This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 December 2014

நெல் மூட்டைகள் மழையால் சேதம்: விவசாயிகள் மறியல்

 வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூட திறந்தவெளிக் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் திங்கள்கிழமை அதிகாலை பெய்த மழையில் நனைந்து சேதமடைந்தன. இதைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் செய்தனர். வந்தவாசியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எடுத்து வருவர். இதற்கென ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 4 கிடங்குகள் உள்ளன. மேலும்,...

30 December 2014

கடும் பனிப்பொழிவு: ரயில் விமான போக்குவரத்து பாதிப்பு

டெல்லியில் வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று முன்தினம் டெல்லியில் தட்பவெட்பம் 2.6 டிகிரி செல்சியசாக குறைந்தது. அன்று, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் பனிப்பொழிவு இருந்தது. டெல்லியில் இன்றும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. மக்கள் அதை தாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.பனிப்பொழிவு காரணமாக டெல்லி...

எல்லையில் ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலம் பதேபூர் அருகே உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் வேலியை தாண்டி யாரோ மர்மநபர் ஒருவர் ஒரு பையை தூக்கி வீசினார். இந்திய எல்லைக்குள் விழுந்த அந்த பையை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்தனர். அப்போது, அதில் 3 பாக்கெட்டுகளில் ‘ஹெராயின்’ போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. அதை அவர்கள் கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூ.15 கோடி ஆகும். இங்குஅழுத்தவும்...

29 December 2014

குண்டு வெடிப்பு: நிச்சயமாக தீவிரவாத தாக்குதல்தான் உள்துறை

பெங்களூரில் நேற்று இரவு உணவகம் அருகே குண்டு வெடித்ததில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் பலியானார். இரண்டு பேர் காயமடைந்தனர்.  இந்த சம்பவத்தையடுத்து, மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இந்த தாக்குதல் கண்டிப்பாக தீவிரவாத தாக்குதல்தான் என்று கர்நாடக உள்துறை மந்திரி கே.ஜே ஜார்ஜ் தெரிவித்துள்ளார். எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதனிடையே, குண்டு வெடிப்பு...

குண்டுவெடிப்பு:3 பேர் காயம்.பொலிசார் தீவிர விசாரணை (காணொளி இணைப்பு)

பெங்களூரில் குண்டு வெடித்ததில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். பெங்களூர் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த சர்ச் சாலையில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் சென்னையை சேர்ந்த பவானி, மற்ற இருவரின் பெயர்கள் கார்த்திக், சந்தீப் என்று தெரிய வந்துள்ளது. தலையில் படுகாயத்துடன் பவானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடிகுண்டு வெடித்த இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர். அந்தப் பகுதியை பொலிசார் சுற்றி...

28 December 2014

மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான!!!

புதிய ஆதாரம் அம்பலம் எதிரொலி கராச்சி நகரில் வசிக்கும் தாவூத் இப்ராகிமை ‘இந்தியாவிடம் ஒப்படையுங்கள்’ மத்திய அரசு வற்புறுத்தல் மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராகிம் கராச்சி நகரில் வசிப்பதற்கான புதிய ஆதாரம் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. புதுடெல்லி 1993–ம் ஆண்டு மார்ச் மாதம் 12–ந்தேதி மும்பை நகரில் அடுத்தடுத்து 13 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. தாவூத்...

27 December 2014

மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது ஒரு ரூபாய் நோட்டு

 ஒரு ரூபாய் நோட்டுகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வடிவில் அச்சடிக்கப்பட்டு வெளியாக உள்ளன. இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நோட்டின் மதிப்பை விட, அதனை அச்சடிக்க அதிகம் செலவாவதால், ஒரு ரூபாய் மற்றும் இரண்டு, 5 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது 20 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. 1994ஆம் ஆண்டில் ஒரு ரூபாய் அச்சடிக்கும் பணியை நிறுத்திய மத்திய அரசு, 1995ஆம் ஆண்டில் இரண்டு மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்திவிட்டது. ஒன்று,...

சண்டை போட்டு மாண்ட வெள்ளைப் புலி

இந்தூர் உயிரியல் பூங்காவில் சனிக்கிழமை காலை பாம்புடன் சண்டை போட்ட வெள்ளைப் புலி இறுதியாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள உயிரியல் பூங்காவில் வெள்ளை புலி அடைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் ஒரு பாம்பு புகுந்தது. அதனைப் பார்த்த வெள்ளைப் புலி ஆக்ரோஷமாக பாம்புடன் சண்டையிட்டது. பாம்பும் வெள்ளைப் புலியை விடாமல் தாக்கியது. இந்த தாக்குதலில் வெள்ளைப் புலி உயிரிழந்தது. பாம்பும் பலத்த காயமடைந்துள்ளதாக உயிரியல்...

26 December 2014

மாணவி துப்பாக்கி முனையில் கடத்தி பலாத்காரம்!!!

ரேபரேலி : உத்திரப்பிரதேசத்தில் 11ம் வகுப்பு மாணவியை துப்பாக்கி முனையில் கடத்தி பலாத்காரம் செய்த 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியைப் போலீசார் தேடி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிக்கு உட்பட்ட கோட்வாலி பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி, சம்பவத்தன்று தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியே காரில் வந்த 4 இளைஞர்கள், துப்பாக்கி முனையில் மாணவியைக் கடத்தி உள்ளனர். காரில்...

25 December 2014

ஆலை அதிபரையும் மகளையும் குத்திக் கொன்ற தொழிலாளர்கள்

சூலூர்: கோயம்பத்தூர் மாவட்டம் குமாரபாளையத்தில் அட்வான்ஸ் கேட்டு கொடுக்காததால் ஆலை அதிபரையும், அவரது மகளையும் குத்திக் கொன்ற 3 தொழிலாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சூலூரை அடுத்த குமாரபாளையத்தில் பவர்லூம் வைத்து நடத்தி வந்தவர் ராக்கியப்பன். இவரிடம் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் மூவர், நேற்று இரவு வந்து அட்வான்ஸ் கேட்டனர். ராக்கியப்பன் மறுக்கவே அவரை கத்தியால் குத்தினர். தடுக்க வந்த மனைவி சரோஜினி, மகள்கள் வினோதினி, யசோதா ஆகியோரையும்...

பல்கலைக்கழகத்தில் திடீர் தீ விபத்து: 2 வகுப்பறைகள் சேதம்

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் இரண்டு வகுப்பறைகள் எரிந்து சேதமடைந்தன. மதுரையில் இயங்கி வரும் காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள வேதியியல் துறைக்கான கட்டடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்ப்பட்டது. இதை பார்த்த ஊழியர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 2 வாகனங்களில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும்...

24 December 2014

ரெயில் தாமதமானால் பயணிகளுக்கு இலவச உணவு..

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக பல ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், ரெயில் புறப்படும் நேரம் மற்றும் வரும் நேரம் தாமதம் ஆகிறது. இதனால் பயணிகள் கடுமையான அவதிக்கு ஆளாகின்றனர். இந்தநிலையில் இந்திய ரெயில்வே துறையின் அங்கமான ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் பனிமூட்டத்தின் காரணமாக 2 மணி நேரத்திற்கு மேல் ரெயில்கள் தாமதமானால் பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இங்குஅழுத்தவும்...

ஓரிரு இடங்களில் நாளை மழைபெய்யும்: வானிலை தகவல்

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழைபெய்தது. இந்த நிலையில் இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: குமரிக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது அங்கிருந்து நகர்ந்து, இந்தியப்பெருங்கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைக்கொண்டிருக்கிறது.  இதன்காரணமாக...

போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குள் இழுத்து சென்று பாலியல் கொடுமை

ஓசூர் பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குள் ராஜஸ்தான் பெண்களை பிடித்துச்சென்று பாலியல் கொடுமை செய்ததாக போலீஸ்காரருக்கு எதிரான குற்றச்சாட்டை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய தலைவி உ.வாசுகி, தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:– பாலியல் கொடுமை கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் நிலையத்தில் கடந்த அக்டோபர் 8–ந்தேதி ராஜஸ்தான்...

23 December 2014

இந்தியா இலங்கை மீனவர்களை விடுவித்தது

கடந்த செப்டம்பர் 30ஆம் திகதியன்று இந்திய கரையோரப் படையினரால் கைது செய்யப்பட்ட 12 இலங்கையர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர். தமிழக அரசாங்கம் விடுத்த பணிப்புரைக்கு இணங்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இந்த விடுதலைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று சிரேஸ்ட நீதிவான் நீதிமன்றம் இந்த 12பேரையும் விடுவித்தது. இவர்கள், கன்னியாகுமரி கடல் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். ரங்கா புத்தா மற்றும் சதீவ் புத்தா ஆகிய படகுகளில் சென்ற மீனவர்களே கைது செய்யப்பட்டனர். இதேவேளை...

சிறுமியிடம் பாலியல் தொல்லை பள்ளியின் 50 வயது தோட்டக்காரர் கைது

டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக  பள்ளியின் தோட்டக்காரர் கைது செய்யபட்டார். புதுடெல்லியில் உள்ள ராம்ஜெஸ் தனியார் பள்ளி ஒன்றில்  தோட்டக்காரராக கடந்த 28 வருடங்களாக பணியாற்றி வந்தவர் சங்கர் லால் (வயது 50). கடந்த  ஒரு மாதமாக பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமி ஒருவரை தனியாக அழைத்து போய் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதை யாரிடமாவது கூறினால் புல்வெட்டும் கத்திரியை காட்டி உன் முதுகில்...

சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர் என்ற விபரங்களை 259 சாட்சி??

ரூ 66 கோடி சொத்துக்கள் ரூ 2847 கோடியாக உயர்வு! மலைக்க வைத்த பவானிசிங் பெங்களூர்: 18 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கின் கிளைமாக்ஸ் நாளை தெரிந்து விடும். உச்சக்கட்ட பரபரப்பில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருக்கின்றனர். தீர்ப்பினை தெரிந்து கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் ஆர்வமாக உள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் எப்படிப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, எத்தனை இடங்களில் சொத்துகளை வாங்கிக்...

சென்னை டெல்லி ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்...

சென்னை: டெல்லியில் நிலவி வரும் கடும் குளிர் பனிமூட்டம் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. வண்டி எண்.12615 சென்னை சென்ட்ரல் - டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (22.12.2014) இரவு 07.15 மணிக்கு புறப்படவேண்டிய இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாளை (23.12.2014)அதிகாலை 02.00...

22 December 2014

இந்தியர்களுக்கு போதனை பேரழிவுக்கு தயாராகுங்கள்:??

 ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துவிட்டு இந்தியா திரும்பியுள்ள கர்நாடக மாநிலம் கல்யாணைச் சேர்ந்த ஆரீப் மஜீதுக்கு எதிரான ஆதாரங்களை தேசிய புலனாய்வு மையம் திரட்டி வருகிறது. இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர பல்வேறு என்.ஜி.ஓ.க்கள் உதவியது தெரிய வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமான வஹாபி அறிஞர்கள் இந்தியா வந்துள்ளனர். சுமார் 25 ஆயிரம் அறிஞர்கள் இந்தியா வந்துள்ளதாக புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. அவர்கள் இந்தியா வந்து போதனை செய்ததுடன்...

பட்டா கத்தி முனையில் கொள்ளையடிக்கும் காணொளி, காட்சியால் பரபரப்பு!!

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் வாகனத்தில் சென்ற பெண் ஒருவரிடம்  பட்டப் பகலில்  பட்டா கத்திமுனையில் மிரட்டி நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தின் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் வேலம் செந்தில்.. எம்.சி.என் நகரில் வசித்து வருகிறார். தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் அவர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் தனது பணியை முடித்து வீடு திரும்பி...

21 December 2014

தேவயானிக்கு பணியில் இருந்து விலகியிருக்கும்படி உத்தரவு!

விசாரணை ஆரம்பம்! அமெரிக்க முன்னாள் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவை, வெளியுறவுத் துறைப் பணியில் இருந்து விலகியிருக்கும்படி மத்திய அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர், "கட்டாயக் காத்திருப்போர்' பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அண்மையில் தனியார் ஊடகத்துக்கு அவர் மேலதிகாரியின் அனுமதியின்றி அளித்த பேட்டி, அமெரிக்காவில் இந்திய தூதரகப் பணியில் இருந்தபோது தனது குழந்தைகளுக்கு இரட்டை பாஸ்போர்ட் வைத்திருந்த தகவலை மீண்டும் தாயகம் திரும்பியதும்...

ஆசிரமத்தை கண்டித்து இன்று முழு கடையடைப்பு

3 பெண்கள் கடலில் குதித்து தற்கொலை அரவிந்தர் ஆசிரமத்தை கண்டித்து 20.12.14 முழு கடையடைப்பு பஸ்கள் மீது கல்வீச்சு புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று வாழைக் குளம் பகுதியில் உள்ளது. இங்கு பீகாரை சேர்ந்த சகோதரிகளான ஜெயஸ்ரீ(வயது 54), அருணா(52), ராஜஸ்ரீ(49), நிவேதிதா(48), ஹேமலதா(39) ஆகியோர் தங்கி ஆசிரமத்திற்கு சேவை செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் 5 பேரும் ஆசிரம நிர்வாகத்தினர் சிலர் தங்களை...

20 December 2014

ஏதாவது செய்யவேண்டும்! அதனால் அரசியலில் குதித்தேன்:

தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்கினேன் என்று நடிகையும் காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான குஷ்பூ கூறியுள்ளார். விருதுநகரில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய குஷ்பு, ‘1987இல் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். பிறகு, தமிழகத்தின் மருமகளானேன். என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்கினேன். நான் கட்சி மாறியதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை. நான் சினிமாவில்...

இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அது செல்லாது: - நீதிமன்றம் தீர்ப்பு!

திருமணம் என்னும் தனிப்பட்ட நோக்கத்துக்காக இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அது செல்லாது என உத்தரப் பிரதேச மாநில அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 தம்பதியினர், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த 5 தம்பதியர்களில், கணவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். மனைவி ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் ஆவர். திருமணத்துக்காக கணவரின் மதமான இஸ்லாமுக்கு 5 பெண்களும் மதம் மாறியிருந்தனர்...

19 December 2014

பெண்கள் பாதுகாப்புக்காக மிளகு ஸ்ப்ரே! வழங்க பொலீசார் முடிவு!

வடக்கு டெல்லியில் கடந்த 5-ந் தேதியன்று உபேர் கால் டாக்சி டிரைவரால் 27 வயது பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் டெல்லியில் 4 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுவதாகவும்  கூறப்படுகிறது. இது தவிர கடத்தல்காரர்களால் இளம்பெண்கள் கடத்தப்படுவதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக...

அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி இருந்த 3 பெண்கள் கடலில் குதித்து தற்கொலை!

துவையில் மகான் அரவிந்தரால் உருவாக்கப்பட்ட அரவிந்தர் ஆசிரமம் உள்ளது. மேற்கு வங்காளம், பீகார், ஒரிசா, ஜார்கண்ட், உத்திர பிரதேசம், உத்ரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த அரவிந்தர் பக்தர்கள் தங்கள் சொத்துகளையும், உடமைகளையும் புதுவை அரவிந்தர் ஆசிரமத்திற்கு அளித்துவிட்டு ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வருகின்றனர். இத்தகைய அரவிந்தர் பக்தர்கள் தங்குவதற்கான ஆசிரம நிர்வாகத்தின் சார்பில் புதுவை நகரில் ‘ஒயிட் டவுன்’ என அழைக்கப்படும் பகுதியில் பல குடியிருப்புகள்...

18 December 2014

ஏப்ரல் மாதம் வரை ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிப்பு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீனை, வரும் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர். அதே போல் பெங்களூரு சிறப்பு  நீதிமன்றம் தனக்கு விதித்த தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவை  விரைந்து விசாரித்து...

17 December 2014

கற்பழித்து கொலை செய்யப்பட்ட 2-ம் ஆண்டு நினைவு தினம்

டெல்லியில் ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ துணை மாணவி கும்பலால் கற்பழித்து கொலை செய்யப்பட்ட 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று டெல்லியில் கடைப்பிடிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோரால் நடத்தப்படும் நிர்பயா அறக்கட்டளை சார்பில் டெல்லியில் நேற்று நடந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுனம் கடைபிடித்தனர். அஞ்சலி நிகழ்ச்சியில் உரையாற்றிய மாணவியின் தாயார் உணர்ச்சிமிகு...

16 December 2014

இந்திய ரயில்வே துறையால் நடத்தப்பட்ட தேர்வில் ஜெயலலிதா

தொடர்புடைய கேள்வி இடம்பெற்றது குறித்தான விசாரணை நடத்திடக் கோரியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி திங்களன்று மாநிலங்களைவில் தெரிவித்தார். ரயில்வே வேலை வாய்ப்புகளுக்காக நடத்தப்படும் தேர்வில், அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்தான கேள்வி எழுப்பப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. இது உள்நோக்கத்துடன் நடைபெற்றுள்ளதாக அஇஅதிமுகவின் உறுப்பினர்கள் இந்திய நாடாளுமன்றத்தில் கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் இது தொடர்பான நடவடிக்கை...

ஜாமீனை நீட்டிக்கக் கோரும் இத்தாலி வீரரின் கோரிக்கை நிராகரிப்பு!!

: டெல்லி: கேரளா மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இத்தாலி வீரர் லட்டோர் தமக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மனு காலத்தை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்திய மீனவர்கள் 2 பேர் கொலை வழக்கில், இத்தாலி கடற்படை வீரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், இதய அறுவை சிகிச்சைக்காக ஜாமீன் பெற்று இத்தாலி சென்றுள்ள கடற்படை வீரர் மஸ்ஸிமிலானோ லாட்டோர், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் காலத்தை மேலும் 2 மாதங்களுக்கு...

இலங்கை மீனவர்களை இந்தியா விடுவிக்கக் கோரி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டமொன்று நீர்கொழும்பில் திங்களன்று நடைபெற்றது. நீர்கொழும்பு நகரில் ஒன்றுகூடிய இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களின் உறவினர்கள் மற்றும் ஏனைய மீனவர்கள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர். போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களை விடுதலைசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை...

15 December 2014

போர் விமானங்களில் விரைவில் பெண் பைலட்டுகள்:

  எதிர்காலத்தில் இந்திய போர் விமானங்களில் பெண் பைலட்டுகள் நியமிக்கப்படுவார்கள் என விமானப்படை தளபதி அரூப் ராகா தெரிவித்துள்ளார்.  இதுபற்றி அவர் கூறுகையில், ‘பெண்கள் விமானப்படையின் அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள். எதிர்காலத்தில் போர் விமானங்களில் பைலட்டுகளாகவும் அவர்கள் நியமிக்கப்படுவார்கள். பாதுகாப்புத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறேன். ஆயுதங்களை நவீனமாக்க இது உதவும். இது ஒரு சரியான முடிவு.என்றார். இந்த ஆண்டு...

வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி மீனவர்கள் விரட்டியடிப்பு

இராமேசுவரம் பகுதியை சேர்ந்த 500 மீனவர்கள் விசைப்படகுகளில் நேற்று காலை மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.  நேற்று இரவு அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல்கள், இராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தன. அப்போது இலங்கை கடற்படை வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி, மீனவர்கள் அங்கிருந்து செல்லும்படி எச்சரிக்கை செய்தனர்.  சில இலங்கை இராணுவத்தினர்...

13 December 2014

சாமர்த்தியமாக பஸ்ஸினை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய டிரைவர்!!

 விபத்தில் கை, கால்களை இழந்த இராணுவ வீரர்பெங்களூரு: பெங்களூரு அரசு சொகுசு பஸ்சின் பின்புற டயர் பேலூர் அருகே கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவரின் சாமர்த்தியத்தால் 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெங்களூருவில் இருந்து அரசு சொகுசு பஸ் ஒன்று சிக்மகளூரு நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 60 பயணிகள் இருந்தனர். அந்த அகரே கிராமத்தில் சென்றபோது பஸ்சின் பின்பக்க டயர் ஒன்று கழன்று தனியாக ஓடியது. இதை பஸ்சின் முன்பக்க...