This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

29 April 2013

பெண் என்பதால் என்னை தேர்தல் ஆணையம்

: தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதின் கை பையை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாயாவதியின் கை பையில் இருந்த பர்சில் ரூ. 1 லட்சம் இருந்தது. இந்தப் பணத்துக்கு கணக்குக் கேட்டு அதிகாரிகள் கேள்வி கேட்டதையடுத்து பரபரப்பு மேலும் அதிகமானது. கர்நாடகத்தில் வரும் மே 5ம் திகதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது....

அவுஸ்திரேலிய வர்ணனையாளர்கள் தான் காரணம்: ஜெசிந்தா

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவி கேதே மிடில்டன் கடந்த வருடம் லண்டன் கிங் எட்வர்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அங்கு தொடர்பு கொண்ட ஆஸ்திரேலிய வானொலியின் நகைச்சுவை வர்ணனையாளர்கள், இளவரசியின் குடும்ப உறுப்பினர்கள் போல் பேசி, இந்தியாவைச் சேர்ந்த நர்ஸ் ஜெசிந்தாவிடம் (46) இருந்து இளவரசி தொடர்பான மருத்துவக் குறிப்புகளை பெற்றனர். பின்னர் அந்த செய்தியை ஆஸ்திரேலிய வானொலியில் ஒளிபரப்பினர். இச்செய்தி நர்ஸ் ஜெசிந்தாவிற்கு தெரியவர அரச...

28 April 2013

பொலிசாருக்கும்-மக்களுக்கும் இடையே பயங்கர?

வங்கதேச தலைநகர் டாக்காவில் சமீபத்தில் நடைபெற்ற கட்டிட இடிபாடு விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இவ்விபத்து தொடர்பாக பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை கலைப்பதற்காக தடியடி நடத்திய போது பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பொலிசாருக்கும்-மக்களுக்கும் இடையே பயங்கர  இதில் பலர் காயமடைந்துள்ளனர்.&nbs...

27 April 2013

இரண்டாவது திருமணம் தேவையா?: நகையை ???

 மனைவியை இழந்த 60 வயதான முதியவர் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்ய விளம்பரம் செய்துள்ளார். அவரை கூப்பிட்டு  அடித்து நகையை பறித்துள்ளது ஒரு கும்பல். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் தங்கரத்தினம் ஓய்வு பெற்ற பேராசிரியர். இவரது மனைவி சில ஆண்டு முன்பு காலமானார். பிள்ளைகள் இல்லை, கவனிக்க யாரும் இல்லாமல் அவதிப்பட்ட தங்கரத்தினம், நாளிதழ் ஒன்றில் 2வது திருமணம் செய்ய பெண் தேவை என விளம்பரம் கொடுத்தார். இதை பார்த்து, ஒரு இளம்பெண் தங்கரத்தினத்தை...

வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு திடீர் நிறுத்தம்,,,

டாக்டர் ராமதாஸ் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திடீரென திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாமக தலைமை நிலையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அளிக்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பு திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடந்து கொண்டிருந்த போதே எவ்வித முன்னறிவிப்பும்...

பலமிக்க நாடுகளில் இந்தியாவுக்கு 8வது இடம்

உலகின் மிக பலம் வாய்ந்த 27 நாடுகளின் பட்டியலில் இந்தியா 8வது இடத்தைப் பிடித்துள்ளது. இராணுவ செலவினம், எரிபொருள் பாதுகாப்பு, தனிநபர் வருமானம், மக்கள் தொகை, தொழில் நுட்ப ஆளுமைத் திறன் போன்ற தகுதிகளின் அடிப்படையில் சர்வதேச அளவில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியலை புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தையும், சீனா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தியா...

26 April 2013

மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு 20 ஆயிரம் ரூபாய் ,,,,

  முதல்வர் ஜெயலலிதா, வீட்டு கூரைகளில் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு ஒரு கிலோ வாட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டு மானியம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். சட்டசபையில் 110வது விதியின் கீழ் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம் தமிழகத்தில் 7,140 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. சூரிய சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதில் தமிழகத்தை முன்னிலையில் கொண்டு வர நடவடிக்கைகள்...

மகளின் முகபுத்தக சுயவிபரத்தை நீக்க நீதிமன்றம்

அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினையினால் மரணமடைய நேரிட்ட 24 வயதுப் பெண் ஒருவரின் சுய விபரமிட்ட பக்கத்தை முகபுத்தகத்திலிருந்து உடனடியாக நீக்குமாறு பிரேசில் நாட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.பிரேசிலின் மத்தியப் பகுதியில் உள்ள காம்போ கிராண்டே என்ற இடத்தில் 24 வயதான ஜூலியானோ ரிபைரோ காம்போஸ் என்ற பெண், பத்திரிகையாளராகப் பணி புரிந்து வந்தார். அவர், கடந்த வருடம் மே மாதம் அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினையினால் உயிரிழந்தார். அதற்கு முன்னர் அவர் சமூக...

குழந்தை உயிரோடு எரித்து நரபலி: தாய் உட்பட?

சிலி நாட்டில் உள்ள வல்பரைசோ துறைமுகத்துக்கு அருகில் கொல்லிகுவே என்ற மலை பாங்கான பகுதிக்கு கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி அன்று வந்த 4 பேர் கொண்ட கும்பல், பிறந்து 3 நாளே ஆன ஒரு குழந்தையை உயிரோடு எரித்து நரபலி கொடுத்துள்ளனர்.இந்த கும்பலின் தலைவர் ரமோன் கஸ்டாவோ என்பவர் அந்த குழந்தை மதத்துக்கு எதிரானது என்றும் இதனால் உலகம் அழியப் போகிறது எனவும் கூறி மற்றவர்களை நம்ப வைத்துள்ளார். இதையடுத்து அந்த குழந்தையின் தாயையும் நம்பவைத்து இந்த கொடூர உயிர் பலியை...

24 April 2013

மர்மமான முறையில் இறந்து கிடந்த இந்திய பெண்:?

பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள மிட்கிராப் ரூயிசிலிப்பி என்ற பள்ளி ஒன்றில் குஜராத்தை சேர்ந்த ஹீனா சோலங்கி(34) என்ற பெண் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார்.அவருடன் பெண் குழந்தைகள் ஜேஸ்மின் (9), பிரிஷ் (4) மற்றும் அவரது கணவரின் பெற்றோர்கள் வசித்து வந்தனர். கணவரின் பெற்றோர்கள் வெளியூர் சென்றிருந்தபொழுது சோலங்கியும், அவரது பெண் குழந்தைகள் இருவரும் கடந்த 12ம் திகதியன்று வீட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடந்தனர். லேப் டெக்னீசியான...

23 April 2013

ரகசியமாக அத்துமீறி நுழைந்த சீன இராணுவம் .,.,

இந்திய எல்லைக்குள் சீன இராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அருணாசலபிரதேச மாநிலத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீன இராணுவம் அடிக்கடி இந்திய எல்லைகளில் ஊடுருவி வருகிறது. கடந்த வாரம் சீன மக்கள், விடுதலைப் படையைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் லடாக் பகுதியில் ஊடுருவிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. வடக்கு லடாக் பகுதிக்குள் நுழைந்த இராணுவ வீரர்கள், இந்திய எல்லைக்குள் சுமார் 6 மைல்(10 கிலோ மீட்டர்) தூரத்துக்கு வந்துள்ளனர். மலைப் பாங்கான...

20 April 2013

ஆறு குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்,.

,. கடந்த நான்கு மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக தைவான் அரசு 6 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பளித்து அதனை நிறைவேற்றியுள்ளது.கடந்த 2010ஆம் ஆண்டில், தைவானின் நீதித்துறை அமைச்சராக செங் யன்க்பூ பதவியேற்றார். அதன் பின்னர் நான்கு முறை மரண தண்டனைகள் மொத்தமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மரண தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளிகளை சுட்டுக் கொல்வது தைவானில் வழக்கமாகும். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தைவானின் நான்கு நகரங்களின் சிறையில் இருந்த 6 குற்றவாளிகளுக்கு...

குண்டுவெடிப்புடன் தொடர்புடைய குற்றவாளி ?

  பாஸ்டன் நகரில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திலிருந்து, 10 கி.மீ.,தூரத்தில் உள்ளது வாட்டர்டவுன் பகுதி. இங்குள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப மையத்தில் நேற்று முன்தினம் இரவு பொலீஸாருக்கும், பாஸ்டன் நகரில் குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படு்ம் குற்றவாளிகளுக்கும் பொலீஸுக்குமிடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு பொலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார்.அந்த வழியாக சென்ற காரை மறித்து தப்பி சென்ற இரண்டு தீவிரவாதிகளையும் பொலீஸார் துரத்தி சென்றனர். இதில்...

19 April 2013

பெண்ணை தாக்கிய பொலிஸ் அதிகாரியின் வேலை

 டெல்லி காந்தி நகரில் 5 வயது சிறுமி பக்கத்து வீட்டில் வசித்த நபரால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவருக்கு டெல்லி தயான்சந்த் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்....

வழக்கிற்கு முதன் முறையாக சிறைதண்டனை,.,

நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் முதல் முறையாக தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் 2 பேருக்கு 1 ஆண்டு மற்றும் 1 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் ஏராளமான நில அபகரிப்பு வழக்குகள் புற்றீசல் போல் பெருக தொடங்கின. பொலிசாரும் வழக்குப் பதிவு செய்து பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை மீட்டனர். பல வழக்குகளில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதே போன்ற ஒரு வழக்குதான் தர்மபுரி...

செல்வாக்கு படைத்தவர் பட்டியலில் நடிகர் அமீர்

 உலகின் செல்வாக்கு படைத்தோரின் 100 பேர் கொண்ட பட்டியலில் நமது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நடிகர் அமீர் கான் மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா போன்றோர் இடம் பெற்றுள்ளனர். நியூயார்க்கில் இருந்து வெளிவரும் ‘டைம்’ இதழ் ஆண்டுதோறும் அரசியல், கலை, சமூகம் உள்ளிட்ட துறைகளில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மத்திய நிதியமைச்சரும் தமிழக அரசியல் தலைவர்களுள்...

நடிகையை கற்பழித்த இந்திய மாணவர்:10ஆண்டுகள் ??

பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவரை கற்பழித்ததற்காக 25 வயது இந்திய மாணவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.பிரிட்டனில் படித்து வருகின்ற இந்தியாவை சேர்ந்த சோபி ஜான்(25) என்பவர் லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பகுதி நேர போர்ட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர்...

17 April 2013

இந்தியா முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின்??

கொலை தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கொஞ்சம்கூட தொடர்பு காணப்படவில்லை என ரஷ்யாவின் முன்னணி ஏடு தெரிவித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலையின் பின்னணியில் சில உத்தரவுகளை ரஷ்யா நாட்டு உளவுத்துறை SVR பிறப்பித்தது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.ரஷ்யா நாட்டின் பிரபல ஏடு Moskovskij Komsomolets கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கட்டுரையில் இந்த விபரம் கீழ்வரும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Индийский бывшего премьер-министра Раджива Ганди,...

14 April 2013

ராஜாங்கச் செயலாளர் தமிழர்களுக்கு புத்தண்டு வாழ்த்து !

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி அவர்கள் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டானது ஒவ்வொரு வருடமும் வரும்வேளை பெரும் எதிர்ப்பார்ப்புடன் அது மலர்கிறது என்று குறிப்பிட்டுள்ள திரு ஜோன் கெரி அவர்கள், அமெரிக்க அதிபர் ஓபாமாவின் வாழ்த்துக்களையே தான் அவரது சார்பாகத் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். இலங்கையில் சுபீட்சமும் அமைதியும் உருவாகவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள ஜோன் கெரி அவர்கள், இலங்கையில் விரைவில் அமைதி திரும்பவேண்டும்...

சிறையை தகர்த்து தப்பி ஓடிய கைதி:

பிரான்சில் வெடிகுண்டால் சிறையை தகர்த்து தப்பிய ரேடோன் பெய்ட் என்ற கைதி பாதுகாப்பாக வார்டன்களையும் பிணை கைதியாக பிடித்து சென்றுள்ளார்.வடக்கு பிரான்ஸ் பகுதியை சேர்ந்த இவர் கார்களை கொள்ளையடித்து விற்று வந்துள்ளார். எனவே அவரை பொலிசார் கைது செய்து சி கியூடின் நகரில் உள்ள சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று அவர் சிறையை குண்டு வைத்து தகர்த்தியதில் சிறையில் இருந்த ஐந்து கதவுகள் நொறுங்கின. பின்னர், அவன் அங்கிருந்து தப்பி செல்லும் பொழுது...

அமெரிக்காவிற்கு உதவுவோம்: பிலிப்பைன்ஸ்

வடகொரியா சமீபத்தில் இரு அணுகுண்டு சோதனைகளை நடத்தி உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய நிலையில் தற்பொழுது தென்கொரியா மீது போர் தொடுப்போம் என்றும் மிரட்டல் விடுத்து வருவதால் அமெரிக்கா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.இச்சம்பவங்களைத் தொடர்ந்து வடகொரியா, அமெரிக்காவிடையே போர் மூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வடகொரியா மீது தாக்குதல் நடத்த முன்னாள் அமெரிக்காவின் காலனி நாடான பிலிப்பைன்ஸ் முன் வந்துள்ளது. இதுகுறித்து பிலிப்பைன்ஸ்...

13 April 2013

மரண தண்டனையை இரத்துச் செய்யுங்கள்: ??

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் புல்லர் வழக்கில் அவருக்கு மரண தண்டனை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது தனக்கு பயத்தையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது என்றார். உலக நாடுகளில் மரண தண்டனைக்கு தடை விதித்துள்ள நிலையில், அகிம்சாவாதியான காந்தியடிகள் பிறந்த இந்தியாவில் தடை விதிக்காதது வேதனையளிக்கிறது என்ற அற்புதம்மாள், தமிழகத்திலேயாவது மரண தண்டனையை...

12 April 2013

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்

எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும்...

கங்கதேவி பள்ளி - முன்மாதிரி கிராமம்

ஆந்திர மாநில தலைநகர் ஹைதரா பாத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கங்கதேவி பள்ளி என்னும் பெயர் கொண்டக் கிராமம். இந்தக் கிராமத்தில் 1,300 பேர்தான் வசிக்கின்றனர். அனை வரும் கல்வியறிவு பெற்றவர்கள். தெருவின் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை, விஞ்ஞானபூர்வமாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வசதி, 24 மணி நேர மின் வசதி, கான்கிரீட் சாலைகள், சாலையோர மரங்கள் என அதிசய கிராமமாக திகழ்கிறது. இந்தக் கிராமத்தில் ஒரு குடும்பத்தில்கூட இரண்டு குழந்தைகளுக்கு...

ஆட்சி மாற்றம் தேவையில்லை:

பாஹாங் நகர சீரமைப்பு நிலையத்தைத் திறந்துவைத் துப் பேசிய அவர், “அற்பத் தனமாக ‘மாற்றம்’ என்ற ஒரு சொல்லைக் கூறிக்கொண்டு சிலர் திரிந்து வருவதை அறிந்திருக்கிறேன். ஆனால் உண்மையான மாற்றத்தை அவர்களால் கொண்டுவர முடியுமா? ஒரு கப்பலில் மூன்று மாலுமிகள் இருக்கும்போது, எப்படி அவர்களால் இதைச் சாத்தியமாக்க முடியும்? என்ன நடக்கும் என்று அவர்களால் யூகிக்க முடியுமா? கப்பல் மூழ்கிவிடும்,” என்று கூறினார். மாற்றத்தைக் கொண்டுவரும் திட்டங் களின் மூலம், தேசிய முன்னணி...

11 April 2013

மீனவர்கள்: இலங்கை சிறையிலிருந்து விடுதலை,,,,

கடலில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் தாக்குதல் நடத்திவரும் சம்பவம் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றது. பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும், அதனை கண்டுகொள்ளாத இலங்கை கடற்படையினர் அவ்வப்போது மீனவர்களை கைது செய்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி ராமேசுவரம் மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை...

கடும் புயல் காரணமாக மேகாலாயவில் ??

மேகாலயா மாநிலத்தின் மேற்கு காசி மலைகாற்றின் வேகத்தில் மரங்கள் அடியோடு சாய்ந்தன. தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரக் கம்பங்கள் விழுந்ததில் பல இடங்களில் தொடர்புகள் அறுந்தன. இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் இறந்துள்ளதாகவும், 50-ற்க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். 50-ற்க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ப் பகுதியில் வீசிய புயல் காற்றாலும், பெரும் மழையாலும், 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில்...

இரும்புப் பெண்மணி ஜெயலலிதா: அமெரிக்கா பாராட்டு

ஜெயலலிதாவை இரும்பு பெண்மணி என்று அமெரிக்க தூதரகம் பாராட்டியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள், அந்த நாட்டின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து உடனுக்குடன் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதை நடைமுறையாக கொண்டுள்ளன. தூதரகங்களுக்கும் வோஷிங்டனில் உள்ள அமெரிக்க தலைமையகத்துக்கும் இடையே மிக, மிக இரகசியமாக நடந்து வந்த இந்த தகவல் பரிமாற்றத்தை ``விக்கிலீக்ஸ்'' என்ற இணையத்தளம் அம்பலப்படுத்தியது. ஒவ்வொரு...

வசந்தகாலம் தொடங்கியும் சுவிட்சர்லாந்தில் ??

சுவிட்சர்லாந்தில் வசந்தகாலம் கடந்த மார்ச் 21ம் திகதி அளவில் தொடங்கிவிட்ட பொழுதும் உண்மையில் இன்னும் பனிக்காலமே தொடர்கிறது.கடந்த மார்ச் 20ம் திகதி முதல் மேற்கிலிருந்து வருகின்ற உஷ்ணக் காற்று தெற்கு நோக்கி வீசுவதால் மலைப்பகுதியின் பனி உருகி குளிர்ச்சியாக உள்ளது. இதனால் வடகிழக்கில் இருந்து வீசும் கடும் வாடைக் காற்று எங்கும் குளிரைப் பரப்பி வருகின்றது என்று மீட்டியோ சுவிஸ் எனப்படும் தட்பவெப்ப ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த ஆய்வு மையம்,...

செல்ல வேண்டாம்: அமெரிக்கா வெளியுறவுத்துறை,,,

பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் அவசர தேவையில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட பயண அறிவுரையை திரும்பப் பெற்ற அமெரிக்கா, ”சமீபத்தில் கிடைத்துள்ள தகவல்களின் படி, பாகிஸ்தானில் வசிக்கும் அல்லது சுற்றுலா செல்லும் அமெரிக்கர்கள் மற்றும் வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் அங்குள்ள பல்வேறு நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள், சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்”...

10 April 2013

சிசுவின் சடலம் புத்தூர் மேற்கில் மீட்பு???

 புத்தூர் மேற்கில் உயிரிழந்த 7 மாதக் குழந்தையின் சடலம் உரிய விசாரணைகளுக்கு உட்படுத்தப்ப டாமல் மயானத்தில் புதைக் கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அச்சுவேலிப் பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை நடத்தி வருகின்றனர். புத்தூர் மேற்கைச் சேர்ந்த அன்ரன் ஜெனித்தாஸ் தனுஷன் (வயது 07 மாதம்) என்ற குழந்தையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. “குறித்த குழந்தையின் தாய் கணவரைப் பிரிந்து மிக வறுமையான நிலையில் வாழ்ந்து வருகின்றார். இதன் போது குழந்தைக்கு...

09 April 2013

ஆண் குழந்தையின் சடலத்தை நாய் கவ்விச் சென்றதால் பரபரப்பு??

தென்காசியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறந்து சில நாட்களேயான ஆண் குழந்தையின் சடலத்தை நாய் கவ்விச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தென்காசி அருகே நெடுவயல் பகுதியை சேர்ந்த மாடசாமி, நாகம்மாள் ஆகியொருக்கு கடந்த 2ம் திகதி இடைகால் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் ஆண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்தவுடன் மூச்சுதிணறல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக தென்காசி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை...

காந்தி வீட்டில் அமெரிக்க உளவாளி: அம்பலப்படுத்தியது

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவரது வீட்டில், அமெரிக்க உளவாளி பதுங்கி இருந்ததாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 1975 மற்றும் 1977 காலப்பகுதியில் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போதே இந்திரா காந்தி வீட்டில் அமெரிக்க உளவாளி பதுங்கியிருந்ததாக, பிரதமர் இல்ல தகவல்கள் இதை உறுதி செய்வதாகவும் சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1975ம் ஆண்டு ஜூன் 26ம் திகதி இந்திரா காந்தி அவசர நிலை கொண்டு வந்ததன்...

08 April 2013

7 தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் ,,,,

ஈராக் நாட்டில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொலை செய்த 7 தீவிரவாதிகளுக்கு மக்கள் முன்னிலையில் நேற்று தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.தீவிரவாத குற்றவாளிகளை முறையான விசாரணையில்லாமல் ஈராக் அரசு தூக்கிலிட்டு வருவதை உலக நாடுகள் கண்டித்து வருகின்ற வேளையில், தற்போது 7 பேர் தூக்கிலிடப்பட்ட சம்பவம் கடுமையான மனித உரிமை மீறலாகும் என்று ஈராக்கில் உள்ள ஐ.நா. மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி கூறியுள்ளார். கடந்த 2003ம்...

07 April 2013

அட இதுக்குமா ? மாத்தளை எலும்புக்கூடுக்கும்-?

  ஜனாதிபதி ஆணைக்குழு ! நாட்டில் ஒரு பாரிய குற்றச்செயல் நடந்தால் அதனை சர்வதேச நாடுகள் கண்டிக்க முன்னர் அதனை அப்படியே மூடி மறைக்க, இந்தியா போன்ற நாடுகளில் விசாரணைக் கமிஷன் என்று ஒன்றை வைப்பார்கள். இந்த விசாரணைக் கமிஷன் அப்படியே பல ஆண்டுகளைக் கடத்தும். பின்னர் இத்துப்போன ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும். பின்னர் அப் பிரச்சனை அப்படியே மூடிமறைக்கப்படும். இது தான் பல நாடுகளில் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மாத்தளையில் சுமர் 150 மனித...

கைப்பேசிகளை சார்ஜ் செய்வதற்கான ,,,

இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றினால் மின்சாரம் துண்டிக்கப்டும் சந்தர்ப்பங்களில் ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்வதற்கென SOS Charger அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எளிமையான முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியதாகக் காணப்படும் இந்த நவீன சாதனமானது 1500mAh மின்னோட்டத்தினை வெளிவிடுவதோடு 3 தொடக்கம் 5 நிமிடங்கள் வரை சார்ஜ் செய்த பின்னர் 5 தொடக்கம் 12 நிமிடங்கள் வரை அழைப்புக்களை தொடர்ச்சியாக ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு மின்னை உற்பத்தி செய்கின்றது. மேலும்...

06 April 2013

இலங்கை செல்லும் இந்தியக் குழு

இந்திய எம்.பி.க்கள் குழு வருகிற 8ம் திகதி இந்திய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனம் சார்பில் இலங்கை புறப்பட்டு செல்கிறது. அக்குழுவில் சுகதாராஸ் (திரிணாமுல் காங்கிரஸ்), சந்தீப்தீக்ஷிந் (காங்கிரஸ்), அனுராக்தாகூர் (பா.ஜனதா), தனஞ்சய்சிங் (பகுஜன் சமாஜ் கட்சி), கவுடுயாஸ்கி (காங்கிரஸ்), பிரகாஷ் ஜவாதகார் (பா.ஜனதா) ஆகிய 6 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர், தமிழக எம்.பி.க்கள் யாரும் இடம்பெறவில்லை. இவர்களுடன் இந்திய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனத்தை சேர்ந்த...

மருமகனின் மோசடிகள்: அம்பலப்படுத்திய அதிகாரி

44வது முறையாக இடமாற்றம்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலமோசடியை அம்பலப்படுத்தி அரசியல் புயலை உருவாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி 44 வது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஹரியானா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கேம்கா என்பவரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, கடந்த வருடம் ஹரியானா மாநிலத்தில் ஏராளமான விளைநிலத்தை அடிமாட்டுக்கு வளைத்துப் போட்டு அதை டிஎல்ப் நிறுவனத்துக்கு...

பிரதமர் ஆவதை வரவேற்கிறேன்: மன்மோகன்,,,,

  பிரதமர் பதவியில் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியும் வெகுகாலம் தொடர்ந்து பதவியில் இருக்க முடியாது. மாற்றங்கள் கண்டிப்பாக வரவேண்டும், அதனைத் தொடர்ந்த தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து வெளியிட்டார். ஆனால் இதை காங்கிரஸ் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி நிராகரித்திருப்பதை தொடர்ந்து  இந்த  பிரச்சினை மைய விவாதப்பொருளாகி...

05 April 2013

சகோதரிகள் 4 பேர் மீது மர்ம நபர்கள் அசிட் வீச்சு

உத்தர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சகோதரிகள் மீது  2 மர்ம நபர்கள் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளமை அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாம்லியில் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரிகளில் 3 பேர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியைகளாக பணியாற்றுகின்றனர். நேற்று முன்தினம் மாலை இவர்கள் பணி முடிந்து வீட்டுக்கு ஒன்றாக நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் வேலை செய்யாத மற்றொரு சகோதரியும்...

விபத்துக்குள்ளாக்கிய காஷ்மீர் பள்ளத்தாக்கு: 3 பேர் ?

பள்ளி முடிந்து வீடுகளுக்கு செல்லும் மாணவர்கள் பயணம் செய்த பேருந்து பெரும் விபத்துக்குள்ளான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக்கில் இருந்து தியால்காமுக்கு இன்று தனியார் பள்ளி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பள்ளி முடிந்து வீடுகளுக்கு செல்லும் மாணவர்கள் அதில் பயணம் செய்தனர். அந்த பேருந்து, தியால்காம் மலைப்பாதையில் உள்ள வளைவில் திரும்பியபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...