இந்தியாவில் தேசியக்கொடியினை கிழிந்த நிலையில் ஏற்றிய இரு பொலிசார்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்காள பொலிஸ் துறையின் தலைமை செயலகத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது தேசிய கொடி ஏற்றப்படும். பின்பு அஸ்தமனத்தின் போது இறக்கி மறுநாள் காலை உரிய மரியாதையுடன் தேசிய கொடி ஏற்றப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த அலுவலகத்திலிருந்து தேசிய கொடி கிழிந்த நிலையில் பறப்பதை சில ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து கிழிந்த கொடியை கவனிக்காமல் ஏற்றிய 4 உதவி காவல் துறையினர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பொலிஸ் உயர் அதிகாரி கூறுகையில், தேசிய கொடியை அவமானப்படுத்திய குற்றத்திற்காக அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்








0 கருத்துகள்:
Post a Comment