This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

28 February 2015

இந்தியா இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் மருத்துவர்!??

தமிழக மீனவர்கள் 66 பேரை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர்.இச் செயல் கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கோடியக்கரையில் தமிழக மற்றும் புதுவை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிங்களப்படையினர் தமிழக மீனவர்கள் 43 பேரை தாக்கி கைது செய்துள்ளனர். அதேபகுதியின் இன்னொரு இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் 23 தமிழக மீனவர்களும் கைது...

27 February 2015

பிரதமர் மோடி பாராட்டு ‘‘முற்போக்கு பார்வை கொண்டதுரெயில்வே ???

பட்ஜெட் முற்போக்கு பார்வை கொண்டது என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். முதல் ரெயில்வே பட்ஜெட் மத்தியில் கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்துள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசு, தனது முதலாவது முழுமையான ரெயில்வே பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. இது ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவுக்கும் முதல் பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். மோடி பாராட்டு இந்த நிலையில், ரெயில்வே...

பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்

ரெயில் வருகை, புறப்பாடு பற்றி,, பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, ரெயில் வருகை மற்றும் புறப்பாடு பற்றிய தகவல் பயணிகளுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் 15 முதல் 30 நிமிடங்களுக்கு  முன்னதாக தெரிவிக்கப்படும் என்றார். அடுத்த 2 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ரெயில் நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ரெயில்களின் வருகை, புறப்பாடு, முன்பதிவு, பொது மற்றும் அவசர தகவல்கள் பற்றிய விவரங்கள்...

மக்கள் ஆலோசனை கேட்டு பட்ஜெட் தயாரிக்கப்படும் ???

டெல்லி சட்டசபையில் முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:– மக்களின் தேவைக்கு ஏற்றாற் போல பட்ஜெட் தயாரிக்கப்பட வேண்டும். இதன்படி டெல்லி பட்ஜெட் தயாரிக்கும்  பணிகள் தொடங்கி உள்ளது. முதல்முறையாக சோதனை முன்னோட்டமாக, 5 அல்லது 10 தொகுதிகளாக பிரித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி  ஒதுக்கீடு செய்ய வேண்டும்,  எவ்வாறு செலவு செய்யப்பட வேண்டும் என்று மக்களிடம்...

25 February 2015

அபுசலீமுக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

 மும்பை தொடர் குண்டு வெடிப்பு தீவிரவாதி தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளிகளில் அபுசலீம் என்பவனும் ஒருவன்.வெடிகுண்டுகளையும், ஆயுதங்களையும் கடத்தி செல்ல உதவிய இவன் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற பிறகு,  மும்பை நிழல் உலக தாதாவாக மாறினான்.அபுசலீம் மீது  52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மும்பையில் உள்ள இந்தி படத் தயாரிப்பாளர்களை மிரட்டி இவன் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தான்.  ந்த நிலையில்  மும்பை...

ரெயில் நிலையங்களை சூரிய மின்சக்தியில் இயக்க திட்டம்

 நாளை தாக்கல் ஆகும் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது முக்கிய ரெயில் நிலையங்களை சூரிய மின்சக்தியில் இயக்குவதற்குரிய திட்டம் குறித்து நாளை தாக்கல் செய்யப்படும் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெயில்வே பட்ஜெட் பாராளுமன்றத்தில் நாளை(வியாழக்கிழமை) தனது முதல் ரெயில்வே பட்ஜெட்டை மந்திரி சுரேஷ்பிரபு தாக்கல் செய்கிறார். அப்போது அவர் ரெயில்வே இலாகாவை மேம்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிவிப்பார்...

24 February 2015

நெருங்கிவிட்டது: தமிழர்கள் ஒன்றுபடும் காலம் ஆதீன முதல்வர்

நாம் ஒன்றுபட வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடி கேள்விகளைக் கேட்க வேண்டிய காலமாக இது இருக்கின்றது என நல்லை ஆதீன முதல்வர் வணக்கத்துக்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். ஒன்றுபடுதலையே நாங்களும் விரும்பகிறோம்.  ஒன்றுபடுதலில் ஊடாக எங்களின் அனைத்து விடயங்களையும்  வேண்டிக் கொள்ள முடியும் என்பதை கூறிக் கொள்கிறேன் என கிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாராளுமன்ற...

அவசர சட்டத்தை விவாதிப்பதற்காக மேல்–சபையில்

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை விவாதிப்பதற்காக மேல்–சபையில் கேள்வி நேரத்தை ரத்து செய்ய காங்கிரஸ் நோட்டீசு பட்ஜெட் தொடரில் முதல் முட்டுக்கட்டை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முட்டுக்கட்டையாக, மேல்–சபையில் கேள்வி நேரத்தை ரத்து செய்யுமாறு காங்கிரஸ் கட்சி நோட்டீசு வழங்கி உள்ளது. அவசர சட்டம் நிலம் கையகப்படுத்தும் அவசரச்சட்டம் உள்பட 6 அவசர சட்டங்களை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் பிறப்பித்தது. மேலும் இந்த அவசரச் சட்டங்களை...

23 February 2015

முதல்வரா.. வெட்கங்கெட்ட மக்கள்: குஷ்பு விளாசல்

ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்பவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை என குஷ்பூ கூறியுள்ளார். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அரும்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது குஷ்பு பேசியதாவது, வருகிற 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் நிச்சயம்  காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்கிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை. மக்களின் முதல்வராக இருந்தவர் காமராஜர் ஒருவர் தான். மேலும் பாஜகவினர் மிஸ்டு...

ரூ.4½ கோடிக்கு மோடி உடை ஏலம்: விசாரணை நடத்த காங்கிரஸ் ???

 அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த மாதம் இந்தியா வந்த போது, பிரதமர் மோடி அணிந்திருந்த, அவரது பெயர் பொறிக்கப்பட்ட ‘பந்த்கலா’ சூட் சூரத் நகரில் ரூ.4 கோடியே 31 லட்சத்துக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. இதுபற்றி நேற்று ஆமதாபாத் நகரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல், அந்த ஏலம் பற்றியும், மோடியின் உடையை ஏலத்தில் எடுத்தவர் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்றார். கடந்த ஆண்டில், திரிணாமுல் காங்கிரஸ்...

21 February 2015

பன்றிகாய்ச்சல் கொசு கடிப்பதாலே பரவுகிறது மம்தா பானர்ஜி

பன்றிகாய்ச்சல் நாட்டையே அச்சுறித்தி வருகிறது இந்த பன்றி காய்சல் கொசு கடிப்பதாலே பன்றிகாய்ச்சல் வருகிறது என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் விழிப்புணர்வு இல்லாததாலும் மத்திய அரசின் மெத்தன போக்காலும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவுகிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். பன்றிகாய்ச்சல் குறித்து  மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பன்றிகாய்ச்சல் பெரும்பாலும் கொசுகடிப்பதால்...

ராணுவம் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை..

 ஜம்மு காஷ்மீரில் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் சோபூர் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. தாக்-கண்ட் கிராமத்தில்  தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் ராணுவம் கிராமத்தை சுற்றி வளைத்தது. அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டது.  ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை...

நகுலுக்கு திருமணம் பட்டதாரியை மணக்கிறார்..

 தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல் காதல் திருமணம் செய்கிறார். சமையல் படிப்பில் ‘எம்.பி.ஏ  படித்த பட்டதாரி பெண்ணையே அவர் திருமணம் செய்யவுள்ளார் . ஆனால் அவரைப் பற்றிய விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார் நகுல். நடிகை தேவயானிக்கு மயூர், நகுல் ஆகிய 2 தம்பிகள் இருக்கிறார்கள். மயூர் ஏற்கெனவே காதலித்து திருமணம் செய்தார். இளைய தம்பி நகுல், ‘காதலில் விழுந்தேன் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். ‘மாசிலாமணி,’ ‘கந்த கோட்டை, ‘வல்லினம் போன்ற...

அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு

.பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 23–ந்தேதி தொடங்கி மே மாதம் 8–ந்தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க நாளான 23–ந்தேதி, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார் அதைத்தொடர்ந்து 26–ந்தேதி ரெயில்வே பட்ஜெட்டும், 28–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முயன்று வருகிறது. மேலும் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த 6 அவசர சட்டங்களை, சட்டங்களாக நிறைவேற்ற...

19 February 2015

பூட்டை உடைத்து திருப்பதியில் மூலவர் தரிசனம்

  சிறிசேனாவுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலையில் நடைபெற்ற சுப்ரபாதம் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை அதிபர் சிறிசேனா தனது மனைவியுடன் சென்றார். அப்போது ஏழுமலையான் கோவிலின் மூலவர் அறையில்  உள்ள தங்க கதவை கோவில் ஊழியர்கள் சாவி மூலம் திறக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக சாவி உடைந்து பூட்டுக்குள் சிக்கிக்கொண்டது. இதனால் மூலவரின் அறையை திறக்க முடியாத  நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் பொறியாளர்கள்...

18 February 2015

2 பேரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் கைது????

அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டம் பாடியா சுபுரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கார்மெல்சிங் கபூர் என்ற ராணுவ வீரர் குடிபோதையில் கவுதம் போரா என்பவர் வீட்டுக்கு சென்றார். கவுதம் போரா வீட்டிலேயே மது விற்பவர் என்று தெரிகிறது. அதற்கு அவருக்கு அனுமதி இருக்கிறதா? என்பது தெரியவில்லை. ஏற்கனவே போதையில் இருந்த கார்மெல்சிங், கவுதமிடம் மது கேட்டார். அவர் மது இல்லை என்று மறுத்ததால் கார்மெல்சிங் துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டார்....

கிரண் பேடி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் நலம் விசாரித்தார்

 டெல்லி சட்டசபை தேர்தரண் பேடி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் நலம் விசாரித்தார்லில் அரவிந்த் கெஜ்ரிவாலும், கிரண் பேடியும் எதிர் எதிராக போட்டியிட்டனர். இருப்பினும், நேற்று  டெல்லி போலீஸ் கமிஷனர் பீம் சைன் பஸ்சி அளித்த விருந்து நிகழ்ச்சியில், முதல்–மந்திரி கெஜ்ரிவாலும், கிரண் பேடியும் அருகருகே அமர்ந்திருந்தனர்.  கிரண் பேடிக்கு கெஜ்ரிவால் வணக்கம் தெரிவித்தார். அதையடுத்து, இருவரும் சற்று நேரம் உரையாடினர். கெஜ்ரிவாலிடம் அவரது உடல்நிலை குறித்து...

17 February 2015

காவலாளியை காரால் அடித்து கொன்ற தொழிலதிபர்

பல அதிவேகக் கார்களை வாங்கிக் குவிக்கும் இந்திய தொழிலதிபர் ஒருவர் தாமதமாக கேட்டைத் திறந்த வாயில் காவலாளியை தனது குடியிருப்பு வளாகத்திற்குள் காரால் துரத்திச் சென்று தாக்கி கடுமையான காயப்படுத்தியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட காவலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் நிசாம் முகமது. இவரது வீட்டிற்கு சந்திர போஸ் என்ற 50 வயது முதியவர் வாயில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று,...

தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டுத்தரும் நம்பிக்கை???

 இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டுத்தரும் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை சிறிசேனாவின் வருகை இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டுத்தரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:– மீட்டுத்தரும் இலங்கை அதிபர் சிறிசேனாவின் இந்திய வருகை அங்கு உள்ள தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டுத்தரும் என்று நாங்கள் நம்புகிறோம். தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள இந்த...

2013–ல் நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கை ஊழல்

மத்திய பிரதேச மாநிலத்தில் 2013–ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கை ஊழலில் முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகானுக்கு தொடர்பு உள்ளது என்றும், இதுதொடர்பான ஆவணத்தில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. மருத்துவ ஊழல் மத்திய பிரதேச மாநில தொழில் தேர்வு வாரியம் 2013–ம் ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் மருத்துவ ஊழியர்கள் தேர்வுக்கான நுழைவுத் தேர்வை நடத்தியது. இதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டதையடுத்து,...

16 February 2015

மீண்டும் கடற்பரப்பினில் இந்திய மீனவர்கள்!

 அண்மை நாட்களாக முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் றோலர் மீன்பிடிப்படகுகளின் அத்துமீறல் அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார். கடந்த ஒருவாரமாக நீடித்த கடற்கொந்தளிப்பு, கடந்த இரண்டு நாட்களாக தணிந்துள்ளது. இதனையடுத்து, இந்திய றோலர்கள் அங்கு முகாமிட ஆரம்பித்துள்ளன. முல்லைத்தீவிலுள்ள 6000 மீனவ குடும்பங்களும் நடுத்தெருவிற்கு வரவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர்...

15 February 2015

மாநிலங்கள் இலவச மின்சாரம் எப்படி வழங்க முடியும்?

 மின் உற்பத்தி நிலையம் இல்லாத மாநிலங்கள், எப்படி இலவச மின்சாரம் வழங்க முடியும் என ஆம் ஆத்மி கட்சியை பிரதமர் மோடி மறைமுகமாக தாக்கினார். முதலீட்டாளர்கள் மாநாடு டெல்லியில் முதலாவது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:– இப்போதெல்லாம் அரசியல் கட்சிகள், இலவச மின்சாரம் வழங்குவோம் என வாக்காளர்களிடம் வாக்குறுதியை வாரி வழங்குகின்றன....

தமிழர்களுக்கு அனைத்து அதிகாரங்களும் கிடைக்க பாஜக துணையாக இருக்கும்

 பிரதமர் மோடி – சிறிசேனா சந்திப்பு: இலங்கை தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான புதிய வழி உருவாகும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனோ இந்தியாவிற்கு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்புக்குப் பிறகு இந்திய இலங்கை உறவில் திருப்பம் ஏற்படும்.  இலங்கை...

கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி..

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான ஐ.என்.எஸ். கொல்கத்தா, கடந்த ஆகஸ்டு மாதம் கடற்படையில் சேர்க்கப்பட்டது. ஏவுகணைகளை கையாளும் திறன் வாய்ந்த இந்த கப்பலில் இருந்து நேற்று முதன் முறையாக பிரமோஸ் ஏவுகணை செலுத்தி பார்க்கப்பட்டது. அதன்படி 290 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கக்கூடிய பிரமோஸ் ஏவுகணை நேற்றைய சோதனையில் பயன்படுத்தப்பட்டது.  கோவா கடற்பகுதியில் நடந்த இந்த சோதனையில் குறிப்பிட்ட இலக்கை எந்த வித இடையூறும் இன்றி ஏவுகணை துல்லியமாக சென்று...

14 February 2015

இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராவதை ஏற்க முடியாது

 ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதை ஏற்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம், நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். அமெரிக்கா ஆதரவு இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த மாதம் இந்தியா வந்திருந்தார். அப்போது, மாற்றியமைக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அணுசக்தி நாடுகள் குழுவிலும் இந்தியா உறுப்பினராவதற்கு அமெரிக்கா...

13 February 2015

பிரபல ஓட்டலில் பயங்கர தீ விபத்து 3 பேர் பலி

 ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ள நீம்ரானா என்ற பிரபல தனியார் ஓட்டலில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஓட்டலில் தங்கியிருந்த 3 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கபட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஓட்டலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில்  மேலும்...

குடும்பத்தகராறில் போலீஸ்காரர் மனைவி தற்கொலை

விருகம்பாக்கத்தில் குடும்பத்தகராறில் போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ்காரர் விருகம்பாக்கம், அபுசாலி தெருவில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தங்கராஜ்  வடபழனி போலீஸ் நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது  மனைவி சத்தியவாணி  இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. விருகம்பாக்கத்தில் தங்கராஜூம், அவரது மனைவியும் மட்டும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம்...

12 February 2015

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது 2 ராணுவ அதிகாரிகள் பலி!!

 காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்று இரவு விபத்துக்குள்ளானது. ‘துருவ்’ ரகத்தைச் சேர்ந்த அந்த ஹெலிகாப்டர், இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது,  ஒரு மலைப்பகுதியில் விபத்தில் சிக்கியது. அப்போது, ஹெலிகாப்டரை இயக்கிய ராணுவ லெப்டினன்ட் கர்னலும், ராணுவ மேஜரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை

வங்கதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு  வங்காள தேசத்தில் 2007–ம் ஆண்டு, மசூதியில் தொழுகை நடத்திவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அரசு வக்கீல் ஹைதர் உசேன் கொலை செய்யப்பட்டார். இவர், ஒரு கொலை வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி, தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாஹிதீன் (ஜே.எம்.பி.) தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஷேக் அப்துர் ரகுமான் உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை பெற்றுத்தந்தார். அவர்கள் தூக்கில் போடப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் விதமாக அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த...

10 February 2015

கொடியேற்று விழாவை நாளை சிறப்பாக நடத்த வேண்டும்: தொண்டர்களுக்கு???

  கொடி உருவாகி 15 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, தே.மு.தி.க. கொடியேற்று விழாவை நாளை (வியாழக்கிழமை) சிறப்பாக நடத்த வேண்டும் என்று தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தே.மு.தி.க. என்ற அரசியல் இயக்கம் தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில் உள்ள இருளை அகற்றுவதற்காகத்தான் தே.மு.தி.க.வின் புரட்சி தீபம் தாங்கிய மூவர்ணக்கொடி உருவாக்கப்பட்டது. கட்சி...

தேர்தலில் வெற்றி அரசியல் பூகம்பம்: சர்வதேச ஊடகங்கள் பாராட்டு?'

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அடைந்துள்ள இமாலய வெற்றியை சர்வதேச ஊடகங்கள் வெகுவாக பாராட்டியுள்ளன. மத்தியில் ஆட்சி அமைத்த ஓராண்டுக்குள் பா.ஜ.க. சந்தித்துள்ள இந்த தோல்வியையும், அக்கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி அடைந்துள்ள அபார வெற்றியையும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் ’சிறிய அரசியல் பூகம்பம்’ என வர்ணித்துள்ளது. ஊழலுக்கு எதிரான சராசரி மனிதனால் பா.ஜ.க. சந்தித்துள்ள அதிர்ச்சி தோல்வி இது என வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபல...

கார் மரத்தில் மோதி கல்லூரி மாணவர் பலி!!

புளியங்குடி அருகே  நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நடந்த விபத்தில் மாணவர் ஒருவர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர். கேரள மாநிலம் திருவனந்தப்புரம் அரசுக் கல்லூரியில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் கொல்லம் கடக்கல் சார்ந்த முகுந்தன் மகன் நந்து, மலப்புரம் மாவட்டம் அப்ப்துல்லாஹ் மகன் அன்வர், லத்தீப் மகன் சைபுல்லாஹ், கோழிக்கோடு சோலையூர் குட்டி மகன் மிதுன் ஆகிய 4 பேரும் கடந்த 8ம் தேதி யாருக்கும் தெரியாமல் கொடைக்கானல் சென்றுள்ளனர். பின்னர்...

பெரும்பான்மையை நிரூபிக்க தயார்முதல்-மந்திரி

.முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று மஞ்சி திட்டவட்டமாக தெரிவித்தார். பிரதமருடன் சந்திப்பு டெல்லியில் நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதல்-மந்திரி ஜிதன்ராம் மஞ்சி கலந்து கொண்டார். பின்னர் மாலையில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது இருவரும் பீகார் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மஞ்சியிடம், பீகார் அரசியலில் ஏற்பட்டு...

09 February 2015

வேளாண் உற்பத்தி,முதலீடுகள் அதிகரிப்பு:பட்னவீஸ் பெருமிதம்

   மும்பை:மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்துள்ள நிலையில்,மாநிலத்தில் வேளாண் உற்பத்தி அதிகரித்திருப்பதாகவும், முக்கிய துறைகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளதாகவும் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் பெருமிதம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறுகையில்,அரசின் செயல்பாட்டை மதிப்பிட 100 நாள்கள் என்பது மிகவும் குறைவாகும். இதில் எங்கள் நோக்கத்தை மட்டுமே நீங்கள் மதிப்பிட முடியும்....

08 February 2015

காந்தி, மோடி படம் கவர்னர் ரோசய்யா காலடியில் சர்ச்சை???

 குண்டூர்: மகாத்மா காந்தியின் சிலை திறப்பு விழா அழைப்பிதழில், தமிழக கவர்னர் ரோசய்யாவின் ஆளுயர படத்திற்கு கீழ், தேசத் தந்தை மகாத்மா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின் சிறிய படங்கள் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதனால், விழாவில் கலந்து கொள்வதை புறக்கணித்தார் ரோசய்யா. ஆதரவாளர்: ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த வியாபாரி கண்டசாலா பங்காரு பாபு. தற்போதைய தமிழக கவர்னர் ரோசய்யா, ஆந்திர மாநில அரசியலில்...