரும்பாலும் கணவன்மார்கள் தான் குற்றவாளிகளாக உள்ளனர் என பிரித்தானிய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.இந்த ஆய்வு லண்டனில் உள்ள சுகாதார பள்ளி மற்றும் தென் ஆப்பிரிக்க ஆராய்ச்சி நிலையம் உதவியுடன், உலக சுகாதார நிறுவனத்தால் மேற் கொள்ளப்பட்டது. பெண்களின் மீதான வன்முறை சர்வதேச அளவில் எப்படி இருக்கிறது என்பது ஆய்வின் கருவாகக் கொள்ளப்பட்டது. அதில், மணமான பெண்கள் மீதான வன்முறையில் அவர்களின் கணவர்...

20 June 2013

தம்பதி கடத்தல் தொடர்பில்??

   ஆசிரியை உள்பட 8 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது  இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை தம்பதி களான தவராஜா, ஜலஜா ஆகியோர் கடந்த மே 25ம் திகதி சென்னை வந்த போது விமான நிலையத்திலிருந்து மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது. கடத்தியவர்கள் இங்கிலாந்தில் இருந்த தவராஜா மகள் தர்ஷினியிடம் ரூ.2 கோடி கேட்டு போனில் மிரட்டினர். போலீசார் தனிப்படை  அமைத்து தீவிர விசாரணை நடத்தி கடலூர் அடுத்த மந்தாரக்குப்பத்தில் ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருந்த...

இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.60 ஐ எட்டி உள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின்போது ஒரே நாளில் 130 காசுகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாயின் மதிப்பு ரூ.58.71 ஆக இருந்தது&nbs...

18 June 2013

மத்திய அமைச்சரவை மாற்றம்: 8 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு

   ரயில்வே அமைச்சராக மல்லிகார்ஜுன கார்கேவும், புதிதாக 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை மாலை புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு...

பருவமழை பல மாநிலங்களில் வெறியாட்டம்: டில்லி, மும்பை, திருவனந்தபுரத்தில் கடும் பாதிப்பு

  தமிழகத்தை மட்டும் பாராமுகமாக இருக்கும் தென் மேற்கு பருவமழை, நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக பெய்து, அப்பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், பல மாநிலங்களில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. "மழை தொடரும்' என, அறிவிக்கப்பட்டுள்ளதால், பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.  இம்மாதம், 1ம் தேதி துவங்கிய தென் மேற்கு பருவமழை, முதலில் கேரளாவில் துவங்கி, தமிழகத்தின்...

07 June 2013

500 அடி பள்ளத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்த பஸ்:

இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் 500 அடி பள்ளத்தில் பஸ் ஒன்று கவிழ்ந்ததில் எட்டுப்பேர் பலியாகியுள்ளனர். சிர்மாவூர் மாவட்டம் புன்ரதாரில் இருந்து 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை அரச பஸ் ஒன்று சோலன் நோக்கி புறப்பட்டது. 5 கி.மீட்டர் தூரம் சென்றதும், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் உள்ள 500 அடி பள்ளத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கியிருந்த எட்டுப் பேரின் சடலங்களை...

இணைந்து வாழ்ந்த தம்பதி படுகொலை

திருமணம் செய்யாமல் இணைந்து  வாழ்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட தம்பதி படுகொலை செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கோவளப் பகுதியை சேர்ந்தவர் திவாகரன்(வயது 70). இவர் திரேசம்மாள் என்ற 76 வயது மூதாட்டியுடன் தனியாக வசித்து வந்தார். 35 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் தங்களது குடும்பம், குழந்தைளை விட்டுப் பிரிந்து வந்து வாழத் தொடங்கினர். திருமணம் செய்து கொள்ளாமலேயே இணைந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதி, கோட்டக்கல் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். சில நாட்களாக இவர்கள் இருந்து...

பிரதமராகி இந்திய தேசத்தை காக்க வேண்டும்:

 தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரத பிரதமராக வந்து இந்திய தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நாஞ்சில் சம்பத், பென்னிகுயிக்கிற்கு நினைவகம் அமைத்து உலக அளவில் ஜெயலலிதா இன்று போற்றப்படுகிறார். மதிமுகவுக்காக 18 ஆண்டுகள் உழைத்தேன், அன்று பலனில்லை. கடந்த செப்டம்பர்...

8 வயது சிறுமியை சீரழித்த 14 வயது மாணவன்: உறவினர்கள்

புதுச்சேரியில் 8 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியின் அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவருக்கு நாராயணன் என்ற 10 வயது மகனும், சுமதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 8 வயது மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் மணவெளியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். கணவர் இல்லாத தமிழ்செல்வி கூலித் தொழில் செய்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு...

06 June 2013

ஒரு கோடி ரூபா நலத்திட்ட நிகழ்வு ரத்து: அதிருப்தியில்

நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி ஒரு கோடி ரூபா நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் விஜய்  3 ஆயிரத்து 900 ஆயிரம் ஏழைகளுக்கு நல உதவிகள், ஏழை மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, கணனிகள், ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் போன்றவற்றை வழங்குவதாக இருந்தது. இவ்விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை புறப்பட தயாரானார்கள். விழாவுக்காக...

எல்லையில்லா அன்பை பார்த்து தூக்கம் வரவில்லை:

தமிழக மக்கள் என்னிடம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எல்லையில்லாத அன்போடு இருக்கிறார்களே என்று எண்ணிக் கொண்டிருந்ததால் தூங்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது 90-ஆம் பிறந்த நாள் விழாவினை, எந்த ஆண்டும் இல்லாத வகையில் மிகவும் சிறப்பாக திமுகவினர் ஒருங்கிணைந்து கொண்டாடினர். 3 நாள்களாக நான் சரியாகத் தூங்கவில்லை. தமிழக மக்கள் என்னிடம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எல்லையில்லாத அன்போடு...

தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம்: இந்திய நிதியமைச்சு

 வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய நிதியமைச்சகம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியது. இதனால் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற இந்திய வங்கிகள் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார். அவர்...

05 June 2013

கொலை செய்யப்பட்டார் செல்லக் கதிர்காம பிரதம பூசகர்?

கதிர்காமம் சைவ சமயத்தவர்களின் புனித பிரதேசமாக இருந்து வந்தது. இதனை, படிப்படியாக சிங்கள மயமாக்கியது பௌத்த பேரினவாதம். மதகுருமாரும் பூசை முறைகளும் மாறிய போதும் இறைவிக்கிரங்கள் ஏதோவொருவகையில் இருந்து வந்தது.  இந்த நிலையில் செல்லக் கதிர்காமம் ஈஸ்வர ஆலயத்தின் பிரதம குருவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் காயங்களுடன் பிரதம குருவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. சடலம் இன்று...

04 June 2013

பள்ளிகளிலும் தமிழ்வழிக் கல்வி

  சென்னை, நுங்கம்பாக்கம் இலயோலா கல்லூரி வளாகத்தில் 01.06.2013 அன்று தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள், சனநாயக ஆற்றல்கள் ஆகியோர் இணைந்து தமிழ்ச் சமுகக் கல்வி இயக்கம் சார்பாக தமிழ்ச் சமூகக் கல்வி இயக்கம், அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி - அரசு முடிவைக் கைவிடக் கோரி நடத்திய கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- தீர்மானம் : 1 வரும் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தேவையான அளவு ஆங்கிலவழிப் பிரிவுகள்...

கொல்கத்தா அணிக்கு தொடர்பா?

கிரிக்கெட் சூதாட்ட வலையில் கொல்கத்தா அணியும் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் வெடித்த சூதாட்ட புகார் தொடர்பாக பாலிவுட் நடிகர் விண்டூ சிங் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன் பிடிபட்டார். தவிர கொல்கத்தா அணிக்கும் வலை விரித்துள்ளார். இது குறித்து மும்பை கிரைம் பிராஞ்ச் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கொல்கத்தா அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கியை தொடர்பு...

பிரபல நடிகை ஜியா கான் தற்கொலை

பிரபல பாலிவுட் நடிகை ஜியா கான் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் வெளியான கஜினி, அமிதாப் பச்சனின் நிசாபாத், அக்சய்குமாரின் ஹவுஸ்புல் உள்ளிட்ட இந்தி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜியாகான்(24). மும்பை ஜூகூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று இரவு 11.45 மணியளவில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் பொலிசிற்கு தெரிவித்தார். இதையடுத்து ஜூகூ காவல் நிலைய பொலிசார், அவரது...

03 June 2013

அமைச்சரவையில் மாற்றம்: மூத்த அமைச்சர்கள்.-

மத்திய மந்திரி சபையில் இருந்து கடந்த மார்ச் மாதம் தி.மு.க.வைச் சேர்ந்த மந்திரிகள் விலகினார்கள். இதையடுத்து கடந்த மாதம் ஊழல் புகார் காரணமாக ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சாலும், சி.பி.ஐ. அறிக்கையை திருத்திய விவகாரத்தில் சட்ட மந்திரி அஸ்வினிகுமாரும் பதவியை ராஜினாமா செய்தனர். தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மந்திரிகள் விலகலால் மத்திய அமைச்சரவையில் சில முக்கிய இலாகாக்கள் காலி இடங்களாக உள்ளன. இந்த காலி இடங்களுக்கு விரைவில் புதிய...

முகப்புத்தகத்தில் தோன்றிய ராணுவ ??

இஸ்ரேல் குடிமக்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்- பெண் இருபாலரும் அடிப்படையாக ராணுவத்தில் பயிற்சி பெற வேண்டும் என்னும் சட்டம் நடைமுறையில் உள்ளது.இவ்வகையில், புதிதாக ராணுவ பயிற்சியில் இணைந்த 5 இளம்பெண்கள், மேலாடை இல்லாமல் தலைக் கவசம் மட்டும் அணிந்தபடியும், இடுப்புக்கு கீழே உள்ளாடை மட்டும் அணிந்தபடி, கையில் துப்பாக்கியுடனும் புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளனர். அப்புகைப்படங்களை முகப்புத்தக பக்கங்களிலும் அந்த பெண்கள் சமீபத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்....

ஆசிரியைகளை மட்டுமே நியமிக்க வேண்டும்:

பெண்கள் பள்ளிகளில் செக்ஸ் தொந்தரவுகளை தடுக்கும் வகையில் பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதலே இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. இதுகுறித்து மே 28-ந் தேதி தமிழக அரசாணை 145-ல் புதிதாக பணி நியமனம் மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதில் அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளையே நியமிக்க வேண்டும், தலைமை ஆசிரியைகளும் பெண்களாகவே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த...

02 June 2013

செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து

ராஜஸ்தானி்ல் இளம் பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகேயுள்ள பையா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கிரிபரம். இவரது மகளுக்கு, அதே ஊரைச் சேர்ந்த, சவாய் ராம் என்ற இளைஞரை, திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கான, நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால், சவாய் ராம் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்பது கிரிபரமுக்கு தெரியவந்தது. இதையடுத்து சவாய் ராமை, மருமகனாக ஏற்க மறுத்த...

பொலிஸ் பாதுகாப்புடன் இன்று சவானுக்கு திருமணம்

 ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அங்கீத் சவானின் திருமணம், பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் இடைத்தரகர்கள் மேலும் சில கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரை மும்பை பொலிசார் கடந்த மாதம் கைது செய்தனர். இவர்கள் அங்கீத் சவான், தனக்கு திருமணம் நடைபெற இருப்பதால் ஜாமினில் விடுவிக்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை...