This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 November 2012

பின்லேடன் பற்றி தகவல் அளித்த மருத்துவர் சிறையில் உண்ணாவிரத போராட்டம்

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்தாண்டு மே மாதம் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு ஒசாமா பின்லேடன் பற்றிய தகவலை பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஷகீல் அப்ரிடி தான் தெரிவித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில், ஷகீல் அப்ரிடிக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பெஷாவரிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் அப்ரிடி சிறையில்...

28 November 2012

இன்று மாவீரர் நாள் 27 /11 /2012

தமிழினத்தின் விடுதலை என்ற உயரிய இலட்ச்சியத்தை உயிர் மூச்சாய் கொண்டு களமாடி வித்தாகி போன எங்கள் காவல் தெய்வங்களை நெஞ்சங்களில் நிறுத்தி பூசிக்கும் நாள்தமிழினத்திற்கு என்று அடையாளம் தந்து உறங்கி கொண்டிருக்கும் புனிதர்களின் நாள்.அடக்கு முறைக்கு எதிராக ஆயிரம் ஆயிராமாய் வெகுண்டெழுந்து ஆலமரமாய் எங்கள் நெஞ்சங்களில் இருக்கும் ஆத்மாக்களின் நாள்.காடு மலை மேடு பள்ளம் புயல் மழை என்று எல்லாவற்றையும் தாண்டி தமிழினத்திற்கு வெற்றி தேடி தந்த எங்கள் கண்மணிகளின்...

27 November 2012

பிரித்தானிய தமிழ் மக்களை ஒருங்கிணைத்த எக்ஸ்செல் மாவீரர் தின நிகழ்வு - ஜேர்மனிய நிகழ்வுகள்

  லண்டன் மாநகரிலுள்ள எக்ஸ்செல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் தேசிய மாவீரர் தின எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வினை, ஒருங்கிணைப்புக் குழுவினைச் சார்ந்த சகோதரி கௌசிகா, பிரித்தானிய தேசியக் கொடி ஏற்றி ஆரம்பித்து வைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.தனம் அவர்கள் ஏற்றிவைக்க, அதனைத் தொடர்ந்து...

தமிழீழ தேசிய மாவீரர் நாள் அறிக்கை : விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம்

  பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லது போர்மீது கொண்ட பற்றுதலாலோ எமது மாவீரர்கள் களமாடவில்லை என இன்றைய மாவீரர் நாள் செய்தியில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தினால் வாசிக்கப்பட்ட மாவீரர் நாள் அறிக்கையினை செவிமெடுக்க....(ஒலி வடிவம்} தமிழீழ மாவீரர் நாள் - 2012...

தலைவலியை உண்டாக்கும் செயல்கள்

தலைவலி நாம் செய்யும் செயல்களால் தான் ஏற்படுகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் அந்த மாத்திரைகளும் உடலும் பெரும் கெடுதலைத் தான் ஏற்படுத்தும். ஆகவே அத்தகைய வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி சரிசெய்வதை விட, நாம் செய்யும் எந்த செயல்களால் இந்த தலை வலி ஏற்படுகின்றதென்ற காரணத்தை...

26 November 2012

வயிட்ஹோல் வீதியை ஸ்தம்பிக்க வைத்த நிர்வாண மனிதன்!

                   லண்டனில் பிரதமர் டேவிட் கெமரூன் வீட்டுக்கு அருகில் உள்ள சாலையில் நிறுவப்பட்டுள்ள சிலை மீது நிர்வாணமாக வாலிபர் ஒருவர் அமர்ந்து கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்தும் இதனால் ஸ்தம்பித்தது. மூன்று மணி நேர போராட்டத்துக்கு பிறகு கீழே இறங்கி வந்த அந்நபரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால்...

25 November 2012

கிழக்கில் இன்று முதல் வரும் புதன்கிழமை வரை பொது நிகழ்வுகளுக்கு ?

  கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஞாற்றுக்கிழமை முதல் எதிர்வரும் 28 ம் திகதி வரையில் நடைபெறவுள்ள பொது நிகழ்வுகளுக்கு படையினர் தடைவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். சிங்கள படையினரின் இவ்வாறான செயலானது பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் குழப்பும் வகையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை ஏற்பாடுசெய்யப்பட்ட...

24 November 2012

எதுவும் நடத்தக் கூடாது என நாம் யாருக்கும் அறிவிக்கவில்லை ?

27 ம் திகதி மக்கள் ஆலயங்களில் விசேட வழிபாடுகளை நடாத்தவும் மணி அடிப்பதற்கும் யாழ். மாவட்டத்தில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன் போது எதிர்வரும் 27 ம் திகதி இந்துக்களின் விழாவான காத்திகை விளக்கீடு கொண்டாடப்படவுள்ளது. எனினும் அன்றைய தினம் மாவீரர் நாளாக அமைகின்றது. அதனால் விளக்கீட்டினைக்...

23 November 2012

புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை வழக்கிலிருந்து

           சென்னைபாண்டிபஜாரில்கடந்த1982ல்விடுதலைப் புலிகளுக்கும், புளொட் இயக்கத்தினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை தொடர்பான வழக்கில் பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரின் பெயரை நீக்க வேண்டும் என்று சென்னை அமர்வு நீதிமன்றில் சிபிசிஐடி பொலிசார் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982 மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும், புளொட் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் துப்பாக்கிச்...

22 November 2012

சிலியில் கடும் நிலநடுக்கம்: வீதிகளில் மக்கள் தஞ்சம்

        தென் அமெரிக்க நாடான சிலியின் மத்திய பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தில் பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கட்டிடங்களில் ஏற்பட்ட அதிர்வுகளால் மக்கள் பீதி அடைந்து தெருக்களில் ஓடினார்கள். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள சிலியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010ம் ஆண்டு...

இலங்கை அரசாங்கம் அடிமைச் சேவகம் செய்து வருகிறது

        அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இலங்கை அரசாங்கம் அடிமைச் சேவகம் செய்து வருவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இந்தியாவும் மௌனமாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகத்...

21 November 2012

10 வயதிலேயே பாலியல் குற்றவாளிகளாக மாறி வரும் இங்கிலாந்து

இங்கிலாந்தில் மிக இளம் வயதிலேயே சிறுவர்கள் பாலியல் குற்றவாளிகளாக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 13 வயதுக்குட்பட்ட 7 பேர் வரை கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்காக கைதாகியுள்ளனராம். ஓன்லைன் மூலம் படங்களை பார்த்து இவர்கள் கெட்டுச் சீரழிவதாகவும், கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இணையத்தில் பாலியல் சம்பந்தமான தகவல்கள் அதிகளவு கிடைப்பதால், சிறுவர்கள்...

20 November 2012

பிரபாகரனின் மகனை கொல்வதற்கு எந்த அவசியமும் எமக்கு இல்லை:

  பிரபாகரனின் மகனை படுகொலை செய்வதற்கான தேவை எமக்கு இருக்கவில்லை. அவரை நாம் கொல்லவும் இல்லை. ஆனால் அவர் மோதல்களின் போது கொல்லப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் டிலான் பெரேரா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிள்ளையான் எந்த அடிப்படையில் ஜனாதிபதியின் ஆலோசகரானார் என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அவர் அவ்வாறான பதவியை வகிப்பதற்கு சகல தகுதிகளையும் பெற்றிருக்கிறார் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு - செலவுத்திட்ட குழுநிலை...

19 November 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய்யுரைத்து வருகின்றது?

      By.Rajah.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பொய்ப் பிரசாரம் செய்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றிற்கும், உலக சமூகத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய்யுரைத்து வருகின்றது. 13ம் திருத்தச் சட்டத்தை வேண்டுமெனக் கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் இதனை கடுமையாக எதிர்த்து வந்தது. நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே....

18 November 2012

மனித உரிமைகள் நான் தொடர்ந்து அவதானத்தை செலுத்தி?

              By.Rajah.இலங்கையில் யுத்தம் இடம்பெற்றபோது ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்டுள்ள உள்ளக அறிக்கையை கனடா வரவேற்றுள்ளது. இது தொடர்பில் கனடா வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவிக்கையில், 'இலங்கை மக்கள் பலவருடங்களாக முகம்கொடுத்து வருகின்ற மனித உரிமை மீறல்களை இந்த அறிக்கை வெளிக்கொணர்ந்துள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான பொறுப்புகள்...

17 November 2012

சர்வதேச வலையமைப்பின் முக்கிய தலைவர் பிரான்ஸில் கைது !

         By.Rajah.தமிழீழவிடுதலைப்புலிகளின்சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரானவிநாயகம்,பிரான்ஸில்வைத்துகைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் ஒரு பிரிவிற்கு விநாயகம் தலைமை வகிக்கின்றார். புலிகளின் மற்றுமொரு சிரேஸ்ட தலைவரான பரிதி எனப்படும் றீகன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்தின் பேரில் விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸின் பாரிஸ் பொலிஸார்...

16 November 2012

சிலியில் கடுமையான நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான சிலியின் வடக்கு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.1ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், அடகாமா பாலைவன பகுதியில் இருந்த வீடுகள் குலுங்கின. காக்குயும்போ நகருக்கு வடக்கே 88 கிலோ மீற்றர் தூரத்தில், 61 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த சேத விபரங்கள் தெரியவரவில்லை. இதன் அதிர்வுகள் தலைநகர்...

15 November 2012

ஒலிபெருக்கியினை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு ?

     By.Rajah.வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் யாழ் மாநகர சபைவளாகத்தில்நடைபெற்றகண்காட்சியில் ஒலிபெருக்கியினைநிறுத்துமாறுயாழ்நீதிமன்றத்தால் உத்தரவிட்டப்பட்டபோதும்அதனைப்பொருட்பாடுத்தாது கண்காட்சி நடைபெற்றுள்ளது. நாளை யாழ்ப்பாணத்தில் நாடைபெறவுள்ள ஆளுனர் மாநாட்டைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபையினால் பல லட்சம் ரூபா செலவில் கண்காட்சி நடைபெற்றுவருகின்றது இந்தக் கண்காட்சி நடைபெறும் வளாகத்திற்கு முன்னாள் யாழ் நீதிமன்றம் உள்ளதால்...

14 November 2012

பரிதியைக் கொல்ல கட்டளை வந்தது!

            By.Rajah.பிரான்ஸ் வர்டமான் பிரதேசத்தில் இருந்தே பரிதியைக் கொல்லச் சொல்லி கட்டளை வந்தது எனச் சந்தேகிக்கிறது பிரெஞ்சுப் பொலிஸ் ! இதற்கான முழுமையான காரணத்தை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. இதேவேளை கடந்த வியாழக்கிழமை இரவு பாரிசில் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட கேணல் றீகன் என்று அழைக்கப்படும் பரிதியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சுட்டுக்கொல்லவில்லை என்று பிரெஞ்சுப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்....

13 November 2012

சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்தின் இடிபாடுகள் இன்று ?

      By.Rajah.1998ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்தின் இடிபாடுகள் இன்று மீட்கப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுளளது. 1998ம் ஆண்டு பலாலியிருந்து ரத்மலானை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த விமானமே புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த விமானம் மன்னார் கடற்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டபோது கடலில் மூழ்கியது. விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் நடத்திய...

12 November 2012

15 மில்லியன் அமெரிக்க டாலர் - பணத்துக்கு என்ன நடந்தது!

        By.Rajah.விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில், அவர்கள் வன்னிப் பெரு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும், அறிவிக்கப்படாத அரசாங்கம் ஒன்றை நடத்தி வந்தனர் என்பதும் பலராலும் அறியப்பட்ட விடையம். இதேவேளை அவர்கள் சுங்கத்துறை, வணிகப் பிரிவு, வருமாணப் பிரிவு, நீதித்துறை, பொலிஸ் பிரிவு என்று பல திணைக்களங்களை நடாத்தி வந்தனர். இதனுள் தமிழீழ வங்கியும் அடங்கும். வன்னியில் மட்டும் சுமார்...

11 November 2012

WinLIRC மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

    By.Rajah..தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற சாதனங்களை   தொலைவிலிருந்து இயக்குவதற்கு Remote Control பயன்படுகின்றது. தற்போது இத்தொழில்நுட்பமானது விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணனிகளுக்கும் சாத்தியமாகியுள்ளது. அதாவது Infrared வசதி கொண்ட கணனிகளில் WinLIRC எனப்படும் மென்பொருளினை நிறுவிக் கொள்வதன் மூலம் Media Player Classic, Media Portal, BSPlayer போன்றவற்றின் செயற்பாடுகளை தொலைவிலிருந்து Remote Control மூலம்...

புலம் பெயர் தமிழர்கள் - திமுகவிற்கு மாதாந்தம் 1 மில்லியன்

ByRajah...தமிழீழத்திற்காக குரல் கொடுப்பதற்காக தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக கட்சி மில்லியன் கணக்கான டொலர் பணத்தைப் பெற்றுக் கொள்வதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலி ஆதரவு புலம் பெயர் தமிழர்கள் திமுகவிற்கு இந்தப் பணத்தை வழங்கி வருகின்றனர். மாதாந்தம் சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பணம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கப்படுகின்றது. திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கு இந்தப் பணம்...

10 November 2012

தொண்டர்கள: கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ஒபாமா

By.Rajah.அதிபர் ஒபாமா, தேர்தலில் தனது வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது வெற்றிக்கு பாடுபட்ட தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், தொண்டர்களாகிய உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை...

08 November 2012

வட்டி செலுத்தத் தேவையில்லை!ஜனாதிபதி

By.Rajah..விவசாய நடவடிக்கைகளுக்கு கடன் பெற்றுள்ள விவசாயிகள் செலுத்த வேண்டிய வட்டியை முழுமையாக இல்லாது செய்வதாகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த நிவாரணம் சென்றடையும் எனவும் ஜனாதிபதி தனது வரவு - செலவு திட்ட உரையில் தெரிவித்தார். அத்துடன் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கவும் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்....

07 November 2012

இந்தியாவிற்கு யுரேனியம் வழங்கப்படும்: கனடா பிரதமர் ?

       By.Rajah.இந்திய அணு உலைகளுக்கு யுரேனியம் வழங்கப்படும் என கனடா   பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா- கனடா நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், பாதுகாப்பு, நல்லுறவு தொடர்பாக இருநாட்டு பிரதமர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். அணு உலை செயல்பாட்டுக்கு தேவைப்படும் மூலப்பொருளான...

06 November 2012

நீதியரசருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டோம் ?

By.Rajah..பிரதம நீதியரசருக்கு சிராணி பண்டாரநாயவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளையோ அல்லது கருத்துக்களையோ எடுக்கப் போவதில்லை என நீதியரசர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் ஆராய்வதற்காக நீதியரசர்கள் சங்கம் நேற்று கூடிய போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டதாக சங்கம் அறிவித்துள்ளது. பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்காவிற்கு எதிராக தற்போது அரசாங்கம்...

ராஜபக்ச தலையீடு இல்லாமல் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட

By.Rajah..லண்டனில் நடைபெறவுள்ள தமிழர் மாநாட்டில் இலங்கை மீது விசாரணை நடத்த வலியுறுத்தப்படும் எனத் தெரிவித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ராஜபக்ச தலையீடு இல்லாமல் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தப்படும் எனவும் கூறினார். லண்டனில் நாளை நடைபெறும் தமிழர் மாநாட்டில் பங்கேற்க செல்லும் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார். லண்டனில்...

04 November 2012

வயிற்று பிழைப்புக்காக நிர்வாண போஸ் கொடுக்கும் சீன சீனியர் சிட்டிசன்கள்

சீனாவை சேர்ந்தவர் வாங் சுஷாங் (84). பிள்ளைகள் கவனிக்காததால் தனியே வசித்து வரும் இவர் சமீபத்தில் மாடலிங் துறையில் இறங்கிவிட்டார். படம் வரைந்து பயிற்சி பெறும் ஓவிய கல்லூரி மாணவ, மாணவிகள் முன்பு நிர்வாணமாக உட்கார்வதுதான் இவரது வேலை. இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: எனக்கு 2 மகன், 2 மகள். இளைய மகன் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டான். மற்ற பிள்ளைகளுக்கு திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். மனைவி இறந்து 15 ஆண்டுகள் ஆகிறது.தனியாகத்தான் வசிக்கிறேன்....