ஏமன் நாட்டில் போர் நடந்து வருவதால் அங்கு வேலைக்காக சென்ற இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வந்தது. விமானங்கள் மூலம் 4,700 இந்தியர்களும், வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரம் பேரும் மீட்கப்பட்டனர். அதேபோல கப்பல்கள்மூலம் 1,670 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
நேற்று 2 கப்பல்கள் மூலம் 475 பேர் கேரள மாநிலம்
கொச்சி துறைமுகத்தில் வந்து இறங்கினர். இதில் 337 பேர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள். 65 பேர் ஏமனில் வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளியினர். இந்திய கப்பற்படை கப்பல்கள் பாதுகாப்புடன்
அவர்கள் கொச்சி அழைத்துவரப்பட்டனர். அங்கிருந்து இந்தியர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதான் ஏமனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்படும் இறுதி நடவடிக்கை என்று கூறப்படுகிறது.








0 கருத்துகள்:
Post a Comment