This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 January 2013

தர்ஹாவிற்கு சென்று திரும்பிய போது நேர்ந்த விபத்து

குஜராத்தின் பட்டன் பகுதியில் நேற்றிரவு பக்தர்களை ஏற்றி வந்த வான், அரசு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் இவ்விபத்தில் காயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வானில் வந்த அனைவரும் அருகில் இருந்த தர்ஹாவிற்கு சென்று வழிபாடு செய்து விட்டு வீடு திரும்பிய போது இவ்விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ...

கார் ஓட்டிய பெண் கனடிய கவுன்சிலருக்கு??

கனடாவில் குடிபோதையில் கார் ஓட்டிய பெண் கவுன்சிலருக்கு $1,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு அவருடைய டிரைவிங் லைசென்ஸ் ஒரு வருடத்திற்கு ரத்து செய்வதாக நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. கனடாவின் டொரண்டோ நகரில் உள்ள பெண் கவுன்சிலர் Ana Bailao குடிபோதையில் கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்டார். திங்கட்கிழமை காலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்ப்பட்ட கவுன்சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் குடிபோதையில் கார் ஓட்டியதை அவர் ஒப்புக்கொண்டதால்,...

30 January 2013

முடியை ரசித்து ருசித்து சாப்பிடும் வினோத பெண்

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தினமும் பூனை முடியை ரசித்து ருசித்து சாப்பிடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரை சேர்ந்தவர் லிசா(வயது 43). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்ல பிராணியான பூனையை கொஞ்சி கொண்டிருந்த போது, அதன் முடியை தின்றாராம். ருசியாக இருந்ததால், தினமும் சாப்பிட தொடங்கியுள்ளார், பிற்காலத்தில் அதற்கு அடிமையாக மாறிவிட்டாராம். ஆயிரக்கணக்கான பூனை முடி உருண்டைகளை வாயில் வைத்து மெதுவாக...

29 January 2013

நபர் ஒருவரின் கையை துண்டிக்கும் படம்

ஈரானில் போதை மருந்து கடத்தல், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு மக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஈரானில் முஸ்லிம் மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. போதை மருந்து கடத்தல், கொலை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. கள்ள உறவு போன்ற குற்றங்களுக்கு கல்லால் அடித்தல், பிரம்பு அடி போன்றவையும், திருட்டு போன்ற குற்றங்களுக்கு கை மற்றும் விரல்கள் துண்டிக்கப்படுகின்றன. இந்நிலையில் விரல் மற்றும் கையை துண்டிக்கும்...

28 January 2013

கோடிக்கணக்கில் கமலுக்கு நஷ்டம்: லண்டனில்லாபம்

விஸ்வரூபம் படம் திரையிடப்பட முடியாமல் போனதால் நடிகர் கமலஹாசன், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் இந்த படம் முடக்கம் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் ரூ.30 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தடை நீடித்தால் இழப்பு தொகை மேலும் அதிகரிக்கும் என்று மும்பையைச் சேர்ந்த மல்டி மீடியா நிறுவன வினியோகஸ்தர் ராஜேஸ் தடானி தெரிவித்துள்ளார். விஸ்வரூபத்தால் இழப்பு அதிகரித்துள்ளதாக கர்நாடக வினியோகஸ்தர்...

வீடியோ கேம்! குடிகாரன் போல ஆகிவிட்டான்தாய்

சாப்பாடு, தூக்கத்தைக்கூட மறந்துவிட்டு தினமும் 16 மணி நேரம் வீடியோ கேமில் மூழ்கிக் கிடந்து அதற்கு அடிமையான மகன் பற்றி அவுஸ்திரேலிய தாய் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலவச ஒன்லைன் வீடியோ கேம்களில் மிகவும் பிரபலமானது ‘ரன் எஸ்கேப்’. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரை சேர்ந்த ஜெகக்ஸ் கேம்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் வடிவமைத்த கேம். கேமில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கும். அதோடு நாமும் ஒரு கேரக்டராக இறங்கி விளையாட வேண்டும். எப்படி விளையாடுவது,...

24 January 2013

பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிபதி மீது புகார்

உத்திர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை மாவட்ட நீதிபதி ஒருவர் அவரது அலுவலக அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 21 வயது இளம்பெண் ஒருவரும் அந்த நீதிபதி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார். இப்பெண்கள் இருவரும், நீதிபதி இவ்வழக்கில் இருந்து தப்பி விடாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் ...

கற்பழித்து கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை

  பீகார் மாநிலம், ராக்ஹோபூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன், 6 வயது சிறுமியொருவரை கற்பழித்துக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தமைக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இண்டல் குமார் சர்மா என்கிற இந்திரா தாக்கூர் (வயது 30). கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் திகதி, தனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டின் 6 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அங்கு அவளை கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தான். இந்த...

குளிரில் சிக்கிய 150 பேர் விமானப் படையினரால் மீட்பு

  காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான பனி பெய்து வருகிறது. உறை நிலையான பூஜ்ஜியம் டிகிரியையும் தாண்டி, சில மாவட்டங்களில் நேற்றைய தட்பவெப்ப நிலை மைனஸ் 6 டிகிரி ஆக நீடித்தது. ரத்த ஓட்டத்தை உறைய வைக்கக்கூடிய கடும் குளிரில் ஏராளமான மக்கள் சிக்கித் தவித்தனர். இந்திய விமானப்படையின் கமாண்டர் பி.பாட்டன்கே மற்றும் ஜம்மு வட்டார கமாண்டர் பிரதீப் குப்தா மேற்பார்வையில், பாதிக்கப்பட்ட மக்கள் விமானம் மூலமாக அப்பகுதியில்...

விஸ்வரூபம் படத்திற்கு தடை: கமல் மனு தாக்கல்

விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவது தொடர்பாக பல்வேறு பிரச்சனைகளை கமலஷாசன் சந்தித்து வருகின்றார். விருதுநகர் மாவட்டத்தில் விஸ்வரூபம் படத்தை 15 நாட்களுக்கு திரையிட அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கக்கோரி இஸ்லாமிய அமைப்பினர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு அளித்துள்ளனர். படத்தை திரையிடுவதா இல்லையாக என்பது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவு செய்யலாம் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி விருதுநகர்...

சிறுவர்களை நரகபலி இட்ட மாந்திரீக பெண்

சென்னை மாவட்டம் நந்தம்பாக்கம் பட்ரோடு துளசிங்கபுரத்தில் உள்ள கூத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன், கார் டிரைவராக உள்ளார். இவரது மகன் பாலாஜி (வயது 8). தனசேகரனின் அக்காள் மாலதி மகன் லத்தீப் (8). கடந்த 20ம்திகதி வீட்டு முன்பு விளையாடிய சிறுவர்கள் பாலாஜி, லத்தீப் இருவரும் மாயமானார்கள். அவர்கள் இருவரும் துளசிங்கபுரம் - நந்தம்பாக்கம் பொலிஸ் நிலையம் இடையே உள்ள புள்ளுக்கோவில் அருகே பாழடைந்த கிணற்றில் பிணமாக மிதந்தனர். பொலிசார் 2 சிறுவர்களின்...

மருத்துவமனைகள் மீது சி.பி.ஐ மீது அதிரடி ரெய்டு

பல்மருத்துவ கல்லூரியில் முதுநிலை படிப்பு துவங்க லஞ்சம் பெற்றது தொடர்பாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 8 பல் மருத்துவ கல்லூரிகளில் சி.பி.ஐ., அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு பல்மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு தொடங்குவதற்கு அனுமதி கேட்டு டில்லியில் உள்ள இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்....

கண் பார்வையை பாதிக்கும் ஆஸ்பிரின் மாத்திரை

ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டால் கண் பார்வை பாதிக்கும். இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களுக்கு உலகம் முழுவதும் ஆஸ்பிரின் மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் வயதான காலத்தில் கண் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கண் பார்வை பாதிக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வயதான காலத்தில் ஏற்படும் சில நோய்களுக்கு தொடர்ந்து ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடுவதே...

23 January 2013

பெருமையல்ல; அவமானம்தான். மேனகா காந்தி

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தமிழகத்தின் அவமானமாக திகழ்கிறது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரான மேனகா காந்தி. சென்னை வந்த அவர் அங்கு நாய்கள் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான காளைகள் காயமடைகின்றன. கொடுமைப்படுத்தப்படுகின்றன. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காளைகளை அடக்கும்போது காயமடைகின்றனர். சிலர் உயிரிழக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போட்டிகள்...

22 January 2013

ஒரே நாளில் தங்கம் ரூ.328 அதிகரிப்பு

இறக்குமதி வரி உயர்வை தொடர்ந்து தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.328 அதிகரித்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சிறிது ஏறி இறங்கி வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 904 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.328 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 232 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2904-க்கு விற்கிறது. விலை உயர்வுக்கு தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தங்கம் மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதிக்கு இதுவரை...

கணவன் கண் முன்னே மனைவியைக் கற்பழித்த 6 பேர் கைது

ஒடிஷா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில், மருத்துவமனையில் வைத்து கணவருக்கு முன்னால் மனைவியைக் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த ஒருவர், மயூர்பஞ்ச் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை சந்தித்து நலம் விசாரிக்க அவரது தங்கை, தனது கணவருடன் நேற்றுமுன் தினம் மாலை மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது அண்ணனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அவர், வீட்டுக்கு...

பெண் பொலிஸை மானபங்கம் படுத்திய நபர் கைது

தர்மபுரியில், ஊர்காவல் படை பெண் பொலிசை மானபங்கப்படுத்திய வாலிபரை பொலிசார் கைது செய்தனர். தர்மபுரியை அடுத்த பங்குநத்தத்தை சேர்ந்த சுப்பிரமணி மகள் திலகவதி, 27. இவர் தர்மபுரி ஊர்காவல் படை பெண் பொலிசாக பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம், தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பிரசவ வார்டுக்குள் வாலிபர் ஒருவர் செல்ல முயன்றார். அவரிடம் திலகவதி பிரசவ வார்டுக்குள் ஆண்களுக்கு அனுமதியில்லை...

பதவி கிடைத்ததை நினைத்து மிகவும் வருத்தப்படுகின்றேன்

எல்லோரும் எனக்குப் பதவி கிடைத்ததற்காகப் பாராட்டி மகிழ்கிறீர்கள். ஆனால் எனது தாயார் அதை நினைத்து எனது அருகே அமர்ந்து அழுதார். பதவியானது விஷம் என்பது அவருக்குத் தெரியும் என்று ராகுல் காந்தி பேசியபோது காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் உணர்ச்சிவசப்பட்டனர். ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்தின் 2வது நாள் இறுதியில் ராகுல் காந்தியைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தனர். நேற்று நடந்த 3வது நாள் கூட்டத்தில் அவர் துணைத் தலைவராக...

21 January 2013

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கடைத்தெரு ஒன்றில் ஒரு நபரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்யும் காட்சிகள் கடந்த டிசம்பர் மாதம் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இந்த காட்சியைக் கண்டு திகைப்படைந்தனர். இதே காட்சியை செய்தியாக அந்நாட்டின் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது. இந்த வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்ய ஈரான் அரசு உத்தரவிட்டது. அவர்கள் மீது விரைவு விசாரணை நடத்தப்பட்டது இச்சம்பவத்தில் ஈடுபட்ட...

கற்பழிப்பு காட்சியை தொலைபேசி மூலம் பரப்பிய 5 பேர் கைது

அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை கற்பழித்த காட்சியை கைத்தொலைபேசி மூலம் படம் பிடித்து மிரட்டிய 5 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள பர்வாலா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த நவம்பர் மாதம், வயல்வெளி வழியாக நடந்து வந்துக்கொண்டிருந்த என்னை, பிரதீப், பாரு, கோலியா ஆகியோர் வழிமறித்து கத்தி முனையில் கற்பழித்தனர்....

நடைபெற தயாராகிறது இந்தியா-இலங்கை கூட்டு கூட்டம்

இந்தியா-இலங்கை நாடுகளிடையேயான கூட்டு கூட்டம் வரும் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் புதுடில்லியில் நடைப‌ெற உள்ளது. இந்தியா-இலங்‌கை இடையேயான 8-வது கூட்டு கூட்டத்தில் இதில் கலந்து கொள்வதற்காக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்‌சர் ஜி.எல்.பெரிஸ் தலை‌மையிலான குழு நாளை திங்கட்கிழமை இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். அவரது வருகையின் போது இரு நாடுகளிடையோன வர்த்தகம், மீனவர் பிரச்னை இலங்கையில் செயல்பட்டு வரும் இந்திய ரயில்வே திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட...

மூணாறை சுற்றி வரும் யானைகள்

மூணாறிலும், சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளிலும் சில மாதங்களாக புலிகள் நடமாட்டம் உள்ளதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் தேவிகுளம்,சொக்கநாடு,நயமக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஏழு, கால்நடைகள் புலிகளிடம் சிக்கி பலியாகியுள்ளன. தேவிகுளம் பகுதியில், வீட்டில் இருந்த நாயை, இரவில் புலி தூக்கிச் சென்றதை, இப்பகுதியினர் நேரில் கண்டனர். சில வாரங்களாக, புலி நடமாட்டம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. இந்நிலையில், மூணாறில் வேலை முடிந்து...

20 January 2013

உயர் நீதிமன்றத்தில் கண்ணீர் விட்ட மனைவி

கணவனுக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்க, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தை அனுகியுள்ளார் பாதிக்கப்பட்டவரின் மனைவி. அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து, உடனடியாக மருத்துவக் குழு கூடி, விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டார். பெரம்பலூர் மாவட்டம், துரைமங்கலத்தைச் சேர்ந்தவர், அன்பரசி. இவரது கணவர், சிவப்பிரகாசம். இவரது கல்லீரல் செயல் இழக்கும் நிலையில் இருந்தது. எனவே,...

நான்கு லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவாகிய தெருநாய்!

பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நபரொருவர் தனது வீட்டில் கைப்பையில் வைத்திருந்த 4 லட்சம் ரூபாய் பணத்தினை எடுத்துக் கொண்டு தெருநாய் ஓட்டம்பிடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசிப்பவர் நாக்செட் மியான். இவரது மகன் அரபு நாட்டில் வேலை செய்து வருகின்றார். தாய்நாடு சென்றதும், சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்ற ஆசையில், மாதாமாதம் தந்தைக்கு பணம் அனுப்பி வந்தார். மகனுக்கு நல்ல இடத்தில்...

தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு தெரியவில்லை!

ஆனால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார் அவரது இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் சமகால நிலவரவம் பற்றி சம்பந்தன் உரையாற்றினார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தாவது:- இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுவது தொடர்பான தற்போதைய இழுபறி நிலை தொடரமுடியாது. விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என்பது தான் தமிழ்த்...

மீது பொங்கிய பிரதமர், சிங்கள ராணுவம் மீது ஏன் பொங்கவில்லை.

தஞ்சை பொங்கல் விழா​வில் நடராஜன் பொங்கி எழுவார்... கோப வார்த் தைகளால் ஜெயலலி​தாவைக் கரும்பாகப் பிழிந்​தெடுப்​பார் என்று பலரும் எதிர்​பார்த்தனர். ஆனால் அவரோ, 'புரட்சித் தலைவி’ என உச்சரித்து ஆச்சர்யத்தில் அலற வைத்தார். தன்னைக் கைது செய்தது யார் என்று கண்டுபிடிக்கப்(!) போவதாக​வும் சொன்னார்! தன் தந்தை பெயரில் நடத்தி வரும் மருதப்பா அறக்கட்டளை சார்பில், பொங்கல் விழாவை தமிழர் கலை இலக்கிய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார் ம.நடராஜன். இந்த விழா அரசியல்...

19 January 2013

பிரதமரின் ஊழல் வழக்கை விசாரித்த அதிகாரி திடீரென தூக்கில்

பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் தொடர்புடைய ஊழல் விவகாரத்தை விசாரித்துவந்த போலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இஸ்லாமாபாத்தில், அவர் தங்கியிருந்த அரச விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் போலிஸ் அதிகாரி கம்ரான் ஃபய்சலின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டில் நீர் மற்றும் சக்தி வளத்துறை அமைச்சராக இருந்தபோது தற்போதைய பிரதமர் அஷ்ரப் பெருமளவு இலஞ்சம் வாங்கியுள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அவரைக் கைதுசெய்ய வேண்டுமென்று...

18 January 2013

பாலியல் தொந்தரவு கொடுத்த 13 வயது ஒண்டோரியோ பள்ளி மாணவன்

கனடாவில் ஒண்டோரியோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், இளம்பெண் ஒருவரை பாலியல் தொல்லை கொடுத்ததாக 13 வயது மாணவன் ஒருவன் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Peterborough Lakefield Community காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று நமது செய்தியாளருக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஒண்டோரியோ பள்ளி ஒன்றில் மாலை 3.10 மணிக்கு பெண் அலுவலர் ஒருவர் தனியாக வகுப்பறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, பின்பக்கமாக வந்த 13 வயது மாணவன்...

பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக மாணவி .

        கனடா: ஒண்டோரியோவில் உள்ள Mother Teresa Catholic Secondary School என்ற பள்ளியில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக ஒரு மாணவி உள்பட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒண்டோரியோவில் உள்ள Mother Teresa Catholic Secondary School என்ற பள்ளியில் ஒரு மாணவியும், மூன்று மாணவர்களும், 357 Magnum handgun உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த...

புதையல் தேடிய ஆஸ்திரேலிய நபருக்கு 5 கிலோ தங்கக்கட்டி கிடைத்த

ஆஸ்திரேலியாவில் மெட்டல் டிடெக்டரின் துணையோடு புதையல் தேடியலைந்த ஒருவருக்கு 5 கிலோ தங்கக் கட்டி கிடைத்துள்ளது. சுமார் ஐந்தரை கிலோ எடையுள்ள இந்தத் தங்கக் கட்டியின் விலை 3 லட்சம் டாலர்களுக்கு மேல் இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுவரை பெயர் வெளியிடப்படாத ஒரு நபர், விக்டோரியா மாகாணத்தில் பாலார்ட் என்ற நகருக்கருகே கையில் எடுத்துப் போகக் கூடிய மெட்டல் டிடெக்டர் மூலம் நடத்திய தேடுதலின் போது தரைக்குக் கீழே இரண்டடி ஆழத்தில் ஒரு உலோகக் கட்டி இருப்பதை...

17 January 2013

விலைப்பட்டியல். கட்டாயமாக்குகிறது மத்திய அரசு.

டாக்டர் ஃபீஸ் - ரூ.100, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரூ.4,500, ஈ.சி.ஜி. - ரூ.150, ஐ.சி.யு. கேர் (ஒரு நாளுக்கு) - ரூ.2,000 - நீங்கள் நுழையும் ஒரு மருத்துவமனையில் இப்படி ஒரு விலைப் பட்டியல் இருந்தால் எப்படி இருக்கும்? எவ்வளவு செலவாகும் என்பதை மனதுக்குள் ஒரு கணக்குப் போட்டுக்கொண்டு நிம்மதியாக டாக்டரை சந்திக்கலாம். இப்படி ஒரு விதியைக் கட்டாயமாக்கப் போகிறது மத்திய அரசு. மருத்துவமனைகள் ஒழுங்குமுறைச் சட்டம் 2011-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு...

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன் சூப்பர் மார்க்கெட்.

பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்து குடியரசில் உள்ள பல சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மாட்டிறைச்சி பர்கர்களில் குதிரை மாமிசம் கலந்திருப்பது குறித்து உணவுத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பல நிறுவனங்கள் இந்த இரு நாடுகளுக்கும் மாட்டிறைச்சி என்று விற்ற உணவுப் பொருட்களில், குதிரை மற்றும் பன்றி இறைச்சியின் கூறுகள் இருந்ததாக அயர்லாந்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்திருக்கிறார்கள்....

ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவாக திடீரென

மேலாடையின்றி போராடிய உக்ரைன் இளம்பெண்கள்.வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக் கலந்து கொண்டார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது உக்ரைன் நாட்டு பெண்கள் உரிமை இயக்கத்தை சேர்ந்த பெண்கள் திடீரென்று மேலாடைகளை கலைந்து வீசி விட்டு, ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்க கோரி கோஷங்களை முழங்கி போராட்டம் நடத்தினர். ஓரின சேர்க்கைக்கு...

குடியரசுத் தலைவர் ஆட்சி - மத்திய அரசு இன்று ஒப்புதல்!

ஜார்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில மாற்று அரசு அமைக்க எந்த கட்சியும் முன் வராததால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவருக்கு ஜார்கண்ட மாநில ஆளுநர் சையத் அகமது அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதுபற்றி மத்திய அமைச்சரவை இன்று கூடி விவாதிக்க உள்ளது. இந்த கூட்டத்தில் ஆளுநரின் பரிந்துரையை...

ஆஸ்திரேலியர்கள் வரத்து வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது

வாடகை தாய்மார்கள் குறித்த புதிய சட்ட திருத்தத்தை இந்தியா அமல்படுத்தி உள்ளதால் இனி ஆஸ்திரேலியர்களின் வரத்து மிக வெகுவாக குறையும் என தெரிய வந்துள்ளது.வெளிநாட்டில் வாழும் பலர் தங்களால் குழந்தை பெற்று கொள்ள இயலாத பட்சத்தில், விந்து அணுக்களை கொண்டு வந்து வாடகை தாய்மார்கள் உதவியுடன் இந்தியாவில் குழந்தை பெற்று எடுத்து செல்கின்றனர். ஆரம்பத்தில் மிக சிறிய அளவில் நடந்த இந்த தொழில் பின்பு மிக அதிக வருமானம் தரும் தொழிலாக மாறியது. வட இந்தியாவில் வாடகை தாய்...

37 வீர‌ர்களை கு‌தி‌‌த்து பதம்பார்த்தது காளை!

உலக‌ப் புக‌ழ் பெ‌ற்ற மதுரை அல‌ங்காந‌ல்லூ‌ர் ஜ‌ல்‌லி‌க்‌‌க‌ட்டு போ‌ட்டி‌யி‌ல் காளைக‌ள் கு‌த்‌திய‌தி‌ல் 37 பே‌ர் காய‌ம் அடை‌ந்தன‌ர். பல‌த்த காய‌ம் அடை‌ந்த 2 பே‌ர் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மதுரை மாவ‌‌ட்ட‌ம் அவ‌னியாபுர‌த்த‌ி‌ல் கட‌ந்த 14ஆ‌ம் தே‌தி நடைபெ‌ற்ற ஜ‌ல்ல‌ி‌க்க‌ட்டு‌ப் போ‌ட்டி‌யி‌ல் 20 பே‌ர் காய‌ம் அடை‌ந்தன‌ர். ஆனா‌ல் உ‌யி‌ரிழ‌ப்பு எதுவு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை. பாலமே‌‌ட்டி‌ல் நே‌ற்று ந‌ட‌ந்த ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டி‌யி‌ல்...

எம்.ஜி.ஆர். சிலை: இன்று திறப்பு!

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தையொட்டி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலையை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை இன்று திறந்து வைக்கிறார். ÷நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை, வெண்கலத்தால் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 500 கிலோ எடையுடைய இந்தச் சிலையை சென்னை போரூரைச் சேர்ந்த சிற்பி ரவி என்பவர் உருவாக்கியுள்ளார். இத்தகைய கலைநயமிக்க எம்.ஜி.ஆர். சிலைகள் கிருஷ்ணகிரி உள்பட...

16 January 2013

கலாச்சாரத்திற்கு அமெரிக்காவில் புதிய சட்டம், அதிபர் ஒபாமா!

அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டிற்கு கடிவாளம் போட புதிய சட்டத்தினை அதிபர் ஒபாமா கொண்டுவந்தார். அதற்கான சட்டவரைவு அறமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் துப்பாக்கி கலச்சாரம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆங்காங்கே துப்பாக்கிச்சூடும் உயிர்பலியும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இது அ‌ரசு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி நியூடவுணில் உள்ள சாண்டி ஹூக் பள்ளி ஒன்றில்நடந்து துப்பாக்கிச்சூட்டில் 20-ம் மேற்பட்ட குழந்தைகள்...

குடிநீருக்காக பரிதவிக்கும் பொதுமக்கள் தண்ணீர் பஞ்சம்!

ஆத்தூர் பகுதியில், தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக, சேகோ ஆலையில், மரவள்ளி கிழங்கு அரவைக்கு தேக்கி வைத்துள்ள, "பாசான்' படிந்த நீரை, பொதுமக்கள் குடிநீருக்கு பிடித்து செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில், 33 வார்டுகளும், நரசிங்கபுரம் நகராட்சியில், 18 வார்டுகளும் உள்ளன. இங்கு வசிக்கும், 1.20 லட்சம் மக்களுக்கு, மேட்டூர் - ஆத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது....

பரவலாக தொடரும் படுகொலைகள்!

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் தொழில் பரவலாக இடம்பெற்று வருகின்றது. மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்துவதில் கடத்தல் கும்பல்களிடையே போட்டி நிலை நிலவி வருகிறது. இது பல நேரங்களில் வன்முறையில் முடிகிறது. இந்நிலையில், தொலுக்கா பகுதியில் கடத்தல் கும்பல்களிடையே நடந்த மோதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இதேபோல், மெக்சிகோ சிட்டி என்னுமிடத்தில்...

15 January 2013

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளதாக

ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தனது உடமைகளுடன் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றத...

நடனம் பார்த்த சென்னை வாலிபருக்கு கத்தி குத்து

சென்னையைச் சேர்ந்த மதன் என்பவரும் அவரது நண்பர்களும் பொங்கல் கொண்டாட கோவா சென்றனர். கோவாவில் பொங்கல் கொண்டாடி விட்டு நேற்றிரவு கிளப் ஒன்றிற்கு சென்றிருக்கிறார். அங்கு டிஸ்கோ நடனம் பார்த்த போது மதன் நண்பர்களுக்கு வேறொரு தரப்பினருக்குமிடையே மோதல் உண்டானது. இந்த மோதலில் மதனை குறித்த தரப்பினர் கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். இந்த கத்தி குத்தில் மதனுடன் சென்ற நண்பர்கள் இருவர் படுகாயமடைந்ததுடன் அவர்களது பணம் மற்றும் நகையும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த...

மாணவி கற்பழிப்பு வழக்கில் தொடர்புடையவன் சிறுவன் தானா?

புதுடெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 குற்றவாளிகள் சிறையிலும், 18 வயதை அடையாதவன் என்பதால் 6வது குற்றவாளி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டுள்ளான். 6வது குற்றவாளி சிறுவன் தானா? என்பதை உறுதிப்படுத்த, அவன் படித்த ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியர் இன்று இளம் சிறார் குற்றவாளிகளுக்கான நீதிபதியின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளார். இந்நிலையில் படவுன் மாவட்டம்...

இன்று 65வது இந்திய இராணுவ தினக் கொண்டாட்டம்

இந்திய இராணுவ தினத்தை இன்று கொண்டாட இந்திய இராணுவம் தீர்மானித்துள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 15ம் திகதி இந்திய இராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று கொண்டாடப்படும் 65வது இராணுவ தினத்தில் இந்திய இராணுவத்தின் சார்பில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் நினைவாக இந்தியா கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இராணுவ அணிவகுப்புக்கள், இராணுவ சாகசங்கள் ஆகியவற்றுடன் இராணுவத்தின் தொழில்நுட்பங்கள், சாதனைகள் குறித்தும்...